செவ்வாய், 2 நவம்பர், 2010

யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் இளவயதுக் கர்ப்பங்கள்

குடாநாட்டில் இப்போதெல்லாம் இள வயதுக் கருத்தரிப்புகள் பற்றிய செய் திகளையும். குப்பைதொட்டிகளுக்குள் குழந்தைகள் வீசப்படுகின்ற சம்பவங் களையும் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கமுடிகின்றது. அண்மையில் கூட பள்ளிப்படிப்பை இன்னும் பூர்த்தி செய்யாத மகளுக்கு தாய் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவத்தை நீங்கள் அறிய நேர்ந்திருக்கலாம். கல்வியறிவில் உயர்ச்சி யடைந்து, மனித விழுமியங்களில் மகோன் னத இடத்தை அடைந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்கிற நாம் இன்னமும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் குடும்ப வாழ்க்கைக்கு தயாராக முன்னரே அவர் களைத் தாயார்களாக்கி விடுவதில் அவ சரம் காட்டுகின்றோம். இத்தகைய இள வயதுத் திருமணங்கள் பெரும்பாலும் பெற் றோருக்குத் தெரியாமல் பருவ ஈர்ப்பின் காரணமாக இரகசியமாகவும், சிலவேளை களில் பெற்றோரின் சம்மத்ததோடும் நிகழ்ந்து விடுகின்றன. ஆனாலும் அதனால் பல பின் விளைவுகள் சமூகரீதியாகவும், உட லியல் ரீதியாகவும்(மருத்துவ ரீதியாகவும்) ஏற்படுவதை மறந்துவிடுகின்றோம். ஆண் களை விடவும் பெண்களே உரிய வயதை அடையமுன்னர் நிகழ்கின்ற இளவயது திரு மணங்களால் மகிழ்வான வாழ்வினைத் தொலைக்க வேண்டியவர்களாகின்றனர்.

பஹ்ரைனின் முதல் பெண் கவுன்சிலர் பாத்திமா

பஹ்ரைன் நாட்டில் முஹாரக் முனிசிபல் கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் பாத்திமா சல்மான் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் பஹ்ரைன் நாட்டின் முனிசிபல் முதல் பெண் கவுன்சிலர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாத்திமா. மேலும் வளைகுடா நாடுகளின் முனிசிபல் முதல் பெண் கவுன்சிலரும் பாத்திமா சல்மானே.

சாதனை மாணவர்களில் ஒருவராக தமிழ் சிறுமி!

ஜேர்மனியின் தேசிய மட்ட கல்விச் சாதனையாளர்களில் ஒருவர் என்கிற பெருமை இலங்கைத் தமிழ் மாணவியான வீரசிங்கம் துர்க்கா (வயது 17) என்பவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

ரிசானாவின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும்

சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக் கப்பட்ட சகோதரி ரிசானாவின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தார்மிகப் பொறுப்பு எமக் குண்டு.தமிழ் மக்களாகிய நாம் பட்ட துன்பங்கள், துய ரங்கள் ஏராளம். அதிலும் நாம் அனுபவித்த உயி ரிழப்புத் தரும் வேதனை சொல்லுந்தரமன்று.

பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டாலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடரும்!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான படுகொலை வழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபா கரன், அதன் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்கள் விடுவிக்கப் பட்டுள்ளபோதிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு இன்னமும் முடிபுக்கு வந்துவிடவில்லை என இராஜதந் திர வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கச் சிறைச்சாலை பற்றித் திடுக்கிடும் தகவல்

கியூபாத் தீவின் வட முனையில் அமெரிக்கா தீவிரவாதிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையை நிறுவியுள்ளது இது குவன்தனாமோ குடாச் சிறைச்சாலையை என்று அழைக்கப்படுகிறது அமெரிக்க ஐனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட இடம் என்று மறு பெயரும் அதற்கு உண்டு

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள்

கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல