செவ்வாய், 27 மே, 2014

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் சாதாரணமாகத் தான் இருக்கும். ஏனெனில் அந்த அறிகுறிகள் அனைத்தும் ஒவ்வொருவரும் சாதாரணமாக அனுபவிப்பவையாக இருக்கும். இருப்பினும் ஒருவர் குறைவான இரத்த அழுத்தத்தில் இருந்தால், அவர்கள் மன அளவிலும், உடலளவிலும் வலுவிழந்தவர்களாக இருப்பார்கள். இந்த குறை இரத்த அழுத்தத்தை ஹைப்போ டென்சன் என்றும் அழைப்பார்கள்.

ஈழம்: சவக்குழிக்குப் போன "13வது அரசியல் சாசன" திருத்தத்துடன் மல்லுக்கட்டும் மோடி அரசு!!

ஈழத் தமிழர் பிரச்சனையில் கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே சவக்குழிக்குப் போய்விட்ட இலங்கையின் 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்துதலையே புதிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசும் கூட ஈழத் தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக முன்வைத்துக் கொண்டிருப்பது பிழையான அணுகுமுறை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

காரில் ஏறி உட்கார்ந்ததுமே பொலபொலவென்று விஜயகாந்த் கண்ணிலிருந்து கொட்டிய தண்ணீர்...!!

மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி வரை குடும்பத்தோடு போயும், பதவியேற்பு விழாவில் விஜயகாந்த் போகாமல் விட்டதற்கான ஒரு பரபரப்புக் காரணத்தை அவரது கட்சியினர் கூறியுள்ளனர்.மச்சான் சுதீஷுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற விசனத்தில்தான் பதவியேற்பு விழாவுக்குப் போகாமல் விஜயகாந்த் புறக்கணித்து விட்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

குடிக்க தடை விதித்த கணவன்... மனமுடைந்த 24 வயது மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை: சென்னையில், மது அருந்தக் கூடாது எனக் கணவன் தடை விதித்ததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

காதலனுடன் ஓடிப்போன பெண்ணை கோர்ட்டுக்கு வெளியே கல்லால் அடித்து கொன்ற குடும்பம்

லாகூர்: அத்தை மகனை கல்யாணம் கட்டிக்கொள்ளாமல் வேறு ஒருவரை திருமணம் செய்த பெண்ணை அவரது தந்தை, சகோதரன் மற்றும் உறவினர்கள் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தில் இந்திய சிறுமியின் உயிர் காக்க அவசரமாக ரத்தம் தேவை

குவைத்: குவைத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு அவசரமாக ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது.

யாழ்ப்பாண அரசருக்கு மஹிந்த அரசு அங்கீகாரம்!

ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த யாழ்ப்பாண அரசர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவை இலங்கை அரசு ஏற்று அங்கீகரித்து உள்ளது.

நரேந்திர மோடியின் அமைச்சரவை சகாக்கள் முழு பயோடேட்டா

டெல்லி: டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள வளாகத்தில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாட்டின், 15வது பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதையடுத்து, பா.ஜ.க தலைவர், ராஜ்நாத் சிங், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களான, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே உள்ளிட்ட 45 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல