வியாழன், 31 ஜனவரி, 2013

அமைதியை கெடுக்கும் ஆலயங்கள்!

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது ஔவையாரின் முது மொழி. “ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். மனதில் அமைதியில்லாதவர்கள், மனதில் பல்வேறு குறைகள் உள்ளவர்கள் மன அமைதியை வேண்டி பிரார்த்தனை செய்யும் இடம், தங்களது உள்ளக் குமுறல்களை சொல்லி இறைவனுடன் உரையாடும் இடமாக இவ் ஆலயங்கள், மத நிறுவனங்கள் விளங்குகின்றன.

பிரச்சினையைத் தீர்க்க கமல் உண்மையான அக்கறை காட்டவில்லை - ஜெ. புகார்

சென்னை: விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் தலைவர்களிடம், பிரதிநிதிகளிடம் முன்பே கமல்ஹாசன் காட்டியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வளர்ந்திருக்காது. ஆனால் அவர் உண்மையான அக்கறையுடன் அவர் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுகுறித்து அவர் கூறியதாவது...

ரூ. 100 கோடி முதலீடு என்பது ரிஸ்க் என்று தெரி்ந்துதானே செய்தாரே கமல்?... ஜெ. கேள்வி

சென்னை: ஒரு படத்தில் ரூ.100 கோடியைப் போடுவது என்பது ரிஸ்க் என்று தெரிந்துதானே செய்தார் கமல்ஹாசன். பிறகு நான் எப்படி அவரது பிரச்சினைக்கு பொறுப்பேற்க முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

பிரதமரை கவர்ச்சி காட்டி நெளிய வைத்த டிவி தொகுப்பாளினி (படங்கள் இணைப்பு)

செர்பிய பிரதமரை பேட்டி கண்ட டிவி தொகுப்பாளினி, திடீரென கவர்ச்சிகரமான செய்கைகளை காட்டி அவரை நெளிய வைத்து விட்டார். பின்னர்தான் தெரிந்தது, இது விளையாட்டுக்காக செய்யப்பட்ட செட்டப் என்று.

பிரான்ஸிலிருந்து கடும்போக்கு இமாம்களை நாடுகடத்த திட்டம்

பிரான்ஸில் இருக்கும் கடும்போக்கு முஸ்லிம் இமாம்களை நாடுகடத்த இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மனிவல் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.பெண்களை மதிக்காத, எமது கலாசாரத்திற்கு எதிரான கருத்தை கொண்டிருக்கும், பிரான்ஸூடனான போராட்டத்திற்கு தயாராகும் அனைத்து வெளிநாட்டு மதப் பிரசாரகர்களும் எதிர்வரும் தினங்களில் நாடு கடத்தப்படுவர்” என பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பாவிலிருந்து தீவிரவாதத்தை முறியடிப்பது தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து பத்திரிகையின் கேலிச்சித்திரத்தால் சர்ச்சை

ஹிட்லரின் யூத அழிப்பு ஞாபகார்த்த தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான ‘தி சண்டே டைம்ஸ்’ இஸ்ரேல் தொடர்பில் வெளியிட்ட கேலிச் சித்திரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த கேலிச் சித்திரத்தில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பலஸ்தீனர்கள் உடலுக்கு மேலால் சுவர் எழுப்புவது போன்றும் அதற்கு சீமந்தாக அந்த உடல்களில் இருந்து வழியும் இரத்தத்தை பயன்படுத்துவது போன்றும் அமைந்துள்ளது.

முஹம்மது நபி

முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்ட சமூகம் அவரது போதனைகள் கொள்கைள் மட்டுமல்லாமல் அவரது குணநலன்கள அங்க அவையங்கள், நெளிவு சுளிவுகள், பேச்சு மூச்சுக்கள் என்று பலவற்றையும் கூர்மையாக கவனித்து துள்ளியமாக அடுத்த தலைமுறைக்கு அறிவித்தது. உலக வரலாற்றில் இது போன்று எந்த ஒரு தலைவரின் வாழ்க்கை குறிப்பும் பதிவு செய்யப்பட்டிருக்காது.

இதுவொரு விஸ்வரூபக் குழப்பம்

மதம் பிடித்த யானைகள் பல
மதம் பிடிக்காத யானைக்கு ஆதரவு என
மதம் பிடித்த யானைகளை தீண்டிப் பார்க்க
மதம் பிடிக்காத யானைகளெல்லாம் நகைக்க
மதம் பிடித்த யானைகள் பல
அர்த்தங்களின்றிய மகிழ்ச்சியில்...
இங்கு யானைகள் என்பது யானைகளே அல்ல!

இது கமல் ஹாசனின் பாணியில் கமலுக்காக விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான விஸ்வரூபக் குழப்பத்தின் இன்றைய நிலைமைகளே.

பேஸ்புக் சர்ச்சை : பாலுறவுக்கான துணையைத் தேடும் புதிய அப்ளிகேசன்!

மில்லியனைத் தாண்டி பில்லியன் கணக்கான பாவனையாளர்களைக் கொண்டுள்ள சமூகவலையமைப்பு பேஸ்புக்.

விமானமும் பாதை மாறி பறக்கும்..!


பாகிஸ்தானில், விமானியின் மகளை தரையிறக்குவதற்காக, திசை மாறி சென்ற விமானத்தால், சர்ச்சை எழுந்துள்ளது.

‘விஸ்வரூபம்’ விவகாரம் : புதிய கோரிக்கையுடன் கிளம்பிய முஸ்லீம் அமைப்புகள்!

‘விஸ்வரூபம்’ பிரச்சினையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க நடிகர் கமல் ஒப்புக் கொண்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் புதிதாக கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.

மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு

(பருத்தித்துறை)
வடமராட்சி கிழக்கு தாளையடி உடுத்துறைப் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்தார். நேற்றைய தினம் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் 7 பிள்ளைகளின் தந்தையாரான சின்னத்தம்பி இராஜசிங்கம் (வயது - 51) என்பவரே உயிரிழந்தவராவார்.

வரணியில் கத்தி முனையில் கொள்ளை!

வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (29.01.2013) 900,000 ரூபா பெறுமதியான நகைகள்  கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல