செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

விஜய குமாரதுங்க நினைவு நாள்

இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் முன்னாள் இலங்கை அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவின் கணவராவார். 1988 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.

பேஸ் புக் தில்லுமுல்லு குறித்து 400 முறைபாடுகள்

பேஸ் புக் எனப்படும் முகப்புத்தக வலைத்தளத்தை பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 400ற்கும் அதிகமானவர்கள் குறித்து முறைபாடுகள் கிடைத்துள்ளதென இலங்கை கணினி அவசர பிரச்சார அமையம் தெரிவித்துள்ளது.

நாய் குரைத்ததால் உரிமையாளருக்கு சிறை

வீட்டில் நாய்களை வளர்ப்பவர்கள், இரவு நேரத்தில் அவை குரைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். இது, இத்தாலியில் நடந்த சம்பவம். அந்த நாட்டின் சிசிலி நகரில் உள்ள ஒரு வீட்டில் 10 நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இரவில் அந்த நாய்கள் கடுமையாக குரைத்ததால் அருகில் இருப்பவர்கள் அவதிப்பட்டனர்.

இணையதளம் மூலம் பெண் தோழிக்கு புகைப்படம் அனுப்பிய எம்.பி. ராஜினாமா

அமெரிக்காவில் மேற்கு நியுயார்க் பகுதியில் இருந்து குடியரசு கட்சி சார்பாக இரண்டு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர், கிறிஸ்டோபர் லீ. இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். கிறிஸ்டோபருக்கு இணையதளம் மூலமாக பெண் தோழி ஒருவர் அறிமுகமானார். இந்த நிலையில், மேல்சட்டை அணியாமல் வெற்றுடம்புடனான தனது புகைப்படத்தை அந்த தோழிக்கு கிறிஸ்டோபர் அனுப்பி வைத்தார்.

நல்ல சுகதேகியாக இருந்து உடல் பயிற்சி செய்யும் மஹிந்தர்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மிகவும் ஆரோக்கியம் ஆக உள்ளார் என்று தகவல் வெளியிட்டு உள்ளது 'திவயின' சிங்கள பத்திரிகை.

கடந்த மாதம் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி சென்று இருந்தார்.

'குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படைக்கு ஒத்துழையுங்கள்'

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினர் துண்டுப்பிரசுரங்கள்

‘குடாநாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்புப் படையினர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை பொருட்படுத்தாது பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்’

கிளிநொச்சியில் அண்மையில் கடத்தப்பட்ட மொடேன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் நாலாம்மாடியில் வைக்கப்பட்டுள்ளார்!

கிளிநொச்சியில் அண்மையில் கடத்தப்பட்ட மொடேன் ஸ்டோர்ஸ் உரிமையாளரும் வர்த்தகருமான கறுப்பையா தியாகராசா நாலாம் மாடியில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு கிளிநொச்சிக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் காவல்துறையினரிடம் கேட்டிருந்தார்கள்.

முனியாண்டி மனோகரன் கடத்தப்பட்டுள்ளார்!

வவுனியா வாரிக்குட்டி பிரதேசத்தில் வசித்து வரும் முனியாண்டி மனோகரன் என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார். 38வயதான மனோகரன் வீட்டில் இருந்த போது, நேற்று நள்ளிரவு 12 மணியவில் அவரது வீட்டுக்கு சென்ற 4 பேர் அவரை கடத்திச் சென்றுள்ளளனர்.

இதுவரை அவர் குறித்து எந்த தகவல்களும் இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வவுனியா காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட லண்டன் வாழ் தமிழ் இளைஞர் வைத்தியசாலையில்!

திருகோணமலையில் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், மூன்று தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புலிகள் போரில் தோற்றதின் பின்னர் கப்பலில் ஆட்களைக் கடத்துவதைப் பிரதானமான தொழிலாகக் கொண்டுள்ளதாக-குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி!

புலிகள் போரில் தோற்றதின் பின்னர் கப்பலில் ஆட்களைக் கடத்துவதைப் பிரதானமான தொழிலாகக் கொண்டுள்ளதாகவும் கனடா விலுள்ளவர்களிற்கும் இந் நடவடிக்கையில் தொடர்புண்டு எனத் தான் நம்புவதாகவும் கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி நசனல் போஸ்ற் என்ற பத்திரிகைக்கு வழங்கிய காட்டமான செவ்வியில் தெரிவித்துள்ளார்.இந்தக் கப்பல் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஆகக்குறைந்தது நான்கு பரிமாற்று இடங்கள் இருந்திருக்கலாம் என்றும் இலங்கையின் வடக்கிற்கு ஆயுதக்கடத்தலை மேற்கொள்ளவென வடிவமைக்கப்பட்ட அனுபவம் பெற்ற இந்த கடத்தல்வழிகளால் இப்போது அவர்கள் ஆட்களைக் கடத்துகிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர்.

46 மணி நேரம் முத்தமிட்டு சாதனை படைத்த தம்பதி! (படங்கள் இணைப்பு)

உலக காதலர் தினம் தாய்லாந்தில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான பட்டாயாவில் கொண்டாடப்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் நீண்ட நேரம் முத்தமிடும் போட்டி நடத்தப்பட்டது.

இலங்கைப் பெண் வேலைப்பலு அதிகரிப்பால் சவுதியில் சுகவீனம்

சவுதி அரேபியாவில் மத்திய பிரதேசத்தில் வேலை கனத்தினால் சுகவீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கைப் பெண்னொருவரை இலங்கைத் தூதுவராலய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆறுகால் பசு (படங்கள் இணைப்பு)

சீனாவின் ஹியூபோய் மாகாணத்தில் உள்ள யிச்சாங் மிருகக்காட்சிசாலையில் ஆறு கால்களுடன் கூடிய பசு காணப்படுகின்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல