திங்கள், 4 அக்டோபர், 2010

இலங்கையை தொட்டுச் சென்ற குள்ளமும் உயரமும்!

உலகத்தின் உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும் நேற்று முன்தினம் இரவு அவசரமாக இலங்கை வந்தனர். மலேஷியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் விசேட விருத்தினர்களாக பங்குபற்றிய பின்னர் தமது சொந்த நாட்டுக்குச் செல் லும் வழியிலேயே அவர்கள் இலங்கை வந்திருந்தனர்.

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர்கள் ??? (படங்கள் இணைப்பு)

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு 30 மாதகால கடுழிய சிறைத்தண்டனை வழங்கியதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து இத்தாலியில் சுவரொட்டி பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதி மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சரத் பொன்சேகாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது-ரம்புக்வெல!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா விடயத்தில் அவரை சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புக்குள்ளும் சட்டத்துக்கு உட்பட்டும் எவ்வாறான போராட்டங்களையும் மேற்கொள்ள முடியும். ஜனநாயக நாட்டில் அவற்றை தடுக்க முடியாது என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெவித்தார்.

சரத் பொன்சேகாவிற்காக முதலைக் கண்ணீர் வடிப்போர் யுத்த காலத்தில் எங்கிருந்தார்கள் ‐ கோதபாய!

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல் தலைவர்கள் நான்காம் ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் எங்கிருந்தார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபாகரனால் மாத்தையா எப்படி நடத்தப்பட்டாரோ அப்படித்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் சரத் பொன்சேகா நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்-Tisaranee Gunasekara!

புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் அவ்வியக்கத்தின் பிரதித் தலைவராக இருந்த கோபாலசுவாமி மகேந்திரராசா அதாவது மாத்தையா எப்படி நடத்தப்பட்டாரோ அப்படித்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றார் என்று அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான Tisaranee Gunasekara என்று தெரிவித்துள்ளார்.

அயோத்தியும் ராஜராஜனும்

இந்துக்களின் கடவுளாகக் கருதப்படும் ராமர், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடியும்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழந்து மறைந்த மன்னன் ராஜராஜ சோழனின் நினைவிடத்தை அறிய முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

திடீர் சந்திப்பு... நயன்தாராவுக்கு ரஜினி அட்வைஸ்?

சென்னையில் படப்பிடிப்புத் தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை திடீரென்று சந்தித்தார் நயன்தாரா. இருவரும் சிறிது நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

மேலோங்கும் கலாசாரத்தால் கீழிறங்கும் காற்சட்டைகள் (படங்கள் இணைப்பு)

புதிய பாஷன் என்கிற போர்வையில் பெண்கள் அணியும் காற்சட்டைகள் கீழ் நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில் ஜப்பானியர் ஒருவரால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட ஜீன்ஸ் காற்சட்டைகள், ஜப்பானில் விற்பனையாகிறது.

பெரும் பகுதி வன்னி மக்கள்,பிரபாகரன் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்

உச்சகட்ட நெருக்கடிகள் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் தன் சொந்த ஊரான இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறார் ஆவணப்பட இயக்குநர் சோமீதரன். ‘எரியும் நினைவுகள்’, ‘முல்லைத்தீவு’ போன்ற தன் படங்களின் மூலம் ஈழ மக்களின் கண்ணீரை உலக அரங்கில் காட்சிப்படுத்தியவர்.

15 வயது சிறுவனுக்கு செயற்கை இருதயம்: இத்தாலி டாக்டர்கள் சாதனை

Dr. Antonio Amodeo in the Bambino Gesu Children's Hospital with a diagram of the artificial heart

மரணம் அடைந்தவர்களின் இருதயத்தை பாதிக்கப்பட்டவர்களின் உடலில் பொருத்தி இருதய மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது செயற்கையான இருதயத்தை நிரந்தரமாக பொருத்தி டாக்டர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

கலிலியோ நிலாக்கள்

சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் ஒன்று தான் வியாழன். சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள வியாழன் தான் உதவியாக இருக்கிறது. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு வரை, பூமியைத்தான் எல்லா கிரகங்களும் சுற்றி வருவதாக அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர்.

விபரீத விளம்பரம்

நெதர்லாந்தில் ஒரு விளம்பரம் விபரீத த்தை ஏற்படுத்தி விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இலகுவான முறையில் பணம் சம்பாதிப்பதற்காக தனது மகனை ஒரு நோயாளியென வெளி உலகிற்கு காட்டிய தாய் (படங்கள் இணைப்பு)

இங்கிலாந்தில் கரோல் லின் ஸ்னபேஸ் 47, எனும் பெண் தனது 12 வயது (கிற்ஸ்தொபர்) மகனைப் பயன்படுத்தி பொதுமக்கள் , உதவி ஸ்தாபனங்கள் மற்றும் தேவலய திருச்சபைகள் மூலம் பணம் பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

என்னாலும் முடியும்

சீனாவில் அண்மையில் நஞ்சியாங் மாகணத்தில் ஏற்பட்ட காஸ் பைப்லைன் வெடிப்பு சம்பவத்தில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டனர், 300 ற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இது செய்தி. இதில் விசித்திரமான சம்பவம் யாதெனில் அவ்வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு நாய்க்குட்டியை குரங்கு ஒன்று காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது.

மார்பக பரிசோனைக்கு அஞ்சும் இந்திய பெண்கள்

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து பரிசோதனை செய்ய அஞ்சி, நாணப்படுவதாக இங்கிலாந்து மருத்தவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வாழ் ஆசிய பெண்கள், மார்பக புற்றுநோய் வரும் என்ற ஆபத்து தெரியாமலே வாழ்கின்றனர். ஏனெனில் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றால் இந்த பெண்கள் வாழ்வை நலமாக்க மார்பக புற்றுநோய் குறித்து ஸ்கேனிங் எடுப்பதில்லை.

மீசை சாம்பியன்ஷிப் போட்டி (படங்கள் இணைப்பு)

ஒஸ்டிரியாவின் சல்ஸ்பர்க் மாகாணத்தில் லியோகாங் என்ற இடத்தில் ஐரோப்பிய மீசை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் முகத்தை மறைக்கும் அளவுக்கு மீசை வளர்க்கும் பலர் கலந்து கொண்டனர். தாங்கள் ஆசையாய் வளர்க்கும் மீசையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர் போட்டியாளர்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல