எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் , 1977 - ம் ஆண்டு “பொம்மை” சினிமா இதழுக்காக நடிகை லதாவுக்கு பேட்டி கொடுத்தபோது எடுத்த படமாம் இது..!
எம்.ஜி.ஆர்.- லதா இணைந்திருந்த இந்தப் படத்தைப் பார்த்தபோது உள்ளத்தில் சில “உரிமைக்குரல்” நினைவுகள் ஒலித்தன...!
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.”
இந்த "உடுக்கை" குறளுக்கும் , உரிமைக் குரலுக்கும் என்ன சம்பந்தம்...?







