வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

11 முறை திருமணத்தை தள்ளிவைத்த மணமக்கள்

இங்கிலாந்தை சேர்ந்த மணமக்கள் கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அது கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இப்படி 10 முறை திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. கடைசியாக 11-வது முறை திருமணம் நடத்த தேதி குறிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பத்மலட்சுமி மீது முன்னாள் கணவர் வழக்கு

சென்னையை சேர்ந்த அமெரிக்க மாடலும், அமெரிக்க டி.வி.சேனல் தொகுப்பாளருமான பத்ம லட்சுமி எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து கொண்டதன் மூலம் பிரபலம் ஆனார். அவரிடம் இருந்து பிரிந்த பிறகு இவர் டெல் கம்ப்யூட்டர் தொழில் நிறுவன அதிபரான மைக்கேல் டெல்லின் தம்பியும் முதலீட்டு நிறுவன அதிபருமான ஆடம் டெல்லை திருமணம் செய்து கொண்டார். இந்த பந்தம் மூலம் இவருக்கு மகள் பிறந்தாள். இந்த குழந்தைக்கு இப்போது 11 மாதம் ஆகிறது.

தனது 3 பிள்ளைகளை நிர்வாணமாக உணவோ நீரோ இன்றி சிறை வைத்த தாய்

தனது 3 பிள்ளைகளையும் ஆடைகளோ உணவோ குடி நீரோ இன்றி எதுவித வசதியுமற்ற அறையில் சிறை வைத்த தாயொருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கேட்ஷெட் எனும் இடத்தில் வசித்து வந்த சிறிது மனநலப் பாதிப்புக்கு உள்ளான டானியலே ஹெண்டர்ஸன் (28 வயது) என்ற இந்தப் பெண், தனது 3 பிள்ளைகளையும் மாடி அறையொன்றில் அடைத்து வைத்துள்ளார்.

இந்தியா ஒரு ‘பூச்சிய’ நாடு!

நேரு பெர்ட்ரண்டு ரஸ்ஸலைச் சந்தித்தபோது ‘பூச்சிய நாட்டிலிருந்து வருகின்ற உங்களை நான் வரவேற்கிறேன்’ என்றார் ரஸல். ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருகின்றவர் நீங்கள் என்று ரஸல் கூறுவது போல இருந்தது. நேரு ஒரு கணம் திகைத்தார்.

பெற்றோல்

வாகனம் ஓட்ட மட்டுமா பெற்றோல் உதவுகிறது
பல்வேறு பொருட்களை தயாரிக்கவும் பயன்படும் பெற்றோல்

எரிபொருட்களில் தான் இன்று முழு உலகமும் இயங்குகிறது என்றால் அது மிகையல்ல. பூமியின் பல்லாயிரம் மீட்டர் ஆழத்தில் எப்பொழுதோ மண்ணுக்குள் மக்கிப்போன தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளில் இருந்து உருவானதே மசகு எண்ணெய். இதிலிருந்தே பெற்றோல், டீசல் என பல்வேறு எரிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது பலரும் தெரிந்ததே.

கடல் நீர் எப்படி உப்பானது ?

கடலில் இருந்து பெறப்படும் உப்பு நீரைக் கொண்டு உப்பு தயாரிக்கப்படுவதை அனைவரும் அறிவோம். ஆனால் கடல் நீர் எப்படி உப்பானது என்பது பலருக்குத் தெரியாது.

ஏப்பம் எதனால் வருகிறது?

நாம் உணவு உட்கொள்ளும் பொழுது, உணவு, தண்ணீருடன் காற்றையும் சேர்த்து விழுங்கி விடுகிறோம். அதோடு ஜீரணமாகும் சமயத்தில் வெளிப்படும் வாயுக்களும் சேர்த்துக்கொண்டு வயிற்றில் ஒரு அழுத்தம் ஏற்படுத்தும்.

விபரீதங்களை ஏற்படுத்தும் தூக்கத்தில் நடக்கும் பழக்கம்

நம்மில் சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பல்வேறு விபரீதங்கள் நடப்பதுமுண்டு.

சிலர் மட்டும் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்.

பல்நோயாளிகளின் வலியை மறக்கச் செய்ய லோ கட் ஆடைகள் (படங்கள், காணொளி இணைப்பு)

ஜேர்மனியைச் சேர்ந்த பெண் பல் மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக  ' லோ கட்' உடைகளை அணிந்து பணியாற்றும் உத்தியை கையாள்கிறார்.

எதுவித பாதுகாப்பும் இன்றி 9,908 அடி உயரத்தில் சாதனை (படங்கள் இணைப்பு)

சுவிட்ஸர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 9,908 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பி இணைப்பில் நடந்து பிரெடி நொக் என்பவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

விலைமாதர் படங்களைப் பார்த்துச் சிக்கிய இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர் (படங்கள் இணைப்பு)

இத்தாலியில் பாராளுமன்ற விவாதத்தின் போது தனக்கு புதிதாக வழங்கப்பட்ட ஐ-பேட் கணனியில் விலை மாதர்களின் புகைப்படங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் புகைப்படமானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல