சனி, 23 மார்ச், 2013

'அதுக்கு இவர் லாயக்கில்லை!' - பிரபல பாடகர் மீது பாடகி புகார்... விவாகரத்து கேட்டு வழக்கு!!

திருமண வாழ்க்கைக்கு உடல் மற்றும் மன ரீதியாக லாயக்கில்லாதவராக இருக்கிறார் என்று கூறி பிரபல பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன் மீது குற்றம் சாட்டி விவாகரத்து கோரியுள்ளார் அவரது மனைவியும் பிரபல பாடகியுமான ரம்யா.

அமெரிக தீர்மானம் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது: மகிந்த ராஜபக்சே

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையை ஒன்றும் செய்துவிட முடியாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் துடைத்தழிக்கப்பட்டு 4 வருடங்களுக்கு பின்னர் வளர்ந்து வரும் ஒரு நவீன எல்.ரீ.ரீ.ஈ களநிலமைகளை பொறுப்பேற்க காத்திருக்கிறது

 
 
- பி.ராமன்
 
ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரால் மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் துடைத்தழிக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழிந்த பின்னர் ஒரு நவீன எல்.ரீ.ரீ.ஈ உதயமாகி வருகிறதா? ஸ்ரீலங்கா தமிழர்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பற்றிய அக்கறை வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் ஸ்ரீலங்காத் தமிழர்கள், மற்றும் சர்வதேச சமூகத்தின் பெரும் பகுதியினரிடையே எழுச்சியுடன் பலத்த ஆதரவை பெற்று வளர்ந்து வருவதைக்கண்டு உளவுத்துறை முகவர்கள் அப்படியான ஒரு கேள்வியில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஷவின் உருவபொம்மையை எரித்தவர் உடலில் தீர்ப்பிடித்து படுகாயம் (படங்கள் இணைப்பு)

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவபொம்மையை எரித்தவர் உடல் கருகி படுகாயமடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சுதந்திர கட்சியில் தயா மாஸ்ரர்? (படங்கள் இணைப்பு)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பொறுப்பாளராக செயற்பட்ட தயா மாஸ்ரர் நியமனம் பெறுகின்றார் என்று யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் ஒரு கள்ளுத் தவறணை! (படங்கள் இணைப்பு)

கொழும்பில் மிக அபூர்வமாகவே கள்ளுத் தவறணைகள் உள்ளன. அரச அனுமதி பெற்ற கள்ளுத் தவறணை ஒன்று கொட்டாஞ்சேனையில் இருக்கின்றது.

இந்தியாவில் பிக்கு தாக்கப்பட்டதற்கு கண்டி தமிழ் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் இந்தியாவில் வைத்து தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டி தமிழ் வர்த்தகர்களுடன் இந்து அமைப்புக்கள் சேர்ந்து எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை நேற்று (22.3.2013) காலை கண்டியில் நடத்தின.

இராணுவத்தில் சேர முண்டி அடிக்கும் தமிழ் யுவதிகள்!

மன்னாரில் இராணுவத்துக்கு தமிழ் பேசும் யுவதிகளை சேர்த்துக் கொள்கின்றமைக்கு நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பான துண்டுப்பிரசுரங்களை இராணுவத்தினர் வெளியிட்டு, விநியோகித்து வருகின்றார்கள்.

வன்னி மக்களை கேவலப்படுத்திய உதயன்


பிரதேசவாதத்தை தூண்டிய உதயன் : பத்திரிகையை எரித்த வன்னி மக்கள்!

தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்களைப் பழிவாங்கவும் துரோகிகள், அரச கைக்கூலிகள் போன்ற முத்திரைகளைக் குத்துவதற்கு பெரும்பாலானவர்கள் தயங்குவதில்லை என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகின்ற உதயன் பத்திரிகை திகழ்ந்திருக்கின்றது என்ற கசப்பான உண்மை நடைபெற்றிருக்கின்றது.

ஊடகங்களில் பேசப்படாத ஆனால் பேசப்படவேண்டிய ஒரு கவலை தரும் விடயம் 20-03-2013 அன்று முல்லைத்தீவில் நடைபெற்றிருக்கின்றது. உதயன் பத்திரிகைப் பிரதிகள் முல்லைத்தீவில் தீவைத்து எரிக்கப்பட்டமையே குறித்த சம்பவமாகும்.

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல