வியாழன், 27 பிப்ரவரி, 2014

ஹன்சிகா உறவு முறிந்தது: சிம்பு அறிவிப்பு

நடிகை ஹன்சிகாவுடனான தனது உறவு முறிந்துவிட்டதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:

ஹன்சிகாவுடனான எனது உறவு முறிந்துவிட்டது. தீவிரமாக யோசித்தப்பின் நான் இதை அறிவிக்கிறேன். இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். ஹன்சிகாவுடன் இனி எப்போதும், எந்த உறவும் இல்லை.

பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா?

தவிக்கும் இரவு இது. 23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (ஓ.எம்.ஆர்.) 200 அடிக்கு அருகில் ஒரு புதரில் பிணமாகக் கிடந்து, கடந்த ஞாயிறன்று செய்தியாகி, காவல் துறை துப்புத்துலக்கியதால் தமிழகத்தின் நிர்பயாவாக மாறிய இரவு இது.

மெக்ஸிகோ நாட்டின் மசாட்லான் ஒரு கடலோரச் சிற்றூர். சுகவாசஸ்தலம். கடல் உணவுகளுக்கும் அலைச்சறுக்கு விளையாட்டுக்கும் பேர் போன ஊர். சுற்றுலாப் பயணிகள் தேடி வரும் மசாட்லானில் சில நாட்களுக்கு முன் திடீரென நூற்றுக் கணக்கில் ஆயுதப் படைகள் குவிகின்றன. கண்டோமினம் கோபுரம் அவர்கள் கட்டுப்பாட்டில் வருகிறது. உள்ளூர்க்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும்கூட இப்படித்தான், நம்மைப் போலவே விழிக்கின்றனர், ‘இங்கே என்னப்பா இவர்களுக்கு வேலை’ என்று. ஆயுதப் படைகளோ அல்வா சாப்பிடப்போகும் உற்சாகத்தில் இருக்கின்றனர். சும்மாவா, ஜோகின் குஸ்மான் லோராவுக்கு வலை விரிப்பது என்பது எவ்வளவு பெரிய வேட்டை?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல