வியாழன், 16 ஏப்ரல், 2015

உலகை உலுக்கிய சிறுமியின் புகைப்படம்

Young refugee girl mistook Osman Sagirli's camera for a deadly weapon
சிரியாவில் கேமராவை பார்த்து துப்பாக்கி என்று பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மிய சிறுமி. உலகையே உலுக்கிய புகைப்படம் இது.

பிஞ்சு முகத்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை.

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்” - எம். ஏ. நுஃமான்

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மரபான இலக்கியத்திலும் இலக்கணத்திலும் புலமைகொண்ட அவர் நவீன இலக்கியக் கோட்பாடுகள் பற்றி எழுதியும் விவாதித்தும் வருகிறார். தமிழில் கால்கொண்ட அமைப்பியல், பின்அமைப்பியல் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. தமிழ்மொழியோடு ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளையும் பயின்று தனது விமர்சனச் செயற்பாட்டை அமைத்துக்கொண்டவர். ஆங்கிலத்திலிருந்து பாலஸ்தீனக் கவிதைகள் உள்ளிட்டவற்றை மொழிபெயர்த்த இவரின் கவிதைகள், ஆங்கிலம், சிங்களம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆசிரியர், இணையாசிரியர், பதிப்பாசிரியர், இணைப் பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் 25 நூல்களுக்குமேல் இவர் வெளியிட்டுள்ளார். ஈழத்தின் கடந்த தலைமுறையினரோடு படைப்புப் பணியைத் தொடங்கிய எம்.ஏ. நுஃமான் இளைய தலைமுறைப் படைப்பாளிகளோடும் உறவைப் பேணிவருபவர்.

ஸ்ரீலங்கா போரை எப்படி வெற்றி கண்டது


கண்காணிக்கப்பட்ட ஒரு வெற்றியின் உத்தியில் இருந்து பெற்ற பாடங்கள்

உலகமயமாக்கப்பட்ட இந்தப் பூமியில் வெகு திறமையாக கடல் வளங்களையும் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் ஒரு உள்நாட்டுப் போரை வெற்றி கொள்வது எப்படி? இப்போது srilanka warபோராக மாறியுள்ள அப்படியான மோதல்களைப் பொறுத்தவரை அநேகமான அரசாங்கங்கள் விடை காண முயற்சிக்கும் கேள்வி இது. வெகு சிலவே இதில் வெற்றியடைந்துள்ளன, இதில் மிகப் பெரிய விதிவிலக்கு ஸ்ரீலங்கா, அங்கு 25 வருட உள்நாட்டு யுத்தத்தில் அரசாங்கம் தமிழீழ விடுதலைப்; புலிகளை (எல்.ரீ.ரீ.ஈ) தீர்க்கமாகத் தோற்கடித்து நீடித்ததாகத் தோன்றும் சமாதானத்தை உருவாக்கியுள்ளது. இந்த வெற்றியானது கடந்த தசாப்தங்களில் நல்ல நிதிவளமுள்ள மேற்கத்தைய படைகள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் மோதல்களில் நடத்திய போராட்டங்களை விட முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. உலகத்திலேயே மிகவும் புதுமையானதும் ஆபத்தானதுமான கிளர்ச்சிப் படை எனக் கருதப்படும் ஒன்றுக்கு எதிராக ஸ்ரீலங்காவால் எப்படி வெற்றி பெற முடிந்தது? இதில் மூன்று முக்கிய பகுதிகள் தனித்து நிற்கின்றன.

உயிர்வாழும் வீரர்களும் மற்றும் இறந்த கிளர்ச்சியாளர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மயானங்களுக்கு என்ன நடந்தது?

“எனது சகோதரன் இறந்துவிட்டான் ஆனால் ஒரு மயானத்தை அழிப்பதன் மூலம் அவனது நினைவுகளை அழித்துவிட முடியாது. இருந்தும் அவனது உடல் அங்கு ஒரு இராணுவ முகாமின் கீழ் புதைக்கப் பட்டுள்ளது. அது மிகவும் வேதனையானது.

இந்தியாவுக்கு இலங்கையர்கள் விசா இல்லாத பயண முறை அமலுக்கு வந்தது

இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ரஷ்யா சிறையில் நேதாஜி கொடூர சித்ரவதை செய்யப்பட்டார்? உக்ரைன் போடப் போடும் குண்டுகளால் பரபரப்பு!!

டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரஷ்யாவால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் இது தொடர்பான ஆவணங்களை உக்ரைன் வெளியிட இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமான விபத்தில் இறக்கவில்லை, நேதாஜி கொல்லப்பட்டார்: மாஜி மெய்க்காவலர் பரபரப்புத் தகவல்

குர்கான்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விமான விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொல்லப்பட்டார் என அவரது முன்னாள் பாதுகாவலர் (வயது 93) ஜக்ராம் யாதவ் தெரிவித்துள்ள பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல