இக்கட்டான பரிதாப நிலை
கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவம் அப்போது இருந்த சாதாரண மக்களின் இக்கட்டான பரிதாபகரமான ஒரு நிலையை எடுத்துரைக்கிறது. கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்த ஐந்து பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று வான்படையினரின் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்டது. அவர்களில் இருவர் முறையே 18ம் மற்றும் 20 வயது நிரம்பிய வாலிபர்கள். பாடசாலையில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ கட்டாய இராணுவ சேவைக்கு பிடித்துச் செல்வதை தடுப்பதற்காக அவர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தார்கள். துயரமான முறையில் அவர்களைப் பிடித்துச் செல்வதற்காக யமன் இஸ்ராயேலின் கபீர் விமானத்தின் வடிவில் வந்திருந்தான். அந்த குறிப்பிட்ட பாடசாலையின் வகுப்புகளுக்கு மாணவர்கள் சமூகமளிப்பதற்கு அச்சம் கொண்டிருந்தனர், ஏனென்றால் அந்தப் பாடசாலையின் அதிபர் மாணவர்களை அடையாளம் கண்டு கடத்;துவதற்கு எல்.ரீ.ரீ.ஈ க்கு உதவியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளின் உயர்மட்ட தளபதி ஒருவரின் நெருங்கிய உறவினரான அந்த அதிபர் இன்று மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக உயர்ந்த அரசியல் பதவியை வகித்து வருகிறார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவம் அப்போது இருந்த சாதாரண மக்களின் இக்கட்டான பரிதாபகரமான ஒரு நிலையை எடுத்துரைக்கிறது. கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்த ஐந்து பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று வான்படையினரின் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்டது. அவர்களில் இருவர் முறையே 18ம் மற்றும் 20 வயது நிரம்பிய வாலிபர்கள். பாடசாலையில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ கட்டாய இராணுவ சேவைக்கு பிடித்துச் செல்வதை தடுப்பதற்காக அவர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தார்கள். துயரமான முறையில் அவர்களைப் பிடித்துச் செல்வதற்காக யமன் இஸ்ராயேலின் கபீர் விமானத்தின் வடிவில் வந்திருந்தான். அந்த குறிப்பிட்ட பாடசாலையின் வகுப்புகளுக்கு மாணவர்கள் சமூகமளிப்பதற்கு அச்சம் கொண்டிருந்தனர், ஏனென்றால் அந்தப் பாடசாலையின் அதிபர் மாணவர்களை அடையாளம் கண்டு கடத்;துவதற்கு எல்.ரீ.ரீ.ஈ க்கு உதவியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளின் உயர்மட்ட தளபதி ஒருவரின் நெருங்கிய உறவினரான அந்த அதிபர் இன்று மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக உயர்ந்த அரசியல் பதவியை வகித்து வருகிறார்.

