ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017
நோர்வே புலம்பெயர் புலி தலைவர் நெடியவனை ஸ்ரீலங்காவிடம் கையளிக்குமா?
பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஊடக நேர்காணலில் “உங்கள் முதல் இராணுவ நடவடிக்கை எது?” என்று வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிளalfred்ளை பிரபாகரன் “அல்பிரட் துரையப்பா” என்று பதிலளித்தார். பிரபாகரன் நிச்சயமாக யாழ்ப்பாண குடாநாட்டில் வைத்து ஜூலை 27,1975ல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபலமான மேயரும் மற்றும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினருமான அல்பிரட் தங்கராஜா துரையப்பா அவர்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். பிரபாகரன் மற்றும் கலாபதி,கிருபாகரன் மற்றும் சற்குணம் என்கிற ஏனைய மூவரும்தான் பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்துக்கு முன்பாக நடைபெற்ற அந்த குரூரமான படுகொலைக்கு பொறுப்பானவர்கள்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




