செவ்வாய், 16 நவம்பர், 2010

விநாயகம் தலைமையில் ஐரோப்பாவில் புலிகள் - பேராசிரியர் ரொஹான் எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் பிரிவு ஐரோப்பாவில் மீள இயங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இயங்குவதற்கு முனைப்புக் காட்டிவருவதாக குறிப் பிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,

குளிசை விக்கி குழந்தை மரணம்

மூளாய்ப் பகுதியில் காய்ச்சலுக் குள்ளான மூன்று வயது குழந்தை ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட பரசிட்ட மோல் குளிசை தொண்டையில் இறுக்கியதால் மூச்சுத்திணறி குழந்தை இறந்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.

அரச காணியில் அத்துமீறி குடியேறியோரை வெளியேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு!

யாழ். மாவட்டத்தில் அரச காணி களில் அத்துமீறி குடியேறியுள்ள மக்களை வெளியேற்றுமாறு ஜனா திபதி மகிந்த ராஜபக்­ தமக்கு அறி வித்துள்ளார் என பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்ணுக்கு மரண தண்டனை (படங்கள் இணைப்பு)

இஸ்லாம் மதத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் தொடர்பில் மனிதஉரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு தீங்கிழைத்த நாடு நோர்வே- புலிகள் அமைப்பினை எப்போதும் எவராலும் வெல்லமுடியாது எனத் தவறாகக் கணித்தவர்தான் இந்த சொல்கெயம் - கொழும்பு ஊடகம்!

நோர்வேயினை விட உலகின் எந்த நாடும் இலங்கைக்கு இவ்வாறு தீங்கிழைக்கவில்லை.

தங்களிலிருந்து தூரத்தேயிருக்கும் இலங்கைத் தீவில் தாங்கள் வகிக்கவேண்டிய பங்கு என்னவென அறிவில்லாத இந்தக் ஸ்கன்டினேவியர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.

நடிக்கும் ரோபோ ' ஜெமினொயிட் எப் ' (காணொளி இணைப்பு)

உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் துறையாக ரோபோடிக்துறை விளங்குகின்றது.

இந்நிலையில் ' ஜெமினொயிட் எப் ' (Geminoid F) என பெயரிடப்பட்டுள்ள நடிக்கும் திறன் கொண்ட ரோபோவினை ஜப்பானியர்கள் உருவாக்கியுள்ளனர்.

விற்பனையாளரின் மார்பகங்களால் அதிக கட்டணம் வசூலிப்பு

பிரித்தானிய சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண்ணொருவர் மரக்கறிகள் மற்றும் பழங்களை வாங்கியபோது உரிய தொகையைவிட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறித்த மரக்கறிகள் மற்றும் பழங்கள் நிறுக்கப்பட்ட தராசு நிறையை அதிகமாக காட்டியுள்ளதால் இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கோளாறுக்கு என்ன காரணம் என ஆராய்ந்துப் பார்த்தபோது எதிர்பாராத வித்தியாசமான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது.

யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று.

நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தலை நடத்த இந்தியா அனுமதிக்காது

இந்திய மண்ணில் நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தலை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எவரும் வெள்ளை,கறுப்புக்கொடிகளுடன் வரவும் இல்லை சரணடைய வரும் புலிகளை சுடுமாறு உத்தரவிடப்படவுமில்லை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப்புலிகள் பக்கமிருந்து சரணடைய வரும் எவரையும் சுடுமாறு உத்தரவிடப்படவில்லை எனவும் அக்காலப் பகுதியில் எவரும் சுடப்படவில்லை எனவும் அப்போதைய 58 ஆவது படையணியின் தளபதியான, தற்போதைய ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சந்தனசில்வா நேற்றையதினம் இடம்பெற்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணையின்போது சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

ஜே.ஆரின் “கைவரிசை’

பதினெட்டு வருடங்களுக்குப் பின் ‘பொல்லாத’ மழை. கொழும்பு நகரின் பெரும் பகுதி வெள்ளக்காடாகியது. பல வீதிகள் நீரில் மூழ்கின. இந்த வீதிகளில் போக்குவரத்து அறவே இடம் பெறவில்லை.

பீ.சுசீலாவிற்கு வயது 75

இசையில் இலயிக்காத இதயங்களை இவ்வுலகில் காண்பதரிது. இனிய குரல் தரும் இசை இதில் ஒரு தனி ரகம். அந்த ரகத்தில் யுகம் மறக்கச் செய்யும் ஒரு குரல் தான் தென்னிந்தியப் பின்னணிப் பாடகி இசையரசி பீ. சுசீலாவின் குரல்.

சீனாவின் ஷங்காய் நகரிலுள்ள 28 மாடிக்கட்டிடம் தீக்கிரையானதில் குறைந்தபட்சம் 42 பேர் பலியாகியுள்ளனர்!

சீனாவின் ஷங்காய் நகரிலுள்ள 28 மாடிக்கட்டிடம் தீக்கிரையானதில் குறைந்தபட்சம் 42 பேர் பலியாகியுள்ளனர். இத்தீவிபத்துக்கான காரணம் தெரியவரவில்லை. இத்தீயினால் கட்டிடத்தின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது.

பிரேஸிலில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் புலனாய்வு வலையில்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்களை பிரேசில் நாடு கடத்தியுள்ளது. இவர்கள் பிரேசிலிலிருந்து ஈக்வடோர் நாட்டுக்குச் செல்லத் தயாராகவிருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.


இந்த மூன்று இளைஞர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தத் தமிழ்hகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

பேச்சுவார்த்தைகளைப் புலிகள் சரியாகப் பயன் படுத்தியிருந்தால் அனைத்து அனர்த்தங் களையும் தவிர்க்க முடிந்திருக்கும்

பேச்சுவார்த்தைகளைப் புலிகள் சரியாகப் பயன் படுத்தியிருந்தால் அனைத்து அனர்த்தங் களையும் தவிர்க்க முடிந்திருக்கும் என்று தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதி கூறு கின்றார்.

யாழ். தமிழ் மக்கள் எம்மைத் தாக்கவில்லை; அடித்துக்கூறுகிறார் ஹந்துனெத்தி

யாழ்ப்பாணத்தில் தம்மீது தாக்குதல் நடத்தியது யாழ்ப்பாண தமிழ் மக்கள் அல்லவென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

ராமரின் புகழை மனமுருகிப் பாடிய பரூக் அப்துல்லா _ வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் இந்து மத நிகழ்ச்சியின் போது மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா...

பக்தர்களுடன் சேர்ந்து ராமரின் புகழ் கூறும் பாடல்களை அற்புதமாக பாடி அசத்தினார். முஸ்லீம் மதத்தை சேர்ந்த அவர், இந்து மத பாடல்களை சிரத்தையுடன் பாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தமிழினியின் விளக்க மறியல் 29 ஆம் திகதி வரை நீட்டிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினியினை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் ஒரு இரவு படுக்க நான் தயார் - பெண் எழுத்தாளர் அறிவிப்பு (படங்கள் இணைப்பு)

ஜேர்மனிய ஜனாதிபதி கிறிஸ்ரியன் வூல்ப், அந்நாட்டின் அணுசக்தி நிலையங்களை விரிவுபடுத்தும் அரசாங்கத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து தனது மறுப்பாணை அதிகாரத்தை பிரயோகிப்பாராயின் அவருடன் ஒரு இரவைக் கழிக்கத் தயாரென ஜேர்மனிய பெண் எழுத்தாளரான சார்லொட் ரொசி பகி ரங்க அறிவிப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தாயாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற மகன்

தனது 53 வயது தாயாரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் 22 வயது மகனொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பேர்க்ஷியல் ஸ்லோ எனும் இடத்திலுள்ள வீட்டில் தனது தாய், பராமப்பு தாதி மற்றும் சகோதரி சகிதம் வசித்து வந்த இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளான்.

தமிழ் அரசியல் கைதிகள் இருவர் உண்ணாவிரதம்

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவர் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கணவருடன் தேனிலவைக் கழிக்க சென்ற மணமகள் கடத்தி, கற்பழித்து கொலை (படங்கள் இணைப்பு)

செல்வந்த பிரித்தானிய கணவருடன் தேனிலவைக் கழிக்க தென் ஆபிரிக்கா சென்ற பெண் ஒருவர், துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுற வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல