எமது கலாசார விழுமியம் சேர்ந்த புத்தாண்டாக அமைவதே, சித்திரைப்புத்தாண்டு எனப்படுகின்ற மேட சங்கிராந்தி இயற்கையும் இனிதாய் பூத்துக்காய்த்து கனியும் வசந்தகாலம் என வரையறை கொடுக்கப்பட்ட தமிழ் - சிங்கள புத்தாண்டாக அறுபது வருடச் சுற்றின் 30ஆவது வருடமாக துர்முகி எனும் நாமத்தோடு இப் புத்தாண்டு மலர்கின்றது. 13–-04–-2016 புதன்கிழமை வளர் ஸப்தமித் திதியும் திருவாதிரை நட்சத்திரமும் அதிகண்டயோகம் வணிசகரணம் துலாம் லக்னம் விருட்சிக நவாம்சம் சூரிய கால வோரை செவ்வாய் சூட்சுமவோரை ராக் ஷச குண வேளை கொண்ட பஞ்சாங்க சம்பிரதாயங்கள் சேர யாழ்ப்பாணம் இரகுநாதஐயர் வாக்கிய பஞ்சாங்கப்படி மாலை 6 மணி 36 நிமிட நேரமளவில் இந்தப் புதிய துர்முகி வருடம் பிறக்கின்றது.
திங்கள், 4 ஏப்ரல், 2016
நீங்கள் நோயாளியா? சுகதேகியா?
ஆயுள் ரேகையானது ஒரு சங்கிலியைப் போன்றோ துண்டு துண்டாகவோ அமைந்திருந்து அத்துடன் ஆரோக்கிய ரேகையும் ஆழப்பதிந்து காணப்பட்டால் அவ்விதம் அமைந்தவருக்கும் ஆரோக்கியத்துக்கும் வெகுதூரம்.
ஒருவரது ஆரோக்கியமானது அவரது வாழ்க்கை முறையால் பழக்க வழக்கங்களினால் உருவாக்கப்படுகிறது. அந்த உருவாக்கமானது அவரது கையில் குறுக்கும் நெடுக்குமாய் வரையப்பட்டுள்ள கோடுகளால் உணர்த்தப்படுகிறது.
ஒருவரது ஆரோக்கியமானது அவரது வாழ்க்கை முறையால் பழக்க வழக்கங்களினால் உருவாக்கப்படுகிறது. அந்த உருவாக்கமானது அவரது கையில் குறுக்கும் நெடுக்குமாய் வரையப்பட்டுள்ள கோடுகளால் உணர்த்தப்படுகிறது.
Labels:
ஜாதகம்
கிரகோரியன் நாட்காட்டி; பின்னணி என்ன...?
ஓர் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வந்தால் அந்த ஆண்டானது நெட்டாண்டு (Leap Year) என அழைக்கப்படுகிறது. நான்கால் மீதியின்றி வகுபடும் நாட்களே லீப் வருடம் என நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், நான்கால் மீதியின்றி வகுபடக்கூடிய நூற்றாண்டுகளான கடந்த 1700, 1800, 1900 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்களாக உள்வாங்கப்படவில்லை. அதாவது பெப்ரவரி மாதத்தில் 28 நாட்களே இருந்தன. மேலும் எதிர்வரும் நான்கால் மீதியின்றி வகுபடக்கூடிய நூற்றாண்டுகளான 2100, 2200, 2300 ஆம் ஆண்டுகளும் லீப் வருடங்களாக உள்வாங்கப்படமாட்டாது. இது உங்களுக்கு தெரியுமா? ஆராய்வோம்.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





