வெள்ளி, 12 நவம்பர், 2010

அல் ஜஸீரா ஊடகவியலாளர்களுக்கு விஸா வழங்க உத்தரவு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் இரண்டாவது பதவிக்காலத்தை பதிவு செய்ய இலங்கை வருவதற்காக விஸாவிற்கு விண்ணப்பித்திருக்கும் அல் ஜஸீரா ஊடகவியலாளர் மூவருக்கு விஸா வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தரவிட்டுள்ளார்.

அல் ஜெஸீராவுக்கு விசா மறுப்பு!

அல் ஜெஸீரா செய்தி வலையமைப்பின் புதிய ஊழியர்களுக்கான விசா விண்ணப்பத் தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள தை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தி உள்ளது. எனினும் இதற்கான காரணம் கூறப்பட வில்லை.

விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் தடையை நீடித்தது இந்திய அரசு!

விடுதலைப்புலிகளால் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதால் அவர்கள் மீதான தடை மேலும் இரண்டா ண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது என்று டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப் பளித்தது.

நேற்றைய சாட்சியங்கள்

சரணடைந்த முக்கிய புலி உறுப்பினர்களை அரசாங்கம் சுட்டுக்கொன்று விட்டது! - துணை அரசியல்துறை பொறுப்பாளரின் மனைவி சாட்சியம்

விடுதலைப்புலிகள் அமைப்பில் துணை அரசியல் பொறுப்பாளராக இருந்த விஜிதரன் என்று அழைக்கப்படும் சிவசிதம்பரப்பிள்ளை ரவிச்சந்திரன் ஆகிய எனது கணவர் 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் ஓமந்தையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

நாங்கள் திருந்தி வாழ சந்தர்ப்பம் கிடைக்காதா? தமிழ் அரசியல் கைதிகள் ஏக்கம்

மகசின் சிறைச்சாலையில் ஜி பிரிவில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ஶ்ரீ.ரங்கவிற்கு கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த கடிதம் தொடர்பில் தெரிய வருவதாவது

யாழ். நூலகத்தில் என்ன நடந்தது என்ற சகலருக்குமான ஓர் உண்மை விளக்கம்!

தமிழ் மக்களை மறுபடியும் பதட்டமானதும், குழப்பமானதுமான சூழலுக்குள் தள்ளிவிடவும், எமது மக்கள் மீது மறுபடியும் அவலங்களைச் சுமத்தி விடவும் வழி வகுக்கும் தவறான வழிமுறையில் செயற்படுவதை இனியாவது நிறுத்தி, எமது மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவும், கருத்து வெளியிடவும் முன்வருமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரை நோக்கியும் நாம் எமது மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் அ.இராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய இலங்கை தமிழ்ப்பெண் மரணம்

சவூதிஅரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றி வந்த அலவத்துகொட சைஸ்டன் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயொருவர் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு உயிரிழந்துள்ளார்.

அதிகரித்துவரும் சட்டவிரோத செயல்கள் குறித்து அவதானம் தேவை

சரத் பொன்சேகாவிற்கு ராணுவ நீதிமன்றம் வழங்கிய தண்டனை சாதாரணமானது

களவரக் களமான கைதிகள் கூடம்

தமிழ்த் தலைமைத்துவம் மீளவும் வெளிப்படுவதற்கு அரசியல் ரீதியான வாய்ப்புகலை நாம் ஏற்படுத்த வேண்டும்

மீள் குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டியதின் அவசியம்

பிரபாகரனின் மரணத்தை அறிந்தபோது என்னால் சாப்பிடவே முடியவில்லை - கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கழிவிரக்கம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக் கத்தின் தலைவர் வே.பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்த பொழுது என்னால் அன் றைய தினம் காலை உணவை சாப் பிட முடியவில்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

LTTE tells India it is not trying to regroup

NEW DELHI: In an obvious bid to regain legal status in India, Sri Lanka's Tamil Tigers have told Home Minister P. Chidambaram that it is not trying to regroup and is also not engaged in any illegal activity in this country.

Sri Lanka denies visas to Al-Jazeera over alleged war crimes footage

Colombo – Sri Lanka has denied visas to at least three staff members of Al-Jazeera television, after the station broadcast images of bodies and execution-style killings, said to have occurred during the final weeks the civil war against Tamil rebels last year.

சூதாட்டத்திற்கு இலங்கையில் புதிய சட்டம்

இலங்கையில் சூதாட்டத்தை முழுமையாக முறைப்படுத்தும் சட்டத்தை முதல்முறையாக இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இந்த சட்டமானது சமீபகாலமாக இலங்கை அரசு கடைபிடித்துவரும் சமூக கட்டுப்பெட்டித்தனமான நடவடிக்கைகளுக்கு நேர் முரணானதாக அமைந்திருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு கட்சிகளின் நாடாளுமன்றஉறுப்பினர்களால் நிறைந்திருக்கும் நாடாளுமன்ற அவையில் பெரும்பான்மை வாக்குகளுடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலைப் புலிகள் மீதான தடை உறுதி

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்து விசாரணை தீர்ப்பாயம் முடிவை அறிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலையின் பின்னர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த விடுதலைப்புலிகள் மீதான தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நீடிக்கப்பட்டு வருகின்றது.

'பிள்ளையான் தாக்கினார்'- குற்றச்சாட்டு

முதலமைச்சர் சந்திரகாந்தன் - (ஆவணப்படம்)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும், அவரது ஆதரவாளர்களும் தம்மை தாக்கியதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான பிரபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சாட்சியமளிக்காமல் வீடு திரும்பினார் தயா மாஸ்டர்

யாழ்.குடா நாட்டிலே இன்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் முன் சாட்சியம் அளிக்க இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளரான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி இன்று யாழ்.கச்சேரியில் சாட்சியாளர்களின் தொகை அதிகமாக காணப்பட்டதால், நாளைய தினம் சாவகச்சேரியில் இடம்பெறவுள்ள அமர்விற்கு முன்நேர அனுமதியை பெற்றுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

கடைக்கு வந்த பெண் மீது துஷ்பிரயோகம் சந்தேக நபருக்கு விளக்கமறியல் உத்தரவு

பொருட்களைக் கொள்வனவு செய்ய கடைக்கு வந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சந்தேக நபரான வியாபாரி ஒருவரை எதிர் வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதிபதி சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டார்.

கனடாவில் பள்ளிவாசல்

கனேடிய வடமேற்கு பிராந்தியமான இனுவிக்கில் பள்ளிவாசலொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையிலேயே இந்த பள்ளிவாசல் அங்கு அமைக்கப்படுகிறது.
மேற்படி பிராந்தியத்தில் வாழும் 3200 பிரதேசவாசிகளில் சுமார் 80 சதவீதமானவர்கள் முஸ்லிம்களாவர்.

9 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் சிறுவன்

நேபாள நாட்டை சேர்ந்த சிறுவன் டிசேட்டன் ஷெர்பா. 9 வயதான இவன் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக புறப்பட்டு இருக்கிறான். கடந்த வாரம் இந்த சிகரத்தில் உள்ள 19 ஆயிரத்து 700 அடி உயர சிகரம் ஒன்றில் சாதனை படைத்த அவன் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறான்.

எழுத்து வடிவ செய்திகளை அனுப்புவது இள வயதினரின் ஆரோக்கியத்துக்கு கேடு

கையடக்க தொலைபேசி மற்றும் இணையத்தளம் மூலமாக அளவுக்கதிகமான எழுத்து வடிவ செய்திகளை அனுப்புவது இளவயதினரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியது என அமெரிக்க மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஆணொருவரை கடத்திச் சென்று கப்பம் கோரிய பிரித்தானிய பெண்

ஆணொருவரை கடத்திச் சென்று கப்பம் கோரிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

நடிகையின் கடவுச்சீட்டை ரத்துச் செய்யவும்

““நடிகை வீனா மலிக் ஒரு கிரிக்கெட் சூதாட்ட முகவர். தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் இவரது கடவுச்சீட்டை உடனடியாக ரத்துசெய்ய வேண்டுமென தீரஜ் தீக்ஷித் புகார் கூறியுள்ளார்.

போதைவஸ்து குழுவுக்காக பணத்தை பெற்று படுகொலை செய்யும் 12 வயது சிறுவன் (படங்கள் இணைப்பு)

மெக்ஸிக்கோவில் போதைவஸ்து குழுவொன்றைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் தொடர் கொலைகளை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

72 வயது பெண்மணியை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி 27 வயது இளைஞன் பணமோசடி (படங்கள் இணைப்பு)

72 வயது கைம்பெண் ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை காட்டி அவடமிருந்த 15000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை 27 வயது இளை ஞர் ஒருவர் அபகரித்துச் சென்ற சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல