சாதாரண பிஸ்கால் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு
வாசுதேவன், தவவயேந்திரன், குலேந்திரன் மற்றும் அஜந்தன் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர் ரி.ஐ.டி அவர்களை ஜனவரி 20ந் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தியது. வழக்கத்துக்கு மாறான ஒரு நகர்வாக அந்த நால்வரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டவில்லை. மாறாக அவர்கள் வெடி மருந்துகளையும் மற்றும் போதைப் பொருட்களையும் தம்வசம் வைத்திருந்ததாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும் பாராளுமன்ற உறப்பினா திரு.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக விசேடமான குறிப்புகள் எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை, மாறாக ஒரு முக்கிய அரசியல் பிரமுகரை தாக்குவதற்கு முயற்சி மேற்கொண்டதாக மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த நால்வரும் காவல்துறையின் கீழான பிஸ்கால் கைதுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்கள். தற்சமயம் அவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்கள்.
வாசுதேவன், தவவயேந்திரன், குலேந்திரன் மற்றும் அஜந்தன் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர் ரி.ஐ.டி அவர்களை ஜனவரி 20ந் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தியது. வழக்கத்துக்கு மாறான ஒரு நகர்வாக அந்த நால்வரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டவில்லை. மாறாக அவர்கள் வெடி மருந்துகளையும் மற்றும் போதைப் பொருட்களையும் தம்வசம் வைத்திருந்ததாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும் பாராளுமன்ற உறப்பினா திரு.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக விசேடமான குறிப்புகள் எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை, மாறாக ஒரு முக்கிய அரசியல் பிரமுகரை தாக்குவதற்கு முயற்சி மேற்கொண்டதாக மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த நால்வரும் காவல்துறையின் கீழான பிஸ்கால் கைதுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்கள். தற்சமயம் அவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்கள்.




