ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை விடுக்க முடியாது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக அமெரிக்காவின் நீதிமன்றமொன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்குத் தொடர்பாக அவருக்கு அழைப்பாணை விடுக்க முடியாது என்று திவயின பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.ஐந்து மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளளது.அது தொடர்பான செய்தியிலேயே திவயின பத்திரிகை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

தண்டனையால் சுயநினைவு இழந்த இலங்கைக் காமச் சாமியார் பிரேமானந்தா!

திருச்சி ஆசிரமத்தில் நடந்த கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் இலங்கையரான பிரேமானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் சுயநினைவு இழந்த நிலையில் உள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகத் தேர்தலின்போது புலிகள் தாக்குதல் நடத்தலாம்

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின் போது மிக முக்கிய பிரமுகர்கள் மீது தமிழீழ விடு தலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவுகள் தமிழ் நாடு பொலிஸாரை எச்சரித்துள்ளதாக ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. அத்துடன் இத் தகவலை இந்தியாவின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் உறுதிப் படுத்தியிருப்பதாகவும் அப் பத்திரிகை குறிப் பிட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல