பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற எம்.எச் 370 என்ற விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து இந்தியப் பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணி நடந்துவருகிறது.
கடந்த மாதம் 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற எம்.எச் 370 என்ற விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து இந்தியப் பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணி நடந்துவருகிறது.


