புதன், 15 டிசம்பர், 2010

காயமடைந்த பூசகர் நேற்றிரவு உயிரிழந்தார்

சங்கானை முருகமூர்த்தி ஆலயத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலயத்தின் பிர தமகுரு நித்தியானந்த சர்மா (வயது 56) சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

வேலைக்குப் போவதாக கூறி சென்ற இளம் பெண்ணைக் காணவில்லை

வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற இளம்பெண் காணாமல் போயிருப்பதாக அவரது தாயார் வவுனியா பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

டைம்ஸின் இவ்வாண்டிற்கான நபராக மார்க் ஷூக்கர் பேர்க் தெரிவு: அசாஞ்சேவிற்கு ஏமாற்றம்

பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் டைம் சஞ்சிகையின் இவ்வாண்டிற்கான நபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம்" அலுவலகத்தில் சிபிஐ சோதனை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மையம் அலுவலகத்தில் இன்று சிபிஐ போலீஸார் சோதனை நடத்தினர்.

பாதிரியார் ஜெகத் கஸ்பர் தலைமையில் செயல்படும் தமிழ் மையம் அமைப்பில் திமுக எம்.பி. கனிமொழியும் அதன் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன், கலைஞர், சிதம்பரம் மூவரையும் கொல்ல புலிகள் சதி - இந்திய மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கலைஞர் கருணா நிதி மற்றும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை ஜனவரி மாத மளவில் படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது.

இராணுவச் சிப்பாயின் துப்பாக்கியை பயன்படுத்தியே சங்கானையில் சூடு - யாழ்.இராணுவத் தளபதி விளக்கம்

இராணுவச் சிப்பாய் விற்ற துப்பாக்கியைக் கொண்டே சங்கானையில் பூசகர்கள் மீது துப் பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் ஆசிரியர்களு டன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பஸ் நிலையத்தில் மோதல் மூவர் மீது வாள் வெட்டு!

யாழ்.மத்திய பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் மூவர் வாள் வெட்டுக்கு உள் ளாகிச் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆர்தர் சி. கிளார்க் பிறந்த நாள்

பிரித்தானிய அறிவியல் புதின எழுத்தாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு ஆசிரியரான ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார்.

பிரான்ஸில் எட்டு இலங்கையர்கள் கைது.!

பிரான்ஸ் நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் எட்டு இலங்கையர்கள் கடந்த 10 ஆம் திகதி துறைமுகத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தொலைபேசியில் 2மில்லியன் மோசடி செய்த தமிழருக்கு 5வருட சிறை!

பிரித்தானிய நாட்டில் உள்ள o2பிரபல தொலைபேசி நிறுவனத்தில் முறைகேடாக பாவித்து குறைந்தது இரண்டு மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான சிம் அட்டைகளை திருடி முறைகேடாக பாவித்துள்ளது குறித்த நிறுவனத்தால் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கிறிஸ்மஸ் தீவு அருகே அகதிப் படகு பயங்கர விபத்து ஏராளமானோர் மரணம்! (காணொளி இணைப்பு)

அடையாளம் காணப்படாத அகதிப்படகொன்று இன்று காலை ஏழு மணியளவில் வடக்கு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் பெரும்பலான அகதிகள் கடலில் விழுந்து இறந்து போனதாகத் தெரிகிறது.

கனடாவில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ் இளைஞன் கைது!

கனடாவின் தலைநகர் ரொரன்ரோவை உலுப்பி கொண்டு இருக்கும் பல்கலைக்கழக மாணவன் வின்செண்ட் டாங் (வயது-20) படுகொலையின் பிரதான சூத்திரதாரி என்று நம்பப்படும் இலங்கைத் தமிழரான நவீன் அரசரத்தினம் (வயது-27) நேற்று மாலை Pearson விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல