சனி, 26 ஜனவரி, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 19

இந்தியாவின் தமிழ்நாடு வரையும் விடுதலைப் புலிகளின் புலிகளின் குரல் வானொலிச் சேவை விஸ்தரிப்புப் பெற்றிருந்த போதிலும் இந்த விஸ்தரிப்பானது நீண்டநாட்களுக்கு நிலைத்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளால் நோர்வே அனுசரணையுடன் கொள்வனவு செய்யப்பட்டிருந்த நவீன வானொலிக் கருவியானது மீண்டும் விடுதலைப் புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையில் போர் மூண்டதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தங்கள் வானொலிச் சேவையை விடுதலைப் புலிகள் மட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 18

விடுதலைப் புலிகளிடம் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் தேவைப்பட்டியல் உள்ளடங்கிய பட்டியலுடன் நோர்வேக் குழுவினர் உடனடியாகவே தென்பகுதிக்கு விசேட உலங்குவானூர்தியில் விரைந்து சென்றனர். இவ்வாறு சென்ற நோர்வேக் குழுவினர் அரசமட்டத்தில் பேச்சுவார்த்தைக் குழுவின் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

விறகில் பூத்த மலர்

மூன்று பெண்குழந்தைகள், ஓரு ஆண்குழந்தை, தொழில் கூலி. என்றாலும் உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து கொள்ளும் திருப்பதியான வாழ்க்கை. ஊருக்கு ஓரமாக சுழித்துக்கொண்டோடும் மகாவலியின் கிளை ஆற்றைக் கடந்து சென்று வேகத்தீவுக்கு அப்பால் பொலநறுவை வரை பரந்து விரிந்து கிடக்கும் காடுகளில் சென்று விறகெடுத்து வந்து கொத்திப் பிளந்து கொண்டு சென்று விற்றுப் பின் அன்றைய நாள் சிலவேளை அடுத்த நாளுக்குமான அரிசி, பருப்பு மற்றும் துணைச்சாதனங்கள் வீடு வந்து சேரும்.

பச்சை மிளகாயும் பத்ம பூஷனும்! – எஸ் . ஜானகி பற்றி விசேஷ ரிப்போர்ட்!

பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஏற்கனவே தமிழக, கேரள, கர்நாடக அரசுகளிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார். மத்திய அரசு நேற்று எஸ்.ஜானகிக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது வழங்கியது.

விஸ்வரூபம்”– திரை விமர்சனம்

சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் போகிற தியேட்டர்களில் எல்லாம் சாரி சாரியாய் கார்கள். All Roads Leads to Viswaroopam என்று தான் சொல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக இத்தனை மெனக்கெடலா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவை மூச்சாய் நேசிக்கும் ஒருவரின் படத்தை பார்க்க ஒத்த சிந்தனையுள்ள ரசிகனுக்கு இந்த மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல. இதற்கு முன் மகதீரா பார்ப்பதற்காக ஆந்திராவுக்கும், முங்காரு மலே பார்ப்பதற்காக கர்நாடகாவுக்கும் பயணப்பட்டவன் நான். அப்படி பயணப்பட்டு பார்க்கும் படம் சிறப்பான ஒர் அனுபவமாய் இருந்தால் எத்தனை சந்தோஷமாய் இருக்கும். அப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை விஸ்வரூபம் கொடுத்தது. இப்பட்த்திற்கான செய்த பயணம் ஒர் அனுபவம். அதை தனியே எழுத வேண்டும்.

“விஸ்வரூபம் படத்தை 100 பேர் முடக்குவதும் தீவிரவாதமே!”

விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது தொடர்பாக திரையுலகம், மற்றும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், நடிகர் இயக்குனர் பார்த்திபன் தமது அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல