புரட்சிகர பெண் விடுதலை எல்லாம் ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியமாகும். ஆசிய கண்டத்தை சேர்ந்த, அதிலும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பெண்கள் எழுச்சியுற மாட்டார்கள். அவர்கள் பழமைவாதத்தில் ஊறியவர்கள் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் பகுதியாகவிருந்த உஸ்பெகிஸ்தானில் நடந்த பெண் உரிமைப்போர் பற்றி எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறார்கள்? இதுவரை உலகில் எந்தப் பகுதியிலும், பெருந்தொகையான பெண்கள் தமது உயிரைக் கொடுத்து போராடிய வரலாறு, உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. 1927 க்கும் 1929 க்கும் இடைப்பட்ட இரண்டு வருடங்களில் மட்டும், சுமார் இரண்டாயிரம் பெண்கள், இந்த உரிமைப் போரில் கொல்லப் பட்டார்கள்!
புதன், 4 செப்டம்பர், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


