நல்லிணக்கத்தை நோக்கிய பாதை
வரும் பொதுத்தேர்தலில் ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் போட்ltte cadrs-1டியிடுவதற்காக வேட்புமனு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது கடந்த வாரம் அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரால் வேட்புமனுவுக்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டது தொடர்பான சமீபத்தைய பிரச்சினை, அவரைப் போன்ற கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றவர்கள் தேசிய அளவிலான தேர்தல்களில் போட்டியிட்டதுடன் முன்னாள் ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் பதவிகளை வகித்திருப்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.



