திங்கள், 26 மார்ச், 2012

புகைப்படங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைக்க

புகைப்படங்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணையத்தளங்கள் உள்ளன.சிலவற்றின் போர்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம். புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை நீக்க திட்டமிடுவோம்.

ஒரே நேரத்தில் அனைத்து மென்பொருள்களையும் நிறுவுவதற்கு

கணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது, மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம், ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று.

சுமத்திரனை தமிழ் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும்- தமிழீழ புரட்சிகர மாணவர்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதாலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருவதாலும் சிங்கள பேரினவாதிகளுடன் ஒட்டி உறவாடி வருவதாலும், சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற்றுமாறு கோரிக்கைவிடுக்கின்றோம் என தமிழீழ புரட்சிகர மாணவர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விமானத்தைச் சுட்டு வீழத்தியது விடுதலைப் புலிகளே!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாகவே 2000 ஆம் ஆண்டில் இலங்கைக்குச் சொந்தமான ஏ.என்.-26 ரக விமானம் விழுந்து நொருங்கியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடலுக்குள் ஓட்டோவைச் செலுத்திய தங்கச்சி

"யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஓட்டோ ஓடத் தொடங்கிய பின் முதல் முதலாக ஓட்டோவை கடலுக்குள் செலுத்திப் பார்த்துள்ளார் அன்புச் சகோதரி ஒருவர்"

யாழில் பெண் ஒருவர் ஓட்டிய முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பண்ணை வீதியில் மண்டைதீவு சந்திக்கு அருகில் பறவைகள் சரணாலயத்துக்கு அண்மித்த பகுதியில் உள்ள கடலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

"யாழ்ப்பாணத்தில் 'தந்தையை' காப்பாற்றாது மற்றவர்களால் மிதிபட வைத்த 'தனயர்கள்

யாழ்ப்ப்ணத்தில் நடாத்தப்பட்ட இராணுவக் கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களால் ஏறி மிதிக்கப்பட்டு காயப்பட்டிருக்கும் தந்தை ஒருவரின் புகைப்படம்

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நிதானத்துடன் கருத்துகளை வெளியிட வேண்டும்- சுமந்திரன்!

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழத்தமிழர் விடயத்தில் நிதானத்துடன் கருத்துக்களை வெளியிட வேண்டும் இல்லையேல் தமிழர்கள் சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும்’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட ´தனி ஈழம்தான் எனது கனவு´ என்ற கருத்துப்பற்றி கேட்ட போதே சுமந்திரன் இதனைத்தெரிவித்தார்.

தாயை அல்ல அவரது சடலத்தையாவது கொண்டு வாருங்கள்! பலாங்கொடயில் இருந்து ஒரு அழுகுரல்!!

சவுதி அரேபியாவிற்கு பணிபுரியச் சென்று உயிரிழந்த தனது தாயின் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வர உதவி புரியுமாறு பலாங்கொடயைச் சேர்ந்த நபரொருவர் கண்ணீர் குரல் எழுப்பியுள்ளார்.

எச்.ஜீ.சீலவதி எனப்படும் தனது தாய் கடந்த வருடம் ஜூன் மாதம் 18ம் திகதி கொழும்பு வெல்லவீதியில் உள்ள முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக சவுதி அரேபியாவிற்கு சென்றதாக குறித்த தாயின் மகனான கிரிசாந்த பீரிஸ் அத தெரணவிடம் தெரிவித்தார்.

மணப்பெண்ணுக்கு தெரியாமல் அவருக்கு 3 திருமணங்கள்

நீண்டநாள் காத்திருந்து தனது மனங்கவர் காதலருடன் திருமண பந்தத்திலமுதல் தடவையாக இணையப்போகும் மகிழ்ச்சியுடன் திருமண அனுமதிப் பத்திரத்துக்காக விண்ணப்பித்த பெண்ணொ ருவர் தனக்கு ஏற்கனவே 3 தடவைகள் திருமணமாகியிருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ள மையை அறிந்து அதிர்ச் சியடைந்த சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.

சொல் குழப்பம் தீர்க்க உதவும் இணையதளம்

ஆங்கில மொழியில் ஏறத்தாழ ஒரே மாதியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் புழக்கத்தில் உள்ளன. எடுத்துக் காட்டாக Capital / Capitol, Affect / Effect, new / anew, practice / practise, soure / sore, side / aside, warrenty / guarantee, affluent / effluent, suit / suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களுக்கான பொருள் வேறுபாடு மற்றும் எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரிந்தால் மட்டுமே, நாம் பயன்படுத்தும் ஆங்கிலம் பொருள் பொதிந்ததாக இருக்கும்.
இதற்கு நமக்கு வழி காட்டும் வகையில் ஓர் இணையதளம் இயங்குகிறது.

காட்டுப்பூனைகளுடன் நட்புறவுடன் பழகும் நாய் (படங்கள் இணைப்பு)

நாயொன்றும் காட்டு பூனைகளும் நட்புறவுடன் பழகி வரும் அதிசய சம்பவம் ஸ்லோவாக்கியாவில் இடம்பெற்றுள்ளது.
வெல்கா பட்ரா தேசிய பூங்காவில் வாழும் லிலிகா என்ற நாயே லிஸா, விகி மற்றும் ரோ ஆகிய காட்டுப்பூனைகளுடன் நட்புறவுடன் பழகி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

உடல் பருமனில் உலக சாதனை படைக்கும் யற்சியில் ஈடுபட்டுள்ள பெண் சமையல்கலை நிபுணரை மணந்தார் (படங்கள் இணைப்பு)

உலகிலேயே மிகவும் பருமனான பெண்ணாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க பெண்ணான சூஸன் இமான், சமையல்கலை நிபுணர் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

ஓன்லைன் மூலம் PDF கோப்புகளை வெட்ட, சேர்க்க ,பாதுகாக்க

இத்தளத்திற்கு சென்று Merge pdf , Split Pdf, Unlock Pdf, Protect Pdf என்று இருக்கும் பல வகையான சேவைகளில்,
PDF கோப்புகளை சேர்க்க வேண்டும் என்றால் Merge Pdf என்பதையும்,
PDF கோப்புகளை பிரிக்க வேண்டும் என்றால் Split PDF என்பதையும்,
PDFகோப்புகளை Unlock செய்வதற்கு Unlock Pdf என்பதையும்,
PDF கோப்புகளை பூட்டி பாதுகாப்பாக வைப்பதற்கு Protect pdf என்பதையும்
சொடுக்கி சேவைகளை பெறலாம்.

உங்களை பின் தொடர்பவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு....

இணையத்தை நீங்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது, உங்களை பின் தொடர்ந்து யார் வருகிறார்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

இதை Real time tracking என்று சொல்வார்கள். பின் தொடர்பவர்கள் பற்றிய தகவல்களை Collusion என்ற பயர்பொக்ஸ் உலாவி நீட்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஹிட்லரின் கார் இப்ப யாரிடம்?

உலகையே ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லர் வைத்திருந்த கார் தற்போது நேபாளத்தில் உள்ள ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் அந்த காரை சரிசெய்து மீண்டும் கொண்டு வருவதற்கான நிதி தங்களிடம் இல்லை என்று அந்த கல்லூரி நிர்வாகம் கைவிரித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் அழிவு பற்றி முன்கூட்டியே சொன்ன அமிர்!

1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ்ப்பாண எம்.பி.யான வி.யோகேஸ்வரனும் கொல்லப்பட்டனர். கூட்டணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சிவசிதம்பரம் படுகாயங்களுக்கு இலக்கானார். புலிகளின் இயக்கப் பெயர்களைக் கொண்ட விசு, அலோசியஸ், அறிவு ஆகியோரைக் கொண்ட குழுவே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டது. விசு என்பவரின் இயற்பெயர் இராசையா அரவிந்தராஜ். இவர் வவுனியாவில் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றியவராவார். கூட்டணித் தலைவர்களின் மெய்ப் பாதுகாவலர்கள் நடத்திய பதில் தாக்குதலில் புலி இயக்க உறுப்பினர்கள் மூவருமே ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். கொழும்பு, பௌத்தலோக மாவத்தையிலுள்ள 342/2ஆம் இலக்க இல்லத்தில் கூட்டணித் தலைவர்கள் அக்காலத்தில் தங்கியிருந்தனர். இங்குதான் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

நீங்களும் வெல்லலாம் ஒருகோடி 21.03.2012

நீங்களும் வெல்லலாம் ஒருகோடி 20.03.2012

நீங்களும் வெல்லலாம் ஒருகோடி 19.03.2012

மைக்ரோ சிப்பில் ஒரு மருந்துக்கடை

நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றை சரியான அளவுகளில் வேளாவேளைக்கு தினமும் எடுத்துக்கொள்வது என்பது பல நோயாளிகளுக்கு பெரும் பிரச்சினையாகத் தான் இருக்கிறது.

சலிப்படையாமல் சிந்தித்துப்பாருங்கள்!

எனக்கு எப்போதும் தோல்விதான், கொஞ்சம்கூட ராசி இல்லாதவன், வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது, என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம்.

அம்பியுலன்ஸ்

1809ல் பிரெஞ்சுக்காரர்கள் போர்க்களத்தில் காயமடைந்த போர் வீரர்களைக் குணப்படுத்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நடக்க முடிந்தவர்கள் அல்லது ஸ்டரெச்சரில் தூக்கிச் செல்லக்கூடியவர்களைப் போர்க்களத்துக்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து உடடினயாகச் சிகிச்சை அளித்தனர்.

பூமி தோன்றியது எப்போது?

இந்தக் கேள்விக்கு இதுவரை துல்லியமான விடை கிடைத்தபாடில்லை. இருந்தாலும், பல விஞ்ஞானிகளும் தோராயமாக பூமி தோற்றம் குறித்த கருத்துகளை பல கால கட்டங்களில் தெரிவித்திருக்கிறார்கள். புதிதாக இப்போது கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூமியின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து ஒரு முடிவை வெளியிட்டிடிருக்கிறார்கள். பூமி தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பது தான் இவர்கள் வெளியிட்டிருக்கும் புதிய முடிவு. அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கொண்டு இதை யூகித்திருக்கிறார்கள் இவர்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல