தம்புள்ளை அம்மன் கோவிலுக்கு ஏற்பட்ட நிலை தற்போது அங்குள்ள ஹைரியா ஜும்மா பள்ளிவாசலுக்கும் ஏற்பட்டிருக்கிறது. தம்புள்ளையில் புனித பூமிக்குள் இந்த இரு வணக்கஸ்தலங்களும் அமைந்துள்ளமையினால் அவற்றை அங்கிருந்து அகற்றவேண்டுமென்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
ஞாயிறு, 11 மே, 2014
ஓர் இனம் ஆளும் இனமாகவும் ஏனைய இனம் ஆளப்படும் இனமாகவும் இருக்க முடியுமா?
இலங்கையின் இனப்பிரச்சினை தீர யதார்த்த சிந்தனை வேண்டும். இலங்கையின் சனத்தொகையில் 100 க்கு 65 சதவீதம் சிங்கள பௌத்த மக்களும், 9 சத வீதம் கிறிஸ்தவ சிங்கள மக்களும் 12 சதவீதம் தமிழ் மக்களும், 8 சதவீத முஸ்லிம் மக்களும் ௬ சதவீத மலையக மக்களும் வாழ்கின்றார்கள். ஆக பௌத்த சிங்கள மக்கள் மூன்றில் இரண்டு பங்கினராகவும் சிறுபான்மைகள் மூன்றில் ஒரு பங்காகவும் காணப்படுகின்றனர். இது ஒரு சராசரி மதிப்பீடாகும். 9 மாகாணங்களில் 7 சிங்கள மாகாணங்களாகவும், 2 தமிழ் மாகாணங்களாகவும் உள்ளன. 25 மாவட்டங்களில் 18 சிங்கள மாவட்டங்களாகவும், 7 தமிழ் மாவட்டங்களாகவும் உள்ளன. அம்பாறை தமிழ் மாகாணத்தின் முஸ்லிம் மாவட்டமாகவே இருந்திருக்க வேண்டும் எனினும் திட்டமிட்டு சிங்கள மாவட்டமாக தமிழ் மாகாணத்துக்குள் திணிக்கப்பட்டிருக்கின்றது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
மலட்டுத் தன்மையை நீக்கும் கரட்
கரட்டில் உள்ள ‘ஏ' விட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கரோட்டின்தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது.
Labels:
மருத்துவம்
நரேந்திர மோடியின் கனவு நனவாகுமா?
சாது ஒருவர் ஒரு வீட்டிற்கு சென்றார். வீட்டிலிருந்த பெண்மணி அவருக்கு உணவு பரிமாறினார். சாப்பிட்டு முடித்ததும் வீட்டில் யாருடைய ஜாதகமாவது இருக்கிறதா என்று கேட்டார். அப் பெண்மணி தனது பன்னிரெண்டு வயது நிரம்பிய மகனின் ஜாதகத்தை எடுத்து வந்து சாதுவிடம் கொடுத்தார். சாது ஜாதகத்தை பார்த்ததும் “இவன் அரசியலுக்கு வந்தால் ஒரு சக்கரவர்த்தி போல வலிமையுடன் திகழ்வான். ஒரு வேளை, அரசியலுக்கு செல்லவில்லை என்றால் பெரிய சந்நியாசியாக ஆகிவிடுவான்” என்றார். அவர்தான் நரேந்திர மோடி .
Labels:
இந்தியா,
கட்டுரைகள்
இறுதிநேர ஆட்சேர்ப்பு!
மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் எழுதிய ‘ஈழத்தின் வலி’ என்ற புத்தகம் கடந்த ஜனவரி மாதம் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது. இந்நூல் வெளியிடப்பட்டு ஒரு மாதம் கழிந்து விட்ட நிலையில், அதற்கு பல்வேறு விமர்சனங்களும் வெளிவந்த வண்ணமுள்ளன. விடுதலைப்புலிகளின் தவறுகளை கடுமையாக விமர்சித்துள்ள படியினால் இந்நூல் அரசாங்கத்தில் ஆதரவில் வெளியிடப்பட்டது என்கின்ற வழமையான, புலி ஆதரவாளர்களின் கண்டனங்களையும் பெற்றுள்ளது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
அவர்களும் நம்மவர்கள்தான்!
“நான் ஆட்சிக்கு வந்தால், வங்கதேசத்திலிருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்களை வெளியேற்று வேன்” என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். தேவைக்கும் அதிகமான வாக்குறுதி, ஆரவாரம், சிறுபான்மைச் சமூகத்தவருக்கு மிரட்டல் என்று கட்சியின் அடையாளங்கள் ஒன்றையும் குறைக்காமல், இந்த எச்சரிக்கையில் சேர்த்திருக் கிறார் மோடி. இந்தக் குடியேறல்களின் வரலாறு என்ன, இப்படிச் செய்ய முடியுமா என்றெல்லாம் யோசிக்காமல் அவருடைய ஆதரவாளர்கள் பலர் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார்கள்.
Labels:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








