ஞாயிறு, 2 ஜனவரி, 2011

இலங்கைக்கான பயணத்தை ஐ.நா. நிபுணர் குழு கைவிட்டது!

ஐ.நா. நிபுணர்குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் முடிபை கைவிட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகத்திற்கு இடமாக நடமாடியவரை இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர்

இருபாலையில் நேற்று மாலை சம்பவம்

இருபாலைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்து இருபாலைச் சந்தியில் உள்ள இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்நபர் மட்டக்களப்பு கல்முனையைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகிறது.

கத்தியால் குத்திவிட்டு நகைகள் அபகரிப்பு

சங்குவேலி தெற்கில் நேற்றுமுன்தினம் அதிகாலை தனித்திருந்த பெண் ஒருவரைக் கத்தியால் குத்திய கொள்ளையர்கள் அவரிடமிருந்து நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் திருமதி சிவநேசன் (வயது 45) என்பவரே கொள்ளையர்களின் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையை ஆரம்பித்து வைத்திருந்தவரான உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தோற்றுனர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

லூனா1 விண்கலம் விண்வெளிக்கு ஏவப்பட்டது

லூனா 1 சோவியத் ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்ட விண்கலம். இது ஜனவரி 2 1959 இல் விண்வெளிக்கு ஏவப்பட்டது.

மெடம் ஜீனாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய தீர்மானம்

கொழும்பில் பிரபல வர்த்தக கட்டிடத் தொகுதியொன்றில் ஆடம்பர விபசார விடுதியொன்றை நடத்திவந்த மெடம் ஜீனா என அறியப்பட்ட செல்வந்த பெண்ணுக்கு எதிராக விபசாரம் மற்றும் மனிதக்கடத்தல் குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் திட்டமிட்டுள்ளார்.

ஜப்பானில் நாய் பூனைக்கு வரி

ஜப்பானில் மனிதர்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருக்கிறது, ஆனால் செல்லப் பிராணிகளின் விகிதம் பெருகி கொண்டே உள்ளது.

ராணுவ அதிகாரி வீட்டில் பெனாசிர் கொலை சதித்திட்டம் தீட்டப்பட்டது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை குறித்து உள்துறை அமைச்சரகம் நடத்திய விசாரணை அறிக்கை இப்போது வெளியிடப்பட்டு உள்ளது.

இலங்கைப் பெண் மீது குவைத்தில் பாலியல் துஸ்பிரயோகம்

இலங்கை வீட்டுப் பணிப் பெண்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்தார் என கைது செய்யப்பட்ட குவைத் நாட்டு வேலை வழங்குனர் அந்நாட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல