கருணா தன் குடும்பம் வாழும் வெளிநாட்டில் அவர்களுடன் இணைந்தாலும் நிம்மதியாக காலத்தை செலவிட புலத்து புலி பினாமிகள் விடாது. ஏதாவது குடைச்சல் கொடுத்து கொண்டே இருப்பர். டக்ளசின் நிலை அதை விட மோசம். எந்த குடும்பத்துடன் போவது என்பது முதலாவது பிரச்சனை. மேலும் அவருக்காக தேர்தல் காலங்களில் பறந்து வரும் பறவைகள் கூட அவரை கௌரவமாக காப்பாற்ற முடியாது. விடாது கறுப்பு என்பது போல சூளை மேடு வழக்கு அவரை மீண்டும் சென்னைக்கு அழைக்கலாம். அதனால் இருவரின் இருப்பும் இங்குதான். தம் இருப்புக்காக தேர்தல் காவடி தூக்கித்தான் ஆகவேண்டும். கருணா அதற்கான வழிகளை தேடிக்கொண்டிருக்க டக்ளஸ் தன் கட்சி இழப்புக்கான பழியை கட்சி உறுப்பினர்கள் மீது போட தொடங்கிவிட்டார். தொலைக்காட்சி பேட்டியில் மட்டுமல்ல அண்மையில் அவர் நடத்திய கிளிநொச்சி சந்திப்பிலும் உங்கள் உழைப்பு போதாது என பழி போட்டதால் மனம் நொந்துபோன பலர் முணு முணுத்தது ஜே வி பி இணையத்துக்கு தீனியாக “விலகுகிறார் சந்திரகுமார்” என செய்தி போட்டுள்ளது.
செவ்வாய், 15 செப்டம்பர், 2015
டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 3
டக்ளஸ் கருணா இடையே பல ஒற்றுமைகள் காணப்பட்டாலும் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்ப்பட முடியவில்லை. காரணம் டக்ளசின் குணாம்சம். யாருடன் இணைந்தாலும் நான் தான் தலைவன் என்ற போக்கு. கூட்டமைப்பில் தான் இருந்திருந்தால் நான் தான் தலைமை ஏற்றிருப்பேன் என அடிக்கடி பீத்திக்கொள்வார். தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை வைத்து சுப்ரபாதம் கேட்டு சுகம் காண்பவர். பிரேமதாச முதல் மகிந்தவரையும் இன்று மைத்திரியுடனும் அவர்களின் மகுடிக்கு ஏற்றவாறு நடந்து கொள்பவர். கருணா போராளி மட்டுமல்ல பல களங்களை கண்டவர், முன்னின்று நடத்தியவர். எனது ஜயசிக்குறு வெற்றிக்கு இவர்தான் காரணம் என பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரனால் பாராட்டப்பட்டவர். இன்று தான் இருக்கும் கட்சியையே சிங்கள பேரினவாத கட்சி என பேட்டி கொடுக்கும் தைரியம் கொண்டவர். கிழக்கின் அபிவிருத்தியில் இயக்கத்தில் இருந்த போதும் பின் அரசில் இணைந்த போதும் அக்கறைப்பட்டவர். இயக்ககாலத்தில் ஆயித்தியமலையில் அவர் அமைத்த அரிசி ஆலை வன்னிப் புலியை வியக்கவைத்தது.
Labels:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

