திங்கள், 30 நவம்பர், 2015

மாவீரர்கள் நினைவாக செய்வதற்கு பல உண்டு!

வழக்கம்போலவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மாவீரர் வாரம் முடிந்துவிட்டது. இரண்டாயிரத்தி ஒன்பதுக்குப் பின்னர் கடந்து சென்ற ஒவ்வொரு மாவீரர் வாரங்களிலும் பார்க்க கடந்த வாரம் முடிந்த மாவீரர் வாரம் சற்று வித்தியாசமாக கடந்து சென்றதை கவனிக்க முடிந்தது.

தமிழக அகதி முகாம்: தகிப்பில் உழலும் வாழ்வு

இலங்கையிலிருந்து இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தவர்களின் வரத்து நான்கு கட்டங்களாகத் தீவிரத்தோடு நிகழ்ந்துள்ளது. உதிரி உதிரியாக வருபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்நான்கு கட்டப் புலப்பெயர்வுகளும் பாரிய பிரச்சினைகளுக்குட்பட்டவை. இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரத்தை அடையும் போதெல்லாம் அகதிகளின் முதல் தேர்வு ஐரோப்பிய நாடுகளாகவும் அடுத்த தேர்வு இந்தியாவாகவுமே இருந்துவந்துள்ளது. இத்தேர்வு பொருளாதார அடிப்படையிலானதென்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் தஞ்சமடையும் அகதிகள் தமிழ்நாட்டிலிருக்கும்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல