ஜாதக கிரக நிலையில் ஒருவரின் ஆளுமைத்திறனுக்கும் உயர்ந்த ஆய்வு நிலைக்கும், சமூக அந்தஸ்துடைய கெளரவமான வாழ்விற்கும் முக்கிய காரணியாக அமைபவர் பிரகஸ்பதி எனப்படும். குருபகவான். இவர் வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியாக சஞ்சாரம் செய்பவர். அதன் மூலமாக பன்னிரு ராசிகளுக்கும், பலாபலன்கள் நன்மை, தீமை என அமைவதுண்டு. அந்த வகையில். வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி நேற்று ஞாயிறு பின்னிரவு 11 மணி 41 நிமிட நேரமளவில் கடகராசியில் இருந்து தனது நட்பு வீடான சிம்மராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இந்தப் பெயர்ச்சியின் மூலம் நல்ல அதிர்ஷ்டம், சுமாரான பலன், மத்திம பலன் என பலாபலன்கள் ஏற்படும்.
ஞாயிறு, 5 ஜூலை, 2015
மகனைக் காணாது அழுது புலம்பும் சொறிக்கல்முனை ஏழைத்தாயார் - தேடிக்கண்டுபிடித்துத்தருமாறு உருக்கமான வேண்டுகோள் விடுக்கின்றார்
தனது ஒரே மகன் இந்தியா சென்று ஐம்பது நாட்களாகியும் இன்னும் எதுவித தகவலுமில்லாமல் அனலிடைப்பட்ட மெழுகு போல் வெந்து புலம்புகிறார் ஓர் ஏழைத்தாயார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சொறிக்கல்முனைக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
கணேஷ் கபிலன் எனும் 23வயது இளைஞனே இவ்விதம் காணாமல்போயுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சொறிக்கல்முனைக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
கணேஷ் கபிலன் எனும் 23வயது இளைஞனே இவ்விதம் காணாமல்போயுள்ளார்.
Labels:
உதவி (Please help),
தமிழர்கள்,
வீரகேசரி
ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் - சரவணா ஸ்டோர்ஸ்
சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
Labels:
இந்தியா,
குற்றம் (Crime),
கேள்வி - பதில்,
தமிழ்நாடு,
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்
கடன் கொடுத்தோரைக் கலங்கடிக்கும் கிரேக்கம்
1991ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் 2001ஆம் ஆண்டில் யூரோ நாணயக் கட்டமைப்பிலும் கிரேக்கம் இணைந்து கொண்டது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகளும் நாணயக் கட்டமைப்பில் 19 நாடுகளும் இருக்கின்றன. இரண்டிலும் இணையும்போது கிரேக்கம் தனது பொருளாதாரம் தொடர்பான தகவல்களைத் திரித்துக் கூறியிருந்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
வீரகேசரி
வயிற்றுப்பசிக்கு விலைபோகும் மாதர்கள்
வந்த புதிதில் எனக்கு இங்குள்ள வேலைகளைச் செய்ய அருவருப்பாகவும் இருந்தது. ஆண்களின் உடலை என் கைகளால் தீண்டும் போது என் கைகள் கூசின. ஆயினும், நாளடைவில் அந்த சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்துக் கொண்டேன்
''ஈட்டி எட்டின வரை பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்'' என்பார்கள். அந்தவகையில் கடந்த வாரங்களில் 'குற்றம்' பகுதியில் பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த பணவெறியர்களை பற்றிப் பார்த்திருந்தோம். ஆனால், இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்தவே பணம் இன்றி வாழ்க்கைச் சுமையால் வாட்டமுற்று இன்னலுடன் வாழ்பவர்கள் பலர். இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் தனக்கென்று விதிக்கப்பட்ட பண்பாடுகளையும், கலாசாரங்களையும் தகர்த்தெறிந்து, உணர்வுகளுக்கு விலங்கிட்டு தமது அங்கங்களுக்கு ஒரு விலை கொடுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.
''ஈட்டி எட்டின வரை பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்'' என்பார்கள். அந்தவகையில் கடந்த வாரங்களில் 'குற்றம்' பகுதியில் பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த பணவெறியர்களை பற்றிப் பார்த்திருந்தோம். ஆனால், இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்தவே பணம் இன்றி வாழ்க்கைச் சுமையால் வாட்டமுற்று இன்னலுடன் வாழ்பவர்கள் பலர். இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் தனக்கென்று விதிக்கப்பட்ட பண்பாடுகளையும், கலாசாரங்களையும் தகர்த்தெறிந்து, உணர்வுகளுக்கு விலங்கிட்டு தமது அங்கங்களுக்கு ஒரு விலை கொடுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.
Labels:
கட்டுரைகள்,
குற்றம் (Crime),
வீரகேசரி
உளச்சோர்வு – உதவியின்றேல் உயிர்கொல்லும்
“என்ன சோர்ந்துபோய் இருக்கிறாய்”, முகத்தில் ஈ ஆடவில்லை”, “முகம் காய்ஞ்சு போய் இருக்கு” “முன்புபோல் உஷாராக இல்லை”, இதுபோன்ற வசனங்களை நாம் அன்றாட வாழ்வில் எமது உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் போன்றோரை காணும் போது பயன்படுத்துகிறோம். முகம் அதன் தோற்றம் எமது மனதின் பல்வேறு விம்பங்களை எடுத்துக்காட்டுகின்றது. முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் எமது சிந்தனை, செயல், நடத்தைகளில் வெளிக்காட்டப் படுகின்றன. மேலே குறிப்பிட்ட வசனங்களை உங்களிற்கு நன்றாக தெரிந்த ஒருவரில் பிரயோகிக்க வேண்டி ஏற்பட்டால், இவரிற்கு “உளச்சோர்வு” நோய் இருக்குமோ? என்ற அடுத்த சந்தேகத்தை தீர்க்க உங்களிற்கு இக்கட்டுரை உதவி செய்யும்.
Labels:
கட்டுரைகள்,
பலதும் பத்தும்
ஒரு தொழிற்சங்க ஊழியனின் குமுறல்
மலையக நகரங்களில் ஏதாவது ஓரிடத்தில் நீங்கள் வழுக்கி விழுந்தால் அவ்விடத்தில் நிச்சயம் ஒரு சாராய தவறணை இருக்கும். அல்லது ஒரு தொழிற்சங்க காரியாலயம் இருக்கும். சாராயத் தவறணை, தொழிற்சங்க காரியாலயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இவை இரண்டுமே தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவை என்றொரு மயக்கம் பரவலாகவே உள்ளது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
பரீட்சையில் வெற்றிபெற மூச்சுப் பிடித்து படிப்பது எப்படி?
ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவது அவரது சுவாச ஓட்டமாகும். “மூச்சுப்போனால் எல்லாம் போச்சு" என்பார்கள். “இறுதி மூச்சுவரை இதை நான் மறக்கமாட்டேன்" என்றும் சொல்வார்கள். மூச்சை அடக்கியும் கட்டுப்டுத்தியுமே பெரிய முனிவர்கள், யோகிகள் செயற்கரும் செயல்களைச் செய்துள்ளார்கள். நீண்டகாலம் வாழ்ந்துள்ளார்கள். எமது மூச்சுக்காற்று நாம் உறங்கும்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றது.
Labels:
பலதும் பத்தும்
வெளிநாட்டு பயங்கரவாதிகளாக பட்டியல் இடப்பட்டுள்ள சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல் - பாகம் -3
பாகம் - 3
உலகத் தமிழர் பேரவை
பிரதானமாக பிதா.இமானுவலின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதல் காரணமாக உலகத் தமிழர் பேரவை பெரிய அளவிலான அங்கீகாரம் மற்றும் செல்வாக்கு என்பனவற்றை பல மேற்கத்தைய நாடுகளுக்கிடையில் பெற்றிருந்தது. உலகத் தமிழர் பேரவை, பல மேற்கு நாடுகளின் அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற அங்கத்தவர்கள், உயர் மட்ட நிருவாகத்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளது. ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வை காண்பதற்காக கொழும்பு அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்க உதவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் யுத்தக் குற்றங்களுக்கு ராஜபக்ஸ ஆட்சியினரை பொறுப்பு கூற வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
உலகத் தமிழர் பேரவை
பிரதானமாக பிதா.இமானுவலின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதல் காரணமாக உலகத் தமிழர் பேரவை பெரிய அளவிலான அங்கீகாரம் மற்றும் செல்வாக்கு என்பனவற்றை பல மேற்கத்தைய நாடுகளுக்கிடையில் பெற்றிருந்தது. உலகத் தமிழர் பேரவை, பல மேற்கு நாடுகளின் அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற அங்கத்தவர்கள், உயர் மட்ட நிருவாகத்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளது. ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வை காண்பதற்காக கொழும்பு அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்க உதவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் யுத்தக் குற்றங்களுக்கு ராஜபக்ஸ ஆட்சியினரை பொறுப்பு கூற வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















