சனி, 25 செப்டம்பர், 2010

மாணவர்களே எனிமேல் நீங்கள் எங்களை பெயர் சொல்லி அழையுங்கள்

பிரிட்டனிலுள்ள ஆரம்பப்  பாடசாலையொன்று அங்குக் கற்கும் மாணவர்கள் அவர்களது ஆசிரியர்களை  சேர், மெடம் என்று  அழைக்கும் பாரம்பரியத்தை கைவிட்டு  ஆசிரியர்களின் முதல் பெயரை கூறி அழைக்கும் புது வழக்கத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது.

விசாரணை செய்யும் அதிகாரம் நிபுணர் குழுவுக்கு இல்லை ஜனாதிபதியிடம் பான் கீ மூன் தெரிவிப்பு!

இலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரணை செய்யும் சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் தமது நிபுணர் குழுவுக்குக் கிடை யாதென்று ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவிடம் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துள்ளார்.

7 யானைகள் ரயிலில் அடிபட்டு பலி

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ரயிலில் அடிபட்டு 7 யானைகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இந்திய அதிகாரிகளை அடுத்த வாரம் தான் சந்தித்து பேசவுள்ளதாக இந்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

'நாய்க்கு தீட்டு' - தீண்டாமை குற்றச்சாட்டு

தலித் கொடுத்த உணவை உண்டதால் "நாயும் தீண்டத் தகாதது ஆகியது"

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில கிராமம் ஒன்றில் உயர் சாதிக்காரர் வளர்த்த ஒரு நாய்க்கு தலித் பெண்ணொருவர் உணவளித்ததற்காக அப்பெண் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஒரு சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை செய்துவருகின்றனர்.

காதல் களியாட்டத்தை மறைக்க நடந்த கடத்தல் நாடகம்

இளைஞர் சமுதாயம் இன்று எதனையும் பொருட்படுத்தாது தம் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர். அதனை வீட்டிலுள்ள பெரியவர்கள் தடுப்பதில்லை, திருத்துவதுமில்லை.

பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பதற்கு பெற்றோருக்கு நேரமில்லாமலிருக்கிறது. பெற்றோரின் அசட்டை காரணமாக இன்பங்களை தேடிச் செல்லும் இளசுகள் இறுதியில் சீர்கெட்டுவிடுகின்றனர்.

அறுபது அடி உயரத்தில் அழிச்சாட்டியம் பண்ணிய அந்த இளைஞர்...

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்குப் பயணிகள் வருகிறார் களோ இல்லையோ. ஆனால் ஆர்ப் பாட்டக்காரர்கள் வருவது வழக்கம். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்துக்கொண்டி ருப்பார்கள்.

தீர்ப்பென்றால் தீர்ப்பு இதுதான் தீர்ப்பு

தனது மகளை ஒரு வருட காலப் பகுதியில் தினசரி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்த தந்தையொருவருக்கு பிலிப்பைன்ஸ் நீதிமன்றமொன்று வெள்ளிக்கிழமை 14,400 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

போட்டோ பிரதி இயந்திரங்கள் இயக்குபவர்கள், அருகே இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது......

போட்டோப் பிரதி இயந்திரங்கள் செயற்படுவது எப்படி?

நீங்கள் பிரதி எடுக்க இருக்கும் அசல் பொருளிலிருந்து ஒளித்தெறிப்பு அடைந்து, அவ்வொளியை உணரச்செய்யும் மின் உருளை அல்லது பெல்ட் இல் வீழ்ந்து மறை பிம்பமாக மாறும். பின் அது பேப்பரில் பிரதியாக அச்சாகும். இந்தச் செயற்பாட்டின்போது சூழலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதையும் அதனால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் எவை என்பதையும் பார்க்கலாம்.

சொரியாசிஸ் என்றால் என்ன?

சொரியாசிஸ் என்பது ஒரு சாதாரணமான தோல் அழற்சி நிலையாகும். மக்கள் தொகையில் பெரும்பாலான மக்கள் இதனால் தாக்கப்படுகிறார்கள். தோலில் உள்ள உயிரணுக்கள் வேகமாகப் பிரிவதன் மூலம் இது உண்டாகும்.

சோதனைகளைச் சாதனைகளாக்கிய சமீதா சமன்மலி.....

ஆண்டவன் ஒரு வழியை மூடினால் இன்னொரு வழியை திறப்பான் என்பது வாழ்க்கையில் சோதனைகளைச் சந்திக்கும் போது நாம் எல்லோரும் முணுணுக்கும் வார்த்தை. இது இன்று சமீதா சமன்மலியின் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது.

சவூதியில் வீட்டுப்பணிப்பெண்கள் சந்தித்து வரும் சிக்கல்கள்

நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி வந்திருந்தது, கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப் பட்டது என்று. வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்ணால் கடத்தப்பட்டு பின்னர் ஒரு பல் பொருள் அங்காடியில் விட்டுச் செல்லப் பட்டிருந்தது அந்த இரண்டரை வயதுக் குழந்தை. குழந்தையின் தந்தை குழந்தையை மீட்க பணம் தரவேண்டும் என்று தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் செய்தி யிலேயே (அதே நகல்) கடந்த ஆண்டும் இதே போல் குழந்தைக் கடத்தல் ஒன்று நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல