ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இலங்கை அகதிகள் அடங்கிய மற்றொரு படகை கனேடிய அரசு கண்கானித்துள்ளது

இலங்கை அகதிகள் அடங்கிய இரண்டாவது படகு கனடாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதை அந்நாட்டு அரசாங்கம் கண்கானித்து வருவதாக குளோபல் மெயில் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஏனைய நாடுகளுடன் இணைந்து ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் பலப்படுத்தி வருவதாகவும் அந்தப் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எந்தவிதமான காரணங்களும் கிடையாது – கோதபாய ராஜபக்ஷ!

இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எவ்வித காரணங்களும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கனடாவில் வெளியாகியுள்ள துண்டுப்பிரசுரங்கள்


மாட்டுக் கொட்டில் தான் காரணம்

கண்டி தெல்கொட பகுதியில் பாடசாலை மாணவர்கள் திடீர் சுகயீனமுற்றமைக்கு காரணம் பாடசாலைச் சூழலில் காணப்பட்ட மாட்டுக் கொட்டிலில் இருந்து வெளியான ஒருவகையான வாயுவே என சுகாதாரப் பிரிவினர் உறுதி செய்துள்ளனர்.

செல்லிட தொலைபேசியை பயன்படுத்த முடியாத சுமோ வீரர்கள்

ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரர்கள் சங்கம் அவ்வீரர்களுக்கு ஐபாட்களை (iPads)விநியோகித்து வருகிறது.

அவ்வீரர்களின் தடித்த விரல்களால் சாதாரண செல்லிடத் தொலைபேசியை பாவிக்க முடியாமல் போயுள்ளதாம். இதனால் அவர்களுக்கு iPads களை வழங்க, 'சுமோ வீரர்கள் சங்கம்' தீர்மானித்தது. இதுவரை அச்சங்கம் 60 iPad களை விநியோகித்துள்ளது.

டொக்டர் வீட்டில் திருட்டு: சந்தேகத்தில் பெண் கைது!

டொக்டர் ஒருவர் வீட்டில் இடம் பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக குறித்த டொக்டரின் வீட்டின் ஒரு புறத்தில் தொலைபேசி நிலையம்  நடத்தும் இளம் பெண் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து திருட்டுப் போன பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.

பெண் கைதிகளின் பெஷன் ஷோ (படங்கள் இணைப்பு)

சீனாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் உள்ள பெண் கைதிகள் இணைந்து பெஷன் ஷோவொன்றை நடத்தியுள்ளனர். இவர்கள் கழிவுப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து இந்த பெஷன்சோவில் பங்குப்பற்றியுள்ளனர்.

மதுபோதையில் மற்றொருவீட்டின் குளியலறையில் குளித்த நபர்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபரொருவர் மதுபோதையில் தனது வீடென நினைத்து பெண்ணொருவர் தனியாக வசித்து வந்த அயல் வீடொன்றுக்குச் சென்று அங்கிருந்த குளியலறையின் சவரில் குளித்துள்ளார்.

நிர்வாண கப்பல் சுற்றுலாவுக்கு ஆட்கள் தேடும் நிறுவனம்

லண்டனைச் சேர்ந்த சுற்றுலா முகவர் நிறுவனமொன்று 07 நாட்கள் நிர்வாண கோலத்துடன் உல்லாசமாக கப்பல் பயணம் செய்வதற்கு 22 பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

நாயின் மூடிய கண்கள் திறக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)

பிரிட்டனில் ரோம்போர்டு பகுதியைச் சேர்ந்த லூயிஸ் வால்ஷ் என்பவர் மோலி எனப்பெயர் கொண்ட 12 மாத நாய்க்குட்டியை கடந்த மாதம் £500 க்கு வாங்கியுள்ளார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் குறுகிய காலத்திற்குள் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஞாயிறு லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் பதவியை வகித்து வரும் இரா.சம்பந்தனுக்கு பதிலாக இளம் தலைவர் ஒருவரை தெரிவுசெய்து குறித்து கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல