செவ்வாய், 25 மார்ச், 2014

விமானம் கடலில் வீழ்ந்தது என்று அறிவிக்க மலேசிய அரசுக்கு ‘ஏதோ நிர்ப்பந்தம்’ காரணம்?

 விமானம் எப்படி இங்குவரை வந்தது?

மலேசிய விமானம் இந்தியக் கடலில் வீழ்ந்தது என மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளதை, நாம் விசாரித்தவரை கனேடிய, மற்றும் அமெரிக்க ஏவியேஷன் வட்டாரங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 56

விடுதலைபுலிகளை பிடிக்க சி.பி.ஐ. ஒரு திட்டம் போட, ‘தமது பாணியில்’ சுற்றி வளைத்த போலீஸ்!

அத்தியாயம் 56


மறுநாள், கன்னடப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் முதட்டி பிரூட்டா ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் தற்கொலைகள் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. அந்த சமயத்தில் ரங்கநாத் கோனானகுண்டேயில் வாடகைக்கு எடுக்கப்பட்ட புதிய வீட்டில், சிவராசன் மற்றும் விடுதலைப்புலிகளுடன் தங்கியிருந்தார்.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 57

விடுதலைபுலிகளை உயிருடன் தப்பி செல்ல விடுங்கள் என்றார் சி.பி.ஐ. இயக்குநர் விஜய் கரன்!

அத்தியாயம் 57

ராஜிவ் கொலை புலனாய்வில் பிரதான திட்டமிடலை செய்தவர் என கருதப்பட்ட சிவராசன் இருக்கும் வீட்டை, சி.பி.ஐ. புலனாய்வுப்படை, கறுப்புப் பூனைப்படையினர், மற்றும் கர்நாடகா போலீஸ் சூழ்ந்து கொண்ட விபரத்தை கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம்.

ஜெனிவாவில் பிளவுபட்டு நிற்கும் தமிழர் தரப்பு


ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் சமகாலத்தில் கடந்த வியாழக்கிழமை ( மார்ச் 20) ஐக்கிய நாடுகள் சபை உலக மகிழ்ச்சி தினத்தையும் கொண்டாடியது.உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஒன்றையும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருந்தது.

கடனட்டை மோசடியில் கை தேர்ந்த ஈழ தமிழ் அகதிகள்!

சர்வதேச கடனட்டை மோசடிச் சூத்திரதாரியான இலங்கைத் தமிழர் ஜயந்தரன் தம்பபிள்ளை - வயது 28 என்பவர் இம்மோசடிகள் மூலம் கிடைத்த பணத்தில் பல இலட்சம் ரூபாயை இந்தியாவில் செங்கல்பட்டு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ள அகதி முகாம்களை சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு விநியோகித்து உள்ளார் என்று தெரிகின்றது.

சிறையில் அடைபட்டுள்ள கணவரைப் பார்க்க நிர்வாணமாக நடந்து வந்த பெண்


ரெஸ்டன், அமெரிக்கா: அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்க்க நிர்வாணமாக வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

அமெரிக்காவில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர விரும்பும் அலாஸ்கா மக்கள்

அலாஸ்கா: கிரிமியாவை தங்களுடன் ரஷ்யா சேர்த்துக் கொண்டது போன்று தங்களையும் அமெரிக்காவிடம் இருந்து பிரித்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அலாஸ்கா மக்கள் விரும்புகின்றனர்.

உயிரின் மதிப்பு கேவலம் 3 லட்சமா?

”விமானத்தின் மேல் பழியைப் போட்டு எங்கள் உறவுகளை கொன்று மூழ்கடித்துவிட்டது மலேசியா” உறவினர்கள் கதறல்

கோலாலம்பூர்: "விமான விபத்திற்கு மலேசியாதான் முக்கிய காரணம்.மலேசிய அரசாங்கம்தான் எங்களது உறவுகளை அநியாயமாக கொன்றுவிட்டது.இறந்த எங்களது உறவினர்களை திருப்பி தாருங்கள்" என்று விமான பயணிகளின் உறவினர்கள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

"குட் நைட் MH 370"

துக்கத்தை வெளிப்படுத்த கருப்பு நிற முதல்பக்கம்- மலேசிய செய்தித்தாள்கள்

கோலாலம்பூர்: மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய செய்தித்தாள்கள் இன்று கருப்பு நிறத்தில் முதல் பக்கத்தை அச்சிட்டு தங்களது துக்கத்தை வெளி்படுத்தியுள்ளன.

Newspaper apologises for showing Obamas as apes

A Belgian newspaper apologised Monday following outcry over an image showing US President Barack Obama and First Lady Michelle Obama with their faces photoshopped to look like apes. The image was printed alongside another that implies President Obama sells marijuana.

மலேசிய விமான புலனாய்வு: ரேடியோவில் பைலட் பேசாமல், கோ-பைலட் பேசியது ஏன்?

“மாயமான மலேசிய விமானம் இந்தியக் கடலின் தென் பகுதியில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது” என்ற மலேசியப் பிரதமரின் அறிவிப்பு நேற்று வெளியான போதிலும், இந்த விமானம் மாயமானது எப்படி என்ற மர்மம் இன்னமும் தொடர்கிறது.

புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை இரத்தம் தோய்ந்த வாளுடன் நின்று எழிலன் அச்சுறுத்தினார் - புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கர்ணன்

வடமாகாண சபையின் உறுப்பினர் ஆனந்தி சசீதரனின் கணவன் எழிலன் ஒரு ஈவிரக்கமற்ற எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதியாக இருந்து 2009ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவடையும் இறுதி நாட்களில் இராணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவி தமிழ் மக்களுக்கு கொடுமை இழைத்ததை தான் நேரில் கண்டதாக எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரான யோ.கர்ணன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

தேவியன் தொடர்பில் தகவல் கோரும் பொலிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் தேவியன் என்று அறியப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தர்மபுரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: உண்மையிலேயே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புத்துயிர்ப்பு உள்ளதா? (2)



நெடியவன்

பூந்தோட்டம் முகாமிலிருந்து ஆளும் தரப்பு அரசாங்க தமிழ் அங்கத்தவjeyakumariர் ஒருவரின் உதவியுடன் வெளிவந்த கோபி, பின்னர் கட்டாருக்குச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த நட்டில் சிலகாலம் வேலை செய்தபின் கோபி ஐரோப்பாவுக்குச் சென்றார். ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பரவலாக பயணம் செய்த அவர் நோர்வேக்கும் சென்றார். இப்பொழுது சந்தேகிக்கப்படுவது என்னவென்றால், ஐரோப்பாவின் முன்னணி எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளரும் தற்பொழுது தன்னைப்பற்றிய குறைந்தளவு சுயவிபரங்களுடன் உள்ள உயர்மட்ட தலைவருமான நெடியவன் மற்றும் அவரது சிரேட்ட உதவியாளர்களான இரும்பொறை மற்றும் நந்தகோபன் ஆகியோரை கோபி தனது சொற்ப கால ஐரோப்பிய வாசத்தின்போது சந்தித்திருக்கலாம் என்று.

கர்ப்பிணியென்று ஊரை ஏமாற்றிய பெண்

தான் கர்ப்பிணியென்றும் 5 குழந்தைகளை கருவில் சுமப்பதாகவும் பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் உறவினர்களை ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலித்தலைவர்களை தேடி கிழக்கிலும் சுவரொட்டிகள்

புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபி எனப்படும் கசியன் மற்றும் நவநீதன் எனப்படும் அப்பன் ஆகிய இருவரும் தேடப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவலான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல