வெள்ளி, 22 அக்டோபர், 2010

முல்லைத்தீவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கே.பிக்கு இராணுவத்தினர் செல்யூட் அடித்து வரவேற்பு ‐ கொழும்பு ஊடகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முனியன்கட்டு குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான கே.பி.என்ற குமரன் பத்மநாதனுக்கு இராணுவத்தினர் செல்யூட் அடித்து, வரவேற்பளித்துள்ளனர். புதுமாத்தளன் பிரதேசத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவரும் கே.பிக்கு இவ்வாறான வரவேற்பை அளித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதுமாத்தளன் பிரதேசத்திற்கு 200க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் செல்ல உள்ளதாகவும் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக்கொடுக்குமாறு புதுமாத்தளன் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரிக்கு மேல் மட்டத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இரகசியங்களடங்கிய 20 ஆவணங்கள் கண்டுபிடிப்பு ‐ இராணுவம்!

புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் சகல இரகசியங்களும் அடங்கிய 20 ஆவணங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த இரகசிய ஆவணங்கள் விஸ்வமடு பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பெண் போராளிகள் 23 பேர் விடுதலை

ஆவணப்படம்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் 23 பேர் இன்று இன்று யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் வைத்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் டியூ குணசேகர மற்றும் பிரதியமைச்சர் விஜயமுனி சொய்சா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

டுபாயில் இலங்கையருக்கு 3 மாத சிறைத் தண்டனை

இலங்கையை சேர்ந்த பஸ் சாரதி ஒருவருக்கு டுபாய் நீதிமன்றம் 3 மாத சிறை தண்டனையும், தண்டனை முடிந்ததும் நாடு கடத்துமாறும் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானிய கத்தோலிக்க பாதிரியாருக்கு 21 வருடம் சிறை

20 வருடங்களுக்கு மேலாக சிறு இளைஞர்களை பாலியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்தியமைக்காக 73 வயதான ஜேம்ஸ் ரொபின்ஸன் எனும் கத்தோலிக்க பாதிரியாருக்கு பிரித்தானியாவில், பேர்மிங்ஹாம் கிரௌன் கோர்ட் 21 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

செக்ஸ்.கொம் இணையதளம் 13 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையானது

இந்தச் சுருக்கவிவரம் இல்லை. இடுகையைப் பார்க்க, இங்கே கிளிக் செய்க .

Helmet அணிய மறுப்பவர்களுக்கு Airbag (படங்கள், காணொளி இணைப்பு)

தலைமுடியின் அழகு உருக்குலைந்து விடும் என்பதற்காக சைக்கில் ஓட்டுபவர்கள் அநேகமானோர் தலைக்கு Helmet அணிந்து கொள்ள விரும்புவதில்லை. அப்படி Helmet அணிய விரும்பாமல் மிதிவண்டி ஒட்டுபவர்களுக்காக, சுவீடனைச் சேர்ந்த இரண்டு மாணவர்களால் 6 வருடங்களாக வடிவமைக்கப்பட்ட தலைக் கவசம்தான் இந்த Airbag.

கியூப செயற்பாட்டாளர் குயிலர்மோ பானாஸுக்கு ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் விருது

கியூப அரசாங்க எதிர்ப்பாளரான குயிலர்மோ பானாஸுக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் சக்ஹரோவ் மனித உரிமைகள் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலம் மெக்ஸிக்கோவில் கண்டெடுப்பு

மெக்ஸிக்கோவின் சியுடாட் ஜுவாரஸ் பிராந்தியத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி நகரில் பெண்ணொருவர்ன் தலை துண்டிக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்படுவது இந்த வருடத்தில் இது இரண்டாவது தடவையாகும்.

மெக்ஸிக்கோவில் வன்முறைகள் நிறைந்த நகரில் பொலிஸ் தலைமை அதிகாரியாக 20 வயது யுவதி (படங்கள் இணைப்பு)

மெக்ஸிக்கேõவில் சிஹுவாஹுவா மாநிலத்திலுள்ள வன்றைகளுக்கு பெயர்போன பிராஸெடிஸ் ஜி குயர்ரேரோ நகருக்கான உயர்மட்ட பொலிஸ் தலைமையதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம் 20 வயது யுவதியான வாலெஸ் கார்சியா உலகப் பிரபலம் பெற்றுள்ளார்.

மலைப்பாம்புடன் விளையாடும் 2 வயது பலஸ்தீன சிறுமி (படங்கள் இணைப்பு)

பலஸ்தீன மேற்கு கரையிலுள்ள ரமல்லாஹ் நகரைச் சேர்ந்த 2 வயது சிறுமியான நதாலி அம்வஸி 3 மீற்றர் நீளமான பாம்பில் ஏறி சவாரி செய்வதை படத்தில் காணலாம்.

வளர்ப்புத்தாய் மீது ஏறி விளையாடும் அணில்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரோஜா(48). இவரது வீட்டில் 5 மாதத்துக்கு முன்பு ஒரு அணில் 3 குட்டிகளை போட்டுள்ளது. இதில் ஒரு குட்டியை மட்டும் கைவிட்ட தாய் அணில், மற்ற 2 குட்டிகளுடன் சென்று விட்டது. தாயில்லாமல் தவித்த அணில் குட்டியை சரோஜா பராமரிக்க தொடங்கினார். குட்டி அணிலுக்கு ராமன் என்று செல்லப்பெயரும் சூட்டியதோடு அதற்கு உணவாக பால், பழம், பிஸ்கெட், சோறு என்பன கொடுத்து வந்தார்.

ஆஸி நோக்கி பயணித்த 87 இலங்கையரின் பயங்கரமான அனுபவம்... மூவர் பலி, நத்தை மீன்களை உண்டு மழை நீரைக்குடித்தனராம்

அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 இலங்கையர்கள் தமது பயங்கரமான பயணம் தொடர்பாக விபரிக்கின்றனர்.

இந்தப் பயணத்தில் அவர்களது படகு உடைந்தது, நீர்,உணவு மற்றும் எரிபொருள் தீர்ந்துவிட்டது. மூன்றுபேர் இறந்தனர். இவ்வாறு அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று தனது செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல