புதன், 3 மார்ச், 2010

பயர்பாக்ஸ் - சில ஆட் ஆன் தொகுப்புகள்

பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கப்பட்டதற்கான புரோகிராம் குறியீடுகளை யாரும் பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதே அதன் முக்கிய சிறப்புக்குக் காரணம். இதனையே ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கிறோம். இதனால் தான் பல இணைய ஆர்வலர்களாக உள்ள புரோகிராமர்கள் பல ஆட் ஆன் தொகுப்புகளை இந்த பிரவுசரில் இயக்குவதற்கென எழுதி, வடிவமைத்து வழங்கி வருகின்றனர். அண்மையில் பார்த்து, பயன்படுத்திய சில ஆட்–ஆன் புரோகிராம்களை இங்கு தரப்படுகிறது.

CON

CON என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

2. விண்டோஸ் பயன்படுத்துகிறீர்களா! அதனுடன் சிஸ்டம் புரோகிராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் "Bush hid the facts" என்று (மேற்கோள் குறிகள் இல்லாமல்) டைப் செய்திடவும். பின் அந்த பைலை ஏதேனும் ஒரு பெயரில் சேவ் செய்திடவும். பின்னர் இந்த பைலை மீண்டும் திறந்து பார்க்கவும். இப்போது நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படிக்க முடிகிறதா? இல்லை என்றால் காரணத்தைச் சொல்லுங்கள்.

3. மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் முதல் வரியில் =rand (10, 9) என டைப் செய்திடவும். இந்த வரியை டைப் செய்து என்டர் தட்டி கீழே வரவும். என்ன நடக்கிறது அங்கே? என்று பார்க்கவும்.

கூகுள் தரும் சைட்விக்கி

தொடர்ந்து ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் சைட்விக்கி என்ற புதிய சிறப்பான செயல்பாட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், இணைய தளம் ஒன்றைப் பார்க்கையில் இது சைட் பார் ஒன்றைத் திறக்கும். இதில் தாங்கள் பார்க்கும் இணைய தளம் குறித்த தங்கள் கருத்துகளைப் பார்ப்பவர்கள் குறித்து வைக்கலாம்; ஏற்கனவே பார்த்தவர்கள் எழுதி வைத்ததைப் படிக்கலாம்.

இவ்வாறு எழுதப்படும் குறிப்புகளின் தன்மையின் அடிப்படையில் இந்த சாதனம் அவற்றை வரிசைப்படுத்தி வைக்கிறது. முழு இணைய தளம் அல்லது ஒரு பகுதி மட்டும் குறித்தும் கருத்துகளை இதில் பதியலாம். ஏற்கனவே ஒருவர் ஓர் தளம் குறித்து குறிப்பு எழுதி, பின் மீண்டும் எழுதுவதனையும் இது புரிந்து கொள்கிறது. இதற்கான தொழில் நுட்பம் இந்த சைட்விக்கியில் தரப்பட்டுள்ளது என இந்த தொழில் நுட்பத்தினை வடிவமைத்த கூகுள் து�ணைத் தலைவர் சுந்தர் பிச்சை கூறினார். மற்றவர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகள் பயனுள்ளவையா, இல்லையா என்று பிறர் கருத்துகளையும் இதில் பதியலாம்.

நாம் விரும்பும் நேரத்தில் மட்டும் பயர்வால் (Firewall) தொகுப்பினை இயக்கவும் நிறுத்தவும் முடியுமா ?

பயர்வால் – கம்ப்யூட்டர்களைத் தாக்க வரும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை நிறுத்தி நுழையவிடாமல் செய்து சிஸ்டங்களைக் காக்கும் ஒரு சிறப்பான புரோகிராம். பல இணைய தளங்கள் இத்தகைய பயர்வால் புரோகிராம்களை நமக்கு இலவசமாகத் தந்து உதவுகின்றன. கூடுதலாக வசதிகள் உள்ள பயர்வால் புரோகிராம்களை கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பயர்வால் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் வேகத்தை மட்டுப் படுத்துகிறது என்று நீங்கள் எண்ணினால் அதன் இயக்கத்தினை தேவையற்ற போது நிறுத்தி வைக்கலாம்; பின் தேவைப்படும்போது இயக்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.

1. Start மெனு சென்று Control Panel செல்லவும்.

2. பின் Network Connections என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

3. பாப் அப் ஆகும் விண்டோவில் Local Area Connection என்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Properties டேப் மீதுகிளிக் செய்திடவும். நீங்கள் Local Area Connection பயன்படுத்தாமல் விர்ச்சுவல் பிரைவேட் நெட் வொர்க் வி.பி.என். அல்லது டயல் அப் இன்டர்நெட் பயன்படுத்தினால் அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டேப்களில் Properties டேப் தேர்ந்தெடுத்து பின் Advanced Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இனி பயர்வால் தேவை என்றால் "Protect my computer and network by limiting or preventing access to this computer from the Internet’ என்பதில் செக் செய்திடவும். பயர்வால் தேவை இல்லை என்றால் இந்த டிக் மார்க்கை எடுத்துவிடவும். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

5. நீங்கள் விண்டோஸ் பயர்வால் பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள விண்டோஸ் பயர்வால் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் On (Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பயர்வால் இயக்கம் தேவை இல்லை என்றால் Off (Not Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

தொழில் நுட்ப அரிச்சுவடி

கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் பயன்பாட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில ஆங்கிலச் சொற்களுக்கான விளக்கங்கள் இங்கு தரப்படுகின்றன. இவற்றை அவ்வப்போது நம் நினைவில் தேக்கிக் கொண்டால், கம்ப்யூட்டர் குறித்த தகவல்களைப் படிக்கும்போது உதவியாக இருக்கும். அதன் பொருள் புரிந்து கொள்வது எளிதாகிவிடும்.

இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்

இடுப்பு, தொடை மற்றும் பின்புறத்திலும் சதைப்பிடிப்பாக இருந்தால் இதயநோய் வராது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை !

காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல ளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

நீரிழிவை முற்றாகக் குணப்படுத்த மருந்து !

136 பக்கங்கள் கொண்ட சர்க்கரை நோய்க்கு புல்ஸ்டாப் என்ற நூலில் இருந்து ஒரு முக்கியமாக இருந்த ஒரு பகுதியை இங்கே தருகிறேன். நீங்கள் வைத்தியருடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அவரது மின்னஞ்சலையும் இங்கே இணைத்துள்ளேன்.

சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய சொக்ஸ்

சர்க்கரை நோயாளிகளின் கால் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து நோய் பாதிப்பை தடுக்கக் கூடிய மருத்துவ காலுறைகளை (சாக்ஸ்) அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.
காயம், புண் விரைவாக ஆற நைட்ரிக் ஆக்சைடு உதவுவதால் அதை நூலிழைகளில் கலந்து சாக்ஸ் தயாரித்தனர். பேண்டேஜ்களில் மருந்து சேர்த்து தயாரிப்பது போல, நைட்ரிக் ஆக்சைடு கலந்த நூலிழையில் சாக்ஸ் இருப்பதால் அதை அணியும் சர்க்கரை நோயாளியின் கால்கள் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தனர். சாக்சில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு வெளியாகி காயம், புண் ஆகியவை விரைவாக குணமாகும்.

ஒரு சொல் மருத்துவம்

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்

  • http://symbolics.com/ என்னும் தளமே இன்றைக்கு இயங்கும் தளங்களில் மிகப் பழைய தளமாகும். இது 1985 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று பதியப்பட்டது. இன்னும் இது இயங்குகிறது. ஆனால் இதன் வடிவமைப்பு மேம்படுத்தப்படவே இல்லை.

''பாடசாலை வாத்தியாருக்காக சுள்ளி பொறுக்கி சாணம் அள்ளினேன்''

சிவாஜியை ஞாபகப்படுத்தும் சின்னையா


“முறுத்தலாவை குருகமை தோட்ட பாடசாலையில் தான் என் ஆரம்ப கல்வியை கற்றேன். நான் வாழ்ந்த அந்த லயத்தில் இருந்து ஐந்து நிமிடம் நடந்தால் பாடசாலை வந்துவிடும். எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாழ்ந்த கிட்ணன் தான் என் பள்ளி நண்பர். அவனோடுதான் எங்கு சென்றாலும் கூடவே செல்வேன். வகுப்பிலும் அவன் என் பக்கத்து சீட்டில்தான் அமர்ந்திருப்பான். அந்த பாடசாலையில் பொன்னுத்துரை என்ற வாத்தியார்தான் எங்களுக்கு படிப்பித்தார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த வாத்தியார் எங்களுக்கு முறையாகவே படித்துக்கொடுக்கவில்லை.

என்ன இந்த Ware... வெயர்?

ஹாட்வெய்ர் (வன் பொருள்) எனும் கணினியின் பெளதீக உறுப்புகளுக்கு உயிர் கொடுக்கும் பல ப்ரோக்ரம்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பையே சொப்ட்வெயர் (மென்பொருள்) எனப்படுகிறது.


Funny Images 8

தண்டனை பெறாத வில்லன்



இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப் படுத்தப்படவில்லை. 1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும். இடி அமீன் (Idi Amin Dada) உலகின் அதிபயங்கர கொடுங்கோலன், கொலைகாரன், காமுகன், சுகபோகத்தின் உச்சத்தில் வாழ்ந்தவர், இவர் செய்யாத அராஜகங்களே இல்லை.

வீடியோவிலுள்ள ஒலியை மட்டும் பிரித்தெடுக்க

இணையத்தில் கிடைக்கும் வீடியோக்களிலிருந்து ஒலியை மட்டும் எம்பி3 வடிவில் பிரித்தெடுக்க ஒரு இணையதளம் .(http://listentoyoutube.com/")இவ்விணையதளத்துக்குச் சென்று நாம் மாற்ற வேண்டிய பாடலின் url முகவரியை அளித்து சொடுக்கினால் சிறிது நேரத்தில் பதிவிறக்கம் எனத் தோன்றும்.அதனைப் பதிவிறக்கும் போது அக்கோப்பு எம்பி3 வடிவில் கிடைக்கிறது.

வழிகாட்டத் தவறுகின்றவற்றை பஞ்சாங்கங்கள் என்பதா? பஞ்சதந்திரங்கள் என்பதா?

தமிழிலே இந்து மதம் சார்ந்த பல வகையான பஞ்சாங்கங்கள் வருடாந்தம் வெளியிடப்படுகின்றன. அவற்றை ஆழ்ந்து கவனித்தால் அவற்றுள் எவை இரண்டு பஞ்சாங்கமாவது ஒன்று போல மற்றொன்று அமைந்துள்ளதா என்றால் இல்லையென்று கூறுவதில் தவறில்லை. சிவாலயங்களில் நவக்கிரஹங்களைப் பிரதிஷ்டை பண்ணியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நவக்கிரஹங்கள் ஒன்பதும் ஒன்றையொன்று பார்ப்பதில்லை. அது போலத்தான் பஞ்சாங்கங்களும். ஒன்றுபோல வேறொரு பஞ்சாங்கம் இருப்பதில்லை. அதனால் பஞ்சாங்கத்தை அனுசரிக்கின்ற இந்து மக்கள் பெரும் குழப்பங்களையும் சிரமங்களையும் வேற்று மதத்தவர்களின் ஏளனப்பார் வைகளையுங்கூட எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல