திங்கள், 12 மே, 2014

தமிழகத்துக்குக் கம்பி நீட்டிய தம்பதி மீது இன்ரபோல் நடவடிக்கை!

கடந்த வாரம் மன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகம் சென்று அங்கு தஞ்சம் கோரியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியரை சர்வதேச பொலிஸ் (இன்ரபோல்) உதவியுடன் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி நீதிமன்றத்தினால் நீதி அமைச்சின் செயலாளருக்குத் தெரியப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

இராணுவத்தை தமிழ் யுவதியுடன் சம்பந்தப்படுத்தி வதந்தி!(படங்கள் இணைப்பு)

இலங்கை இராணுவத்தில் தமிழ் யுவதிகள் சேருகின்றமைக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் பொய்ப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளன.

ஹார்ட் டிஸ்க்கின் இடம் அறிய

இப்போதெல்லாம் டெராபைட் அளவுகளில் ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தப்பட்டாலும், பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களிலேயே, ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறித்த பிரச்னை தலை தூக்குகிறது. எந்த ட்ரைவில் இடம் உள்ளது? ஏன் இந்த ட்ரைவில் இவ்வளவு இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது? காலி இடம் கொஞ்சமாக உள்ளதே? என்ற கேள்விகளெல்லாம் நம்மை ஆக்ரமிக்கின்றன.

ஸ்கைப்பில் குரூப் வீடியோ

ஒருவருக்கொருவர் திரையில் கண்டு பேசி மகிழ்ந்து கொள்ள உதவும் அப்ளிகேஷன் புரோகிராம்களில், பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஸ்கைப் ஆகும். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கி, அதில் மேம்படுத்துதலைக் கொண்டு வந்துள்ளது.

வேர்ட் டிப்ஸ் - காப்புரிமை அடையாளம்

காப்புரிமை அடையாளம் அமைக்க: வேர்ட் டாகுமெண்ட்களில் பல சிறப்பு குறியீடுகளை நாம் அவ்வப்போது அமைக்க வேண்டியதிருக்கும். அவற்றில் அடிக்கடி நாம் பயன் படுத்துவது, எழுத்துரிமையைக் குறிக்கும் காப்புரிமை குறியீடு ஆகும். இதனை ஆங்கில எழுத்து சி (C) அமைக்கப்பட்டு அதனைச் சுற்றி சிறிய வட்டம் அமைக்கப்பட்டிருக்கும்.

புரோகிராமினை மாற்றுவது எப்படி?

புதிய கம்ப்யூட்டரில் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த கம்ப்யூட்டரில், நமக்குத் தேவையான புரோகி ராமினை, அதன் போல்டரில் உள்ள பைல்களை, அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தால், ஏன் அவை இயங்குவதில்லை?

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அரசு எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் இந்த பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பற்றிய அண்மைச் செய்தி

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உள்ள பிழையான குறியீடு வழியாகப் பரவி வரும் மால்வேர் மற்றும் வைரஸ் குறித்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் அதற்கான பேட்ச் பைலை, தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

முன்னாள் தளபதி மகேந்தியின் குடும்ப மரணத்தில் உதவாத “TNA” மற்றும் வெளிநாட்டுப் “புலிகள்”

புற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த குழந்தையினது பூதவுடலை கொழும்பிலிருந்து எடுத்துச் செல்ல பெண் தொழிலாளர்கள் கைகொடுத்து முன்னுதாராணம் ஆகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் யாழ்.தளபதிகளுள் ஒருவராக இருந்தவர் மகேந்தி. அவருட்பட மூன்று பேர் குடும்பத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்கள் எவரும் தற்போது உயிருடனில்லை. இந்நிலையில் அவர்களது ஒரு சகோதரனான யோகேந்திரன் தனது குடும்பத்துடன் வன்னியில் வறுமையில் வாழ்ந்து வருகின்றார். அவரது மகளான தமிழ்மதி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு போதிய சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பு சென்று மருத்துவ சிகிச்சையினைப்பெற போதிய பணவசதி இன்மையினாலேயே அக்குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரச அம்புலன்ஸ் மூலம் கொழும்பில் சிகிச்சைக்கென கொண்டு செல்லப்பட்ட இக்குழந்தை தற்போது உயிரிழந்துள்ளது.

இராணுவத்தில் சேர்ந்தமைக்காக மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை"

கிளிநொச்சி மாவட்டம் வள்ளிபுனம் என்ற இடத்தில் மனைவி இராணுவத்தில் சேர்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராற்றில் கணவன் அவருடைய கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்கப் டிராப் விஷயத்தால் நடிகருக்கு பெண் தர மறுப்பு

சென்னை: இளம் நடிகர் ஒருவருக்கு பெண் தர மறுக்கிறார்களாம்.

அந்த மனிதர் எப்படி பிக்கப் செய்கிறார் டிராப் செய்கிறார் என்றே தெரியவில்லை என இளம் நடிகர் ஒருவர் பற்றி பேச்சு உண்டு. அந்த நடிகருக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

துணை நடிகர் கொன்று புதைப்பு : நடிகையை தேடும் தனிப்படை

துணை நடிகையுடன் குடும்பம் நடத்திய நெல்லை பைனான்சியர் கொலை: 3 பேர் கைது

நெல்லை: சென்னையில் நடிகையுடன் குடும்பம் நடத்திய நெல்லை துணை நடிகர் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பரப்பாடியை சேர்ந்தவர் சூசைமரியான். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகன் பீட்டர் பிரின்சோ. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பீட்டர் முதலில் பாவூர்சத்திரம், செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். பின்னர் கம்யூட்டர் சென்டரை மூடிவிட்டு சென்னைக்கு சென்றார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல