செவ்வாய், 11 செப்டம்பர், 2012

படு பிஸியான முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டமே, இலங்கையில் தற்போது படு பிசியாக இருப்பதாக பி.பி.சி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. காரணம் என்னவென்று கேட்கிறீர்களா ? பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் முல்லைத்தீவை நோக்கி படை எடுப்பதே அதன் காரணமாகும். முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் பல விடுதிகள், தேனீர்க் கடைகள் புதிதாக முளைத்துள்ளன. இவை அனைத்துமே தென்னிலங்கையில் இருந்துவரும் சிங்கள மக்களை குறிவைத்தே நடத்தப்படுகிறது. இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்கு வருகிறார்களோ என்னமோ…ஆனால் சிங்கள மக்கள் பலர் புதுக்குடியிருப்புக்குச் சென்று பார்பதில் படு ஆர்வம்காட்டி வருகிறார்கள் என்கிறது BBC தொலைக்காட்சி.  பாஸ்ட் டி ராக் என்னும் நிகழ்சிக்காக பி.பி.சி தொலைக்காட்சியானது 7 நிமிட ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இதற்கு போர் சுற்றுலா என்று பெயரிட்டுள்ளார்கள்.

லேப் டாப்பை உலகிற்கு அறிமுகப்படுத்திய பில் மாக்ரிட்ஜ் மறைவு

லேப்டாப்பை உருவாக்கி உலகிற்கு அளித்த பில் மாக்ரிட்ஜ் சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 69. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போதும் நோயின் தீவிரம் காரணமாக மரணமடைந்தார்.

வயிற்றினுள் சுனாமி அலையா?????

இலங்கையும் ஈழமும் வெவ்வேறானவையா? வரலாறு என்ன சொல்கிறது?

இலங்கையும் ஈழமும் வெவ்வேறானவையா? வரலாறு என்ன சொல்கிறது?

இலங்கையும் ஈழமும் ஒன்றே என வரலாறு கூறுகிறது.அதாவது தற்போதய இலங்கைத்தீவு தமிழர்களின் தாயகம்.சீனா தீபெத்தை ஆக்கிரமித்துக் கொண்டு தற்போது அருணாசல பிரதேசத்தை தெற்கு தீபெத் என்று கூறிக் கொண்டால்,அவை ஒன்றாகி விடுமா அல்லது சீனாவுக்கே சொந்தமாகி விடுமா? அதே போலவே தமிழர்களின் நாடான இலங்கையை அபகரித்த சிங்கள ஆரியர்கள், அதற்கு நாம் வைத்த பெயரை சூட்டிக் கொண்டு தங்கள் நாடு என்று சொல்லிக் கொண்டால், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட முடியுமா? பாலைவனத்தில் மணல்மழை அடிக்கிறது.கூடாரத்திற்குள் இருந்தவனிடம், சிறிய இடம் கேட்டு வந்த வழிப்போக்கன் தன்னையும்,தன் ஒட்டகத்தையும் உள்ளே நுழைத்துக் கொண்டு, இது என் கூடடாரம் என்றால் எப்படி இருக்கும்?

சீனத் தாய் ஒருவரின் அபார மூளை (படங்கள், காணொளி இணைப்பு)


சீனத் தாய் ஒருவர் தனது குழந்தைகள் நால்வருக்கு வினோதமான முறையில் தலைமுடியை சவரம் செய்துள்ளார்.அதாவது ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த நால்வரும் ஒரே மாரியான தோற்றத்தில் இருப்பதனால் பாடசாலை ஆசியரினாலும், சகபாடிகளினாலும் சரியாக அடையாளம் காண முடியாமையினால் இப்படிக் கடினமான முடிவை எடுத்துள்ளார் இந்த புத்தி சாதுரியமான தாய்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல