அமெரிக்க இராஜதந்திரத் தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் பற்றிய பேச்சு உலக நாடுகளை இன்னும் ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறது.
வியாழன், 23 டிசம்பர், 2010
ஐ.நா நிபுணர் குழு இலங்கை மண்ணில் காலடிவைத்தால் நாடுதிரும்ப முடியாது
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவினர் இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்கக் கூடாது. மீறி வைத்தால் அவர்கள் நாடுதிரும்ப மாட்டார்கள் என எச்சரித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், பான் கீ மூனுக்கு எதிராக தீர்க்கமான முடிவுகளை எடுத்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
Labels:
இலங்கை
எம்ஜிஆர் - நினைவு நாள்
எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.
Labels:
இன்று
யாழில் இளம்பெண் மர்ம மரணம்
யாழ்ப்பாணம் வடமராட்சியில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டு பின்னர் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள இளம்பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்பே மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்திருக்கின்றது.
Labels:
யாழ் செய்திகள்
மகளை நரபலி கொடுத்து பரிகாரம் தேடினார் தாய்
இங்கிலாந்தில் வசிக்கும் சோமாலியாவை சேர்ந்த பெண் ஷானா பரூக்கி. வயது 35. லண்டனில் உள்ள தனது வீட்டில் 4 வயது மகளை திடீரென கத்தியால் குத்திக் கொன்றார். உடலைக் கிழித்து இதயம், நுரையீரல், குடல் என முக்கிய பாகங்களை வெளியே எடுத்த ஷானா, வீட்டை சுற்றி அவற்றை வீசினார். பிறகு, சடலத்தின் அருகே அமர்ந்து மத ரீதியான வழிபாட்டில் இறங்கினார்.
அவர் கத்தியுடன் ஒருமுறை வெளியே வந்ததை பார்த்த பாய் பிரண்ட், போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சோதனை நடத்தியதில் மத ரீதியான பரிகாரமாக கருதி, குழந்தையை கொன்று உடல் பாகங்களை வீட்டை சுற்றி வீசியது தெரிய வந்தது. ஷானாவை போலீசார் கைது செய்தனர். அவரது மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை நடத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவர் கத்தியுடன் ஒருமுறை வெளியே வந்ததை பார்த்த பாய் பிரண்ட், போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சோதனை நடத்தியதில் மத ரீதியான பரிகாரமாக கருதி, குழந்தையை கொன்று உடல் பாகங்களை வீட்டை சுற்றி வீசியது தெரிய வந்தது. ஷானாவை போலீசார் கைது செய்தனர். அவரது மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை நடத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
சவுதி அரேபிய நரக சிறையிலிருந்து மீண்ட இந்திய பெண் டாக்டர்
சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தவர் ஆஷிஷ் சாவ்லா. இவர் கடந்த ஜனவரி மாதம் முஸ்லிம் மதத்துக்கு மாறினார். மதம் மாறிய மறுநாள் இவர் மர்மமான முறையில் தூக்கத்திலேயே இறந்து கிடந்தார்.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முதன் முதலில் நடைபெற்ற நாள்
சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். சிறுநீரகம், அது தொடர்பான நோய்கள் ஆகியவை பற்றி ஆய்வு செய்யும் மருத்துவத் துறை சிறுநீரகவியல் எனப்படும்.
Labels:
இன்று
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





