பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பாடகி ஜானகி இனி இசைக் கச்சேரிகளில் பாட மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். தென்னகத்தின் இசைக் குயில் ஜானகி தனது காந்த குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானகி கடந்த 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்தார். அவர் ஸ்ரீபைதிசுவாமி என்பவரிடம் இசை பயின்றார். பின்னர் 3 வயதிலிருந்து அவர் தனது கச்சேரியை தொடங்கினார்.
ஞாயிறு, 29 அக்டோபர், 2017
இனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்! #AmazonKey
கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர், அமேஸான் போன்றவை பெரிய வெற்றிபெற்ற டெக் நிறுவனங்கள்தான். ஆனால், அவர்கள்தான் அதைவிட நிறைய தோல்வியடைந்த புராடக்ட்களையும் தந்திருக்கிறார்கள். கூகுளால் மூடுவிழா நடத்தப்பட்ட புராஜக்ட் மட்டும் 100-ஐ தாண்டும். தங்களது மெயின் புராடக்டுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல புதிய ஐடியாக்களை அவர்கள் கொண்டுவந்து பார்ப்பார்கள். க்ளிக் ஆனால், இன்னொரு ஹிட். இல்லையென்றால், மூடிவிட்டு அடுத்த ஐடியா. முதலீடு செய்ய பணமும், கைவசம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் இருப்பதால் இந்த முயற்சியெல்லாம் அவர்களுக்கு 50 பாலில் 5 ரன் தேவை; கைவசம் 8 விக்கெட் என்பது போலதான். ரிவர்ஸ் ஸ்வீப், உல்ட்டா ஹிட் என அனைத்தையும் முயன்று பார்த்துவிடுவார்கள். அப்படி அமேஸான் அடித்திருக்கும் ஒரு அடிதான் அமேஸான் கீ.
Labels:
புதிய தொழில்நுட்பம்,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




