திங்கள், 27 பிப்ரவரி, 2012

டாகுமெண்ட்டில் ஹெடர் மற்றும் புட்டரில் உள்ள டெக்ஸ்ட்டை எப்படி மாற்றுவது?

மிக எளிதாக மாற்றலாம். View சென்று கிளிக் செய்து மெனுவினைத் திறக்கவும். இதில் Header and Footer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Header and Footer டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இது ஒரு டூல் பார் போலத் தோற்றமளிக்கும். இந்த டயலாக் பாக்ஸில், நீங்கள் டெக்ஸ்ட்டை மாற்ற வேண்டும் எனில், Switch பட்டனில் கிளிக் செய்திடவும். வழக்கமான டெக்ஸ்ட் ஒன்றை எப்படி மாற்றுவீர்களோ, அதே போல புட்டர் அல்லது ஹெடரில் உள்ள டெக்ஸ்ட்டையும் மாற்றவும். மாற்றத்தினை ஏற்படுத்திய பின்னர், Close என்பதில் கிளிக் செய்திடவும். இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் Print Layout வியூ பயன்படுத்திக் கொண்டிருந்தால், உங்கள் ஹெடர் மற்றும் புட்டர் திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே, அதில் டபுள் கிளிக் செய்து, தேவைப்படும் மாற்றத்தினை மேற்கொள்ளலாம்.
Image Hosted by ImageShack.us

எம்.எஸ் ஆபீஸ் ட்யூனிங்

உங்கள் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் எளிதாகவும் விரைவாகவும் இயங்கிக் கொண்டிருக் கலாம். ஆனால், அதில் இயங்கும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பினால், பிரச்னைகள் ஏற்பட்டு, விண்டோஸ் இயத்தின் வேகத்தினை மட்டுப்படுத்தலாம். அது போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க பல வழிகள் உள்ளன. இங்கு சில காட்டப் பட்டுள்ளன. வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் தொகுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு டிப்ஸ் தரப்படுகிறது.

டிவைஸ் மேனேஜர்

கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் தான் டிவைஸ் மேனேஜர். மவுஸ், கீ போர்டு, மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர்களும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப்படுகின்றன என்று இதில் தெரியவரும்.

புரோகிராம்களை முறையாக மூடிட

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.

பவர்பாயிண்ட் டிப்ஸ்

புல்லட் வரிசைப்படுத்த

பவர்பாய்ண்ட் ஸ்லைடு களில் பெரும்பாலும் நாம் புல்லட் பாய்ண்ட் களைப் பயன்படுத்துகிறோம். இது நாம் சொல்ல விரும்பும் தகவல்களை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துக் காட்ட உதவுகிறது. இந்த புல்லட் லிஸ்ட்டில் உள்ள புல்லட்கள் பெரும்பாலும் நேராக ஒரு மார்ஜினில் அமைவதில்லை. ஏனென்றால் இவற்றைத் தொடர்ந்து வரும் டெக்ஸ்ட்டுக்கு ஏற்ற வகையில் இவை சற்று நகர்ந்து கொள்வதே காரணம். இதனைச் சரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் கீகள்

நீங்கள் அதிக அளவில் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் கோப்புகளைப் பயன் படுத்துபவரா? அப்படி என்றால், உங்கள் இடது மவுஸ் பட்டனைப் பயன்படுத்தி, பிரசன்டேஷன் ஸ்லைடுகளை முன்னோக்கிச் செலுத்துவீர்கள், இல்லையா?

பிரபாகரன் தற்கொலை செய்யமாட்டார்! விக்கிலீக்ஸ்

பிரபாகரன் தற்கொலை செய்துகொள்ளுவார் எனும் எண்ணத்தை நிராகரித்த சரத்பொன்சேகா, "பிரபாகரன் தனது குடும்பத்தையும், தனது சாப்பாட்டையும் அதிகம் நேசிப்பவர்" அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பது மிகவும் அதிகமானது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கின்றார் இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா.

பகிரங்க சவாலில் பிரபாகரனை வென்ற அமைச்சர் தேவானந்தா! விக்கிலீக்ஸ்

பிரபாகரனுக்கு விட்ட பகிரங்க சவாலில் ஓரளவு வெற்றி கண்டு இருக்கின்றார் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

-நான் தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்கின்ற வரை பிரபாகரனால் என்னை கொல்ல முடியாது.-

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது?

தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும்.

திக்குவாய் உடல்ரீதியான பிரச்சினை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சினையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள். ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும்போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது.

நடேசன் புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியவையை வெளியிட்டது பிபிசி! [காணொளி]

இலங்கையில், போரின் இறுதிக்கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்ற சந்தர்ப்பத்தில்,
அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின் தன்னுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் சரணடைவோரின் பாதுகாப்புக்கு இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல