வியாழன், 21 நவம்பர், 2013

25 எம்.பி. (MB) அளவுக்கு மேல் உள்ள பைல்களை அனுப்ப எந்த சேவையைப் பயன்படுத்தலாம்?

ஜிமெயில் மெசேஜுடன் இணைக்கப்படும் பைல் அல்லது பைல்களின் அளவு 25 எம்.பி.யைத் தாண்டுகையில், நாம் வேறு சேவையையே நாட வேண்டியுள்ளது. முதலாவதாக, கூகுளின் ஜிமெயிலிலேயே அத்தகைய ஒரு சேவை உள்ளது. 'Attach files' என்னும் ஐகானை அடுத்து கூகுள் ட்ரைவ் ஐகான் என ஒன்று உண்டு.

ஜி.பி.ஆர்.எஸ். (GPRS) என்றால் என்ன? கம்ப்யூட்டரில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது?

ஜி.பி.ஆர்.எஸ். (GPRS General packet radio Service) என்பது ரேடியோ அலைகள் சம்பந்தப்பட்டது. மொபைல் போன் பயன்பாடு அனைத்துமே, ரேடியோ அலைவரிசை களைப் பயன்படுத்தியே இயங்குகின்றன.

வேர்ட் டிப்ஸ்: பிரிண்ட் பிரிவியூவில் எடிட்

வேர்ட் டாகுமெண்ட் ஒன்று அச்சில் எப்படிக் காட்சி அளிக்கும் என்று காண, பிரிண்ட் பிரிவியூ என்ற வசதியை வேர்ட் தருகிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து பார்மட்டிங் வேலைகளையும் ஒரே நேரத்தில் காணலாம். நெட்டு வரிசைகள், பாராக்கள், ஹெடர் மற்றும் புட்டர் மற்றும் படங்கள் என அனைத்தையும் காணலாம். இப்படி பார்க்கும் போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ள நாம் விரும்பலாம். இதே தோற்றத்தில், திருத்தங்களையும் மேற்கொள்ள வசதி உள்ளது. ஆனால் எப்படி மேற்கொள்வது என்பதுதான் பலருக்குப் புரியாத புதிராய் உள்ளது. அதை இங்கு பார்க்கலாம்.

கூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐப் பயன்படுத்தி, கூகுள் அப்ளிகேஷன்களை இனிப் பெறுவது இயலாது என கூகுள் அறிவித்துள்ளது. இதற்கான தன் சப்போர்ட்டினை, கூகுள் நீக்கியுள்ளது. அவ்வாறு முயற்சி செய்திடும் பயனாளர்களுக்கு, அவர்களுடைய பிரவுசரை அப்டேட் செய்திடுமாறு, கூகுள் ஒரு செய்தியைக் காட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சப்போர்ட் நீக்கம், சென்ற நவம்பர் 6 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக் எல்லாரையும் பார்க்கலாம்

இன்னும் சில வாரங்களில், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்களை அனைவரும் பார்க்கலாம். தற்போது, அவர்கள் அனுமதிக்கும் நண்பர்கள் மட்டுமே, தளத்தினை அணுகி, தகவல்களைப் பார்க் கலாம்.

உங்கள் வசதிப்படி விண்டோஸ் 7

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கென மாறா நிலையில் சில வரையறைகளைக் கொண்டதாகவே நாம் பெறுகிறோம். இவற்றில் சில நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருக்கலாம். அவற்றை இப்படி செய்து, நிலை நிறுத்தினால் என்ன? என்ற கேள்வியுடன், அதற்கான வழிகள் அதில் உள்ளனவா என்று ஆய்வு செய்வோம். ஒரு சில பொதுவான எதிர்பார்ப்புகளை எப்படி மேற்கொள்வது என கீழே செயல்முறைகள் காட்டப்பட்டுள்ளன.

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகள்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக்கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது. பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்புவோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது.

விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11

சென்ற நவம்பர் 7 அன்று, தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் பதிப்பு 7ல் இயங்கும் வகையில், தன் பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11னை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விரைவில் இது தானாக அப்டேட் செய்திடும் வகையில் பயனாளர்களுக்குக் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். தாவடியில் பீடி சுற்றும் பெண்கள்! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் தாவடியைச் சேர்ந்த பாட்டாளிக் குடும்ப பெண்கள் பாரம்பரியம் பாரம்பரியமாக பீடி சுற்றுகின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

நண்பனின் சடலத்துடன் 13 வருட காலமாக வாழும் நபர் (படங்கள் இணைப்பு)

வீடு வாசலற்ற நபரொருவர் கல்லறையொன்றில் தனது ஆருயிர் நண்பனின் எலும்புக்கூட்டுடன் கடந்த 13 வருட காலமாக வாழ்ந்து வரும் விசித்திர சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.

கற்பூரவள்ளியின் மருத்துவ குணங்கள்

கற்பூரவள்ளி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாகும். இது ஒரு வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சலை தணிக்கும் மருந்தும் ஆகும்.

இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க இருமல் தீரும்.

பெண்கள் ஏன் அதிகம் சிரிக்கிறார்கள்

சந்தோஷம் தரும் எந்த விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் தெரியுமா?

கிழங்கு, கத்தரி புளிக்கறி

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 2

கத்தரிக்காய் - 2

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

தனியாத்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

புளி - சிறிதளவு

ஆண்களே ஈகோவை வெளிப்படுத்த வேண்டாம்

எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விடயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!.

கையில் சிப் உபகரணத்தை பொருத்திக் கொண்ட நபர் (படங்கள், காணொளி இணைப்பு)

அமெ­ரிக்க பீற்றர்ஸ்பேர்க் நகரைச் சேர்ந்த நப­ரொ­ருவர் பெரும் வலியை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அறுவைச் சிகிச்­சை­யொன்றை மேற்­கொண்டு டப்லட் கண­னி­யுடன் இணைப்பைக் கொண்ட பாரிய சிப் உப­க­ர­ண­மொன்றை தனது கரத்தில் பொருத்திக் கொண்­டுள்ளார்.

ஜப்பானிய நடிகரின் தோற்றத்தை கொண்ட ரோபோ அறிமுகம்

ஜப்பானிய நடிகர் கென் மட்ஸு டெயிராவை போன்ற முகத் தோற்றத்தைக் கொண்ட ரோபோவொன்று டோக்கியோ நகரில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

போலி திருமணம் செய்ய முயன்ற ஜோடி வசமாக பொலிஸாரிடம் சிக்கியது

நாடு கடத்­தப்­ப­டு­வதை தடுக்க அந்­நாட்டைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரை போலி திரு­மணம் செய்ய முயன்ற நைஜீ­ரி­யாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வச­மாக அதி­கா­ரி­க­ளிடம் சிக்கிக் கொண்ட சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்பெற்­றுள்­ளது.

கணவரது சடலத்திற்கு அருகில் ஒரு வருட காலம் உறங்கிய பெண்


தனது அன்­புக்­கு­ரிய கணவர் இறந்­ததால் பெரிதும் துய­ர­டைந்த பெண்­ணொ­ருவர், கண­வ­ரது சட­லத்தின் அருகில் ஒரு வருட காலம் படுத்து உறங்­கிய நெஞ்சை நெகி­ழ­வைக்கும் சம்­பவம் பெல்­ஜி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

டீ என்கிற தேநீர் – சூடு பறக்கும் சில உண்மைகள்

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பீகார் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஏழை குடும்பத்தில் பிறந்த நான், ரெயில்வே நிலையம் மற்றும் ஓடும் ரெயிலிலும் டீ விற்று இருக்கிறேன் என்று கூறினார்.இதைத் தொடந்து ஒரு கான்ஸ்டபிள் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது, டீ விற்றவரெல்லாம் பிரதமராக முடியாது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் கமான்ட் அடிக்க மோடி பதிலடியாக “டீ விற்றவரை நாட்டின் பிரதமராக கொண்டு வரலாமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டை விற்பதை காட்டிலும் டீ விற்பதே சிறந்தது.” என்றார் இப்படி சூடு பறக்கும் தேநீர் பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `

உலக கழிவறை தினம் – நவம்பர் 19

உலக அளவில் 260 கோடி நபர்கள் (உலக மக்கள் தொகையில் 40%)இப்போது கழிவறை உள்ளிட்ட அடிப்படை இல்லாமல் இருக்கிறார்கள்.இதில், 98 கோடி பேர் சிறுவர் & சிறுமியர்கள். இவர்கள் வயல்வெளிகள், ஆறு மற்றும் குளக்கரைகள், கடற்கரைகள்,தெரு ஓரங்களை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் பரவும்நோய்கள் கணக்கில் அடங்கா..! இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள கழிவறை தொடர்பான 15 அமைப்புகள் 2001ல் கூடி நவம்பர் 19 ஆம் தேதியை உலக கழிப்பறை தினம் என (World Toilet Day, November 19 ) அறிவித்தன.

தொடுதிரை உபகரணங்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா?!வராதா??

டச்ஸ்கிரீன் எனப்படும் கொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.குழந்தைகள் இது போன்றதொடுகை உணர்வுடைய பல் உபகரணங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களது கைககளால் எழுதுவதற்கான ஒத்துழைப்பை வழங்கக் கூடிய தசைக் கட்டமைப்பு விருத்தி செய்யப்படாமல் போவ்தற்கான சாத்தியம் அதிகரிப்பதாக மேரிலான்ட்டிலுள்ள கற்றல் மற்றும் சிகிச்சை நிலையத்தினைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான லிண்ட்ஸே மார்கோலி தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 1

இந்தியா 1947 ஆகஸ்டு 15இல் விடுதலை பெற்றது. அரசமைப்புப் பேரவை 1946 டிசம்பரில் தொடங்கி, 1950 டிசம்பர் 26இல் அரசமைப்புச் சட்டத்தைத் தந்தது. அதுவரை, சட்டப்படி, ஆங்கில ஏகாதிபத்தியக் காமன்வெல்த்திற்கு உட்பட்ட ஒரு பகுதியாகத்தான் இந்தியா இருந்தது.1949 ஏப்ரல் 27இல் லண்டனில் கூடிய காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ஜவாஹர்லால் நேரு சுதந்திர இந்தியா காமன்வெல்த் அமைப்பில் சேருவது குறித்து சில வரைமுறைகளை வற்புறுத்தினார்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: புலிகளின் இறுதி யுத்தம் மூடுமந்திரமாக இருந்தது ஏன்?

 
அத்தியாயம் 10

இலங்கை கிழக்கு மாகாணம் திரிகோணமலை மாவட்டம் மூதூர் பகுதியில் விடுதலைப் புலிகள் தொடங்கிய (ஆம். சண்டையை தொடங்கியது அங்கிருந்த புலிகள்தான் என்பதை தற்போது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளிடம் இருந்தே உறுதி செய்துகொள்ள முடிகிறது) சண்டையில் முதல் இரு நாட்கள் புலிகளுக்கே வெற்றி என்பது போன்ற போக்கு காணப்பட்ட நிலையில், நாம் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்ட செல்வநகர் யுத்தத்திலேயே முதல் தடவையாக புலிகள் இழப்புக்களை சந்திக்க தொடங்கினர்.

கிளிநொச்சி கிராமங்களில் கருத்தடை மேற்கொண்டது உண்மையே ஆனால் கட்டாயகருத்தடை அல்ல: திருமதி யூட்!

இலங்கை::கிளிநொச்சி கிராமங்களில் கருத்தடை மேற்கொண்டது உண்மையே ஆனால் கட்டாயகருத்தடை அல்ல என்கிறார் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட்

சம்பந்தனின் கார் கதவை திறந்து தோளிலும் கழுத்திலும் குத்து- வீடியோவை பாருங்கள்

கடந்த 15ம் திகதி பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, அவரை யாழ்.பொதுநூலகத்தில் சந்தித்து விட்டு தனது காரில் வெளியேறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கார் கதவை திறந்து அவரை இறங்கடா வெளியே என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கத்தியதுடன் அவர் மீது சிலர் கைகளால் குத்தியுள்ளனர்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்று வெளிப்படுத்துவதற்கான சில டிப்ஸ்...

ஒரு பெண்ணின் மீது ஆணுக்கோ அல்லது ஆணின் மீது பெண்ணுக்கோ ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு தான். இது இயற்கையின் உலகளாவிய விதியாகும். ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரிடம் காதலில் விழுவது சுலபமாக நடக்க கூடியது தான். இது அனைவருக்கும் ஏற்பட கூடிய ஒரு உணர்ச்சியே. ஆனால் பல நேரங்களில் இது ஒரு தலை காதலாகேவே விளங்குகிறது; அதாவது ஒன்று அந்த பெண்ணுக்கு மட்டுமே அந்த பையனின் மீது காதல் இருக்கும், அல்லது பையனுக்கு மட்டுமே அந்த பெண்ணின் மீது காதல் இருக்கும். இருவருக்குமே அந்த காதல் உணர்வு ஒரே மாதிரி வர வேண்டும் என்ற வசியம் இல்லை தானே. இருவரில் ஒருவருக்கு காதல் கத்திரிக்காய் என்று இதன் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.

ஸ்ருதிஹாஸன் உடன் பிரபல நடிகர் இருந்தாரா?

ஸ்ருதி ஹாஸனைத் தாக்கியது யார்... ஏன் போலீசில் புகார் தரவில்லை... உடன் பிரபல நடிகர்?

மும்பை: நடிகை ஸ்ருதிஹாசனை வீடு புகுந்து தாக்கிய மர்ம மனிதன் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஸ்ருதிஹாஸன் இதுபற்றி போலீசில் புகார் செய்யாதது ஏன் என்றும் போலீசார் கேட்டுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல