வியாழன், 13 ஜனவரி, 2011

இலங்கைக்கேற்ற தீர்வை காண இந்தியா உதவினால் வரவேற்போம்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

முப்பது ஆண்டுகால யுத்தத்தின்போது நாட்டில் அராஜகம் புரிந்த எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்தையும் அதன் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஒழித்துக் கட்டி எங்கள் நாட்டில் மீண்டும் சமாதானத்தையும் அமைதியையும் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்திய எனது அரசாங்கம் எக்காரணங் கொண்டும் மீண்டும் அந்தப் படுபயங்கர கொலையாளியான பிரபாகரனின் இலட்சியக் கனவை நிவைவேற்றுவதற்கு எவராவது முயற்சிகளை எடுத்தால் அவற்றை கடுமையான முறையில் செயற்பட்டு ஒழித்துக் கட்டிவிடும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் காலை (13) ஊடகங்களின் உயர் அதிகாரிகளையும் பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்துப் பேசியபோது கூறினார்.

புலிகளின் உள் விவகாரத்தில் தலையிடமாட்டேன் எனத் தெரிவித்த ரணில்: விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்விவகாரத்தில் தான் தலையிட மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே அரசிடம் உறுதியளித்தார் ஏன விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரு தலைகளுடன் பிறந்த குழந்தை!

இந்தியாவின் திருப்பதி நகரத்தில் பெண் குழந்தை ஒன்று இரு தலைகளுடன் பிறந்து உள்ளது.

மிருகங்களிடமிருந்து பயில வேண்டிய பாடம்

மிருகங்களிடம் குணம் உண்டு. ஒன்று எதிர்த்துத் தாக்கும் அல்லது ஓடி விடும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்து கொண்டு அஞ்சி விழிக்காது. தாக்குதலில் இறங்குவது என்று முடிவு செய்துவிட்டால் தன் உயிர் போகும் வரையில் தன் துணிவைக் கைவிடாது.

முதல் மனிதன் தோன்றியது எங்கே? வரலாற்றை திருத்தும் புதிய முடிவு

உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான்தோன்றினான் என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது நாள் வரையில், கடந்த இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன் முதலில் ஆபிரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது.

குஜராத்தில் ஒரு நகல் தாஜ்மகால்

குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில், நிஜ தாஜ்மகாலின் அளவில், நகல் தாஜ்மகால் ஒன்றை நான்கு ஆண்டு கால உழைப்பில் கலை பொருட் கள் தயாரிப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

கண்ணாடியின் பயன்பாடு 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது

பாரிஸில் உள்ள கண்ணாடியால் கட்டப்பட்ட பிரமிட் இதனை திறந்து வைத்தவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆவார்

கண்ணாடியில் முகம் பார்க்காதவர்கள் எவருமே இல்லையென்று சொல்லலாம். ஏனெனில் அதில்தானே எவரும் தனது முகத்தைப் பார்த்து ரசிக்க முடியும். கண்ணாடிகளில் பல வகைகள் உண்டு.

1000 க்கு மேற்பட்ட சொற்களை ஞாபகம் வைத்துள்ள அபூர்வ நாய்

போர்டர் கோல்லி இன நாயானது 1000 க்கு மேற்பட்ட பொருட்களின் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருப்பதுடன் ஒரு பெயரை பிறிதொரு பெயரிலிருந்து வேறு பிரித்து அறியும் ஆற்றலையும் கொண் டிருப்பது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னாள் காதலியின் புதிய காதலன் காதை கடித்து துண்டாக்கிய நபர்

தனது முன்னாள் காதலியின் புதிய காதலரின் காதைக் கடித்து துண்டாக்கிய நபரொரு வருக்கு இரு வருட சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

கைகுலுக்க தடை

ஆண்களும் பெண்களும் கைகுலுக்கிக் கொள்வதற்கு சோமாலிய ஜோவ்ஹார் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெற்ற தந்தையை உயிருடன் புதைத்த தனயர்கள் கைது

மதத் தலைவரான தமது தந்தையை தூக்க மாத்திரைகளைக் கொடுத்து மயக்கி உயிருடன் புதைத்த இரு தனயர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரேசிலில் இடம்பெற் றுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல