சனி, 16 அக்டோபர், 2010

வெள்ளவத்தையில் நிலச்சரிவு

காலி வீதி வெள்ளவத்தை ரொக்சி திரையரங்கிற்கு முன்னால் வீதி கீழிறங்க ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக வீதியை செப்பனிடும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளந் தெரியாத இரு சடலம்

இன்று காலை வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளந் காணப்படாத இரு நபர்களது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சடலும் தற்போது களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பொலிஸார் கிடைக்கப் பெற்ற சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமர் வீதியில் கடத்தல், சந்தேகநபர் கைது

இரண்டு கோடி ரூபா கப்பம் கோரி கொழும்பு ஆமர் வீதியில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் குறித்து குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு செட்டியார் தெருவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த கடத்தலை மேற்கொண்ட நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து கைக்குண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்னறனர்.

ரஜினிகாந்த் மீது யாராவது தீவிரவாத வழக்கு போட முடியுமா? – சஞ்சய்தத் கேள்வி

என் மீது தீவிரவாத வழக்குப் போட்டது போல ரஜினிகாந்த் மீது யாராவது வழக்கு போட முடியுமா?. போட்டால் தமிழகத்தில் சும்மா இருப்பார்களா? என்று கேட்டுள்ளார் நடிகர் சஞ்சய் தத்.

இலங்கையில் எந்திரன் மோகம் குறைந்தது-தியேட்டர்கள் வெறிச்சோடுகின்றன

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள எந்திரன் படத்திற்கு இலங்கையில் மோகம் குறைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பல தியேட்டர்களில் படம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், கூட்டம் குறைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி...

சூப்பர் ஸ்டாரின் குப்பை படம்! பிரபல வில்லன் நடிகர் தாக்கு!!

கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் குப்பை படங்களால் மக்களுக்கு என்ன பயன்? என்று பிரபல வில்லன் நடிகர் திலகன் கடுமையாக சாடியிருக்கிறார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் வில்லன் கேரக்டரில் கலக்கிய திலகன் சமீப காலமாக சினிமாவில் நடிக்கவில்லை. அவரை நடிக்க விடாமல் மலையாள நடிகர் சங்கம் மற்றும் முன்னணி நடிகர்கள் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி :

யாரையும் கவராத காமன்வெல்த் தீம் பாடல்-மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

காமன்வெல்த் போட்டிக்காக தான் போட்டுக் கொடுத்த தீம் பாடலின் ட்யூன் பிரபலமாகமால் போனதற்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் விற்பனைக்கு – மொத்தமாக வாங்கினால் ஒட்டுக்குழு ஒன்று இலவசம்

விடுதலைப்புலிகள் வீழ்ந்து விட்டார்கள் என சிறீலங்கா அரசு கடந்த வருடம் அறிவித்த பின்னர் அனைத்துலகிலும், தாயகத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன, நிகழ்ந்து வருகின்றன.

101 ஆவது வயதில் அமெரிக்க குடியுரிமையைப் பெற்ற பெண் (படங்கள் இணைப்பு)

காஸியா மச்சுரே எனப்படும் பெண் மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா சென்று நூற்றாண்டுகளின் பின்னர் அவரது 101 ஆவது வயதில் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவார்களை தடுக்க வேண்டாம்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் மற்றும் பெண்கள் அமெரிக்க இராணுவத்தில் இணைவதைத் தடுக்க வேண்டாம் என பென்டகனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

7 மாத குழந்தையை ஓடும் பஸ்ஸின் முன்பாக வீசிய சிறுமிகள்

7 மாதங்களே நிறைந்த ஆண் குழந்தையொன்றை அதன் சகோதரியின் கைகளில் இருந்து பறித்தெடுத்து, பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்றுக்கு முன்னாள் வீசிய இரு பதின்மர் வயது சிறுமிகளை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காந்த சக்தியுடைய மாணவி (படங்கள் இணைப்பு)

சேர்பியாவில் பாடசாலை மாணவியொருவரின் கைகள் காந்தத்தைப் போன்று உலோகங்களை ஈர்க்கும் சக்தியுடன் விளங்குகின்றன. இந்த அபூர்வ தன்மை மருத்துவ நிபுணர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கர்ப்பிணியை கொன்று சிசுவை வெட்டியெடுத்த பெண் (படங்கள் இணைப்பு)

கோரினா ரொபர்ட்
அமெரிக்காவில், கர்ப்பமுற்றிருந்த ஒரு பெண்ணை கொன்றதுடன் அப்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை கர்பப்பையிலிருந்து வெட்டியெடுத்த பெண்ணொருவருக்கு  ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு உடனடி அரசியல் தீர்வு - மஹிந்தவிடம் மன்மோகன் சிங் வலியுறுத்து!

இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க இதுவே சரியான தருணம் என இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் கொலைவழக்கில் இருந்து பிரபாகரன் விடுவிக்கப்படவில்லை - சிபிஐ பதிலளிப்பு

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை' என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ. பதில் அளித்துள்ளது.

எம்.வீ.சன் சீ கப்பலின் உரிமையாளர் தமிழ் பெண்ணா?

எம்.வீ.சன் சீ கப்பலின் உமையாளர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பெண் ஒருவரும் அவரது கணவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் விஜய் செய்த உதவி - மரணத்தை வென்ற சிறுவன் ?

நடிகர் விஜய் சரியான நேரத்தில் செய்த உதவியால் மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வழிந்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல