"1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்."(By Way of Deception: The Making of a Mossad officer) "இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது. இலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்காக, மொசாட் இந்தியாவிலும் செல்வாக்கு மிக்க பெரும்புள்ளிகளை வளைத்துப் போட்டது. RAW விற்குள்ளும் மொசாட் ஆட்கள் இருந்தனர். இந்தியப் படைகளை அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்ததாலும், இஸ்ரேலிய ஆயுதங்கள் பிடிபட்டதாலும், ராஜீவ் காந்தியை மொசாட் தீர்த்துக் கட்டியிருக்கலாம். பழியை புலிகள் மீது சுமத்துவதற்கு சுப்பிரமணிய சுவாமி போன்ற மொசாட் கையாட்கள் உதவினார்கள்."
புதன், 25 ஜூன், 2014
இனவாதத்தை கைவிடாதவரை இலங்கைக்கு விடிவில்லை
இலங்கையைக் குழப்புகிறதுக்காக அமெரிக்கா முயற்சித்துக் கொண்டிருக்கு. இதுக்காகத்தான் அது பொதுபலசேனாவை ஊக்கப்படுத்துது. பொதுபலசேனாவை வைச்சு முஸ்லிம்களுக்கு மேல தாக்குதல் நடத்தி, அவர்களை அரசாங்கத்துக்கு எதிராக மாத்த முயற்சிக்குது. அப்பிடிச் செய்தால் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிரிச்சு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தைக் கவிழ்த்து விடலாம் எண்டு அது நினைக்குது. முந்தி இப்பிடித்தான் நோர்வே ஊடாக விடுதலைப்புலிகளைப் பலப்படுத்தினது' எண்;டு விமல் வீரவன்ச ஒரு கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறாரல்லோ...
Labels:
வடபுலத்தான்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



