திங்கள், 30 ஜனவரி, 2017

சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்ய வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சதி வெளிப்பட்டது - பகுதி - 2

சாதாரண பிஸ்கால் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

வாசுதேவன், தவவயேந்திரன், குலேந்திரன் மற்றும் அஜந்தன் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர் ரி.ஐ.டி அவர்களை ஜனவரி 20ந் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தியது. வழக்கத்துக்கு மாறான ஒரு நகர்வாக அந்த நால்வரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டவில்லை. மாறாக அவர்கள் வெடி மருந்துகளையும் மற்றும் போதைப் பொருட்களையும் தம்வசம் வைத்திருந்ததாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும் பாராளுமன்ற உறப்பினா திரு.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக விசேடமான குறிப்புகள் எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை, மாறாக ஒரு முக்கிய அரசியல் பிரமுகரை தாக்குவதற்கு முயற்சி மேற்கொண்டதாக மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த நால்வரும் காவல்துறையின் கீழான பிஸ்கால் கைதுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்கள். தற்சமயம் அவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்கள்.

130 மனைவிகள், 203 குழந்தைகள்.. நைஜீரியாவின் சர்ச்சை மத போதகர் காலமானார்

 Mohammed Bello Abubakar, who had 130 wives and fathered 203 children, has died aged 93

நைஜீரியாவில் 130 மனைவிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் வசித்து வந்த மதபோதகர் முகமது பெல்லோ அபுபக்கர் (Mohammed Bello Abubakar) தனது 93 வயதில் காலமானார். அவருடைய மனைவிகளில் சிலர் தற்போதும் கர்ப்பிணிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.

பரம்பரையாக தொடரும் மரபணு பிரச்சினைகள் : 9 பேரை கேலிக்கை செய்யும் சமூகம் (காணொளி இணைப்பு)

பரம்பரையாக தொடரும் மரபணு பிரச்சினைகள் காரணமாக 11 பேரை கொண்ட குடும்பத்தில் 9 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்கள். இதனால் அவர்களை சமூகத்தவர் கேலி செய்யும் சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்ய வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சதி வெளிப்பட்டது - பகுதி - 1

“நல்லவன்”(உண்மையான பெயர் அல்ல) வட பகுதி கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு தமிழ் இளைஞன். அவன் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) அமைப்பின் ஒரு முன்னாள் உறுப்பினர் மற்றும் அவன் மே 2009ல் ஆயுதப் படைகளிடம் சரணடைந்தவன். அவனை ஒரு குறிப்பிட்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருந்து, புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தியதின் பின்னர் விடுதலை செய்தார்கள். யுத்தத்துக்குப் பின்னான வட பகுதி சூழல் வலி நிறைந்த கடினமான ஒன்று ஏனென்றால் நல்லவனால் வருமானம் தரும் ஒரு வேலையை எங்கு தேடியும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிநாடு செல்வதற்கும் போதுமான பொருளாதார வளமும் கூட அவனிடம் இருக்கவில்லை. நல்லவன் வயதான ஒரு சித்தியுடன் வசித்தபடி சாத்தியமான போதெல்லாம் அடிக்கடி ஒரு தற்காலிக தொழிலாளியாக உடல் உழைப்பை மேற்கொண்டு வந்தான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல