சண்டிகரில் ஒரு வினோத வழக்கு குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் விவாகரத்த பெற்ற மனைவிக்கு, மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்ததையொட்டி, முன்னாள் கணவர், 25 ஆயிரம் ரூபாயில் 24, 600 ரூபாயை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக அனுப்பி வைத்திருக்கிறார்.