ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
PDF கோப்புக்களை Text கோப்புக்களாக மாற்றுவதற்கு
தட்டச்சு செய்யப்பட்ட Document-களை பாதுகாப்பான முறையில் பேணுவதற்கு ஏனைய கோப்பு வகைகளினைக் காட்டிலும் PDF கோப்புக்கள் சிறந்தவையாகும்.
Labels:
கணணி மையம் (Softwares)
சீமான் மீது மின்னஞ்சல் ஊடாகத் தாக்குதல் தொடுப்பவர் யார்?
தனி நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடும் மிக மோசமான நிகழ்வுகள் தற்போது அதிகரித்துச் செல்கின்றது. ஊடகத் துறையில் ,தேசியவிடுதலைப் போராட்டம் குறித்து சமரசமின்றி எழுதுவோரை நோக்கியே இத் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. எனது முகவரியைத் திருடிய ஒரு நபர், அதில் சீமானைப் பற்றி பல புனைவுகளை மிக மோசமான தமிழில் எழுதியுள்ளார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
தமிழீழம் முதல் கூடங்குளம் வரை...
ஜெய்ஹோ... ஜெயா ஹோ!
(ப.திருமாவேலன்)
அண்ணாவின் ஞாபகம் அதிகமாக அம்மாவுக்கு வந்துள்ளது. 'நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால், ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு’ என்ற அண்ணாவின் வாசகத்தை 'கெயில்’ விவகாரத்தில் உதாரணம் காட்டினார். 'தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் - எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இருக்காமல் - உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை’ என்று 'ஈழத் தமிழர்’ தீர்மானத்தில் சொன்னார். இது வரை தன் வழி யில் போய்க்கொண்டு இருந்த ஜெயலலிதா, இப்போதுதான் அண்ணா வழிக்கு வந்துள்ளார். இதற்கு நாடாளுமன்றத் தேர்தல்தான் மிக முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. 'நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தை மூன்று மாதங்களுக்கு முன்பு வைத்தவர், அதற்கான ஃபார்முலாவை இப்போது செயல்படுத்த ஆரம் பித்துவிட்டார். குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலமாக, லட்சக்கணக்கான பொதுமக்களைத் தன்னுடைய கட்சியின் பக்கமாகத் திருப்புவதுதான் அது!
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





