சனி, 30 ஜனவரி, 2010

MGR

பாசமுள்ள சகோதரிகள்

உண்மையில் இந்த சகோதரிகளின் அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வருகின்றது. நீங்களும் ஒரு முறை பார்த்து உங்களின் கண்ணீரையும் சிந்திக்கொள்ளுங்கள்.

இப்படி என்னை பயமுறுத்தலாமா?

எங்கும் மேயலாம்

இதுதான் தமிழ் கலாச்சாரமா?

உயில் எழுதுவது எப்படி?

ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).
உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களி
 ல் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

சாய்பாபாவின் மறுபக்கம்

உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பக்தர்களைக்கொண்ட சத்திய சாயிபாபாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஒரு மாயாஜால மந்திர தந்திரமேயொழிய அவர் ஒரு ஆண்டவனோ அல்லது ஆண்டவனின் அவதாரமோ கிடையாது என்பதனை BBC போதியளவு ஆதாரத்துடன் இந்த டொக்குமென்டரி (documentary film) படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் அவரின் மறுபக்கத்தையும் வெளியிட்டு முகத்திரையை கிளித்துள்ளார்கள். இப்படிப்பட்டவரா இந்த பாபா என்று இப்படத்தின் மூலம் அவரை இணங்காண முடிந்தது. இவரை கைதுசெய்து இவரிடம் அகப்பட்டுள்ள சிறார்களை இன்னமும் இந்திய அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இப்படத்தினை தந்தை பெரியார் திராவிடர்கழகம் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலேயே பார்க்ககூடியதாக செய்துள்ளார்கள். இப்படம் 3 பாகங்களைக்கொண்டது.

இப்படம் சுமார் 1 மணிநேரம்.

இப்படத்தினை பார்க்க விரும்புபவர்கள் இப்படியே இணையத்தில் பார்க்கலாம். பின்னர் பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்குகளையும் Bookmark செய்து வைத்து பின்னர் பார்க்கலாம். இதுதான் அந்த லிங்குகள்

1) http://www.dailymotion.com/swf/x4y3iy
2) http://www.dailymotion.com/swf/x4y4n1
3) http://www.dailymotion.com/swf/x4y5vb

இப்படத்தினை டவுன்லோட் செய்து சிடியில் பதித்து உங்கள் டிவியில் பார்க்க விரும்புபவர்கள் பிவரும் லிங்குகளை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளவும். டவுன்லோட் செய்ய youtube downloader ஐ பயன்படுத்தி டவுன்லோட் பண்ணி கொன்வேர்ட் பண்ணிக்கொள்ளவும். TV யில் பார்ப்பதற்கு மிகவும் தெளிவாக இருந்தது. நல்ல copy.

இதுதான் அந்த லிங்குகள்

http://www.dailymotion.com/video/x4y3iy_sai-baba-1_news
http://www.dailymotion.com/video/x4y4n1_sai-baba-2_news
http://www.dailymotion.com/video/x4y5vb_sai-baba-3_news

இப்படத்தினை தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் BBC யினரின் ஆங்கில படப்பிரதியை பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்கில் சென்று பாருங்கள் அல்லது டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இதுதான் அந்த லிங்

http://video.google.com/videoplay?docid=-3767740320034777862

மற்றும் இப்படத்தின் BBCயின் முழு Transcript ஐயும் படித்துப்பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்பண்ணவும்.




கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.

சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும்.

குறட்டையை கட்டுப்படுத்த வருகிறது புதிய கருவி

குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம்.
குறட்டை அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடி இருக்கும். உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்லவேண்டி வரும். இந்த நிலையை போக்க, பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது தற்கால விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி என்று கருதப்படுகிறது.

லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தீப்பெட்டி போன்று ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது, இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது. அப்போது, இதயத்திலிருந்து வெளியேறும் காற்று எந்த தடையும் இன்றி வெளியேறுகிறது. இதனால், குறட்டை நின்றுபோகும். இதில், பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் மூலம், நாம் படுக்கைக்கு செல்லும் போது ஆன் செய்தும், எழுந்திருக்கும் போது ஆப் செய்தும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த சாதனம் தற்போது பரிசோதனையில் இருந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால், தூக்கம் கெட்டு தவிக்கும் லட்சோப லட்ச மக்கள் பயன் பெறுவர்.

புகைத்தால் பார்வை பறிபோகும்

புகைத்தால் புற்றுநோய் மட்டுமல்ல பார்வையும் பறி போகிறதாம். சமீபத்திய ஆய்வின் எச்சரிக்கை இது.
தீய பழக் கங்கள் தீயைப்போல வேகமாகப் பரவுகின்றன. முலை முடுக்குகளிளெல்லாம் சிகரெட், பாக்கு வகைகள் விற்கும் பெட்டிக்கடை காட்சி அளிக்கின்றன. புகைப்பதால் ஏற்படும் தீமைகளும் நாம் அறியாதவைகள் இல்லை. இருந்தும் பலர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதைத்தான் இவை காட்டுகின்றன.

புகைக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பின்னாளில் பார்வையும் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது என்கிறது புதிய ஆய்வு.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக குழுவின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 2 ஆயிரம் முதாட்டிகளை ஆய்வு செய்தனர். (அங்கு ஆண்/பெண் பேதமில்லாமல் புகைப்பழக்கம் உண்டு) இவர்கள் 78 முதல் 83 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஆய்வு முடிவில் புகைப்பழக்கம் உடையவர்களுக்கு வயதான பிறகு பார்வை இழக்கும் ஆபத்து உயர்ந்திருந்தது தெளிவானது. இவர்கள் ஏ.எம்.டி. என்ற பார்வைக்கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஏ.எம்.டி. என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடாகும். மாக்யுலா எனப்படும் பார்வை செல்கள் மீண்டும் உற்பத்தி ஆவது 70 வயதுக்கு மேல் குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதில் புகைப்பழக்கம் உடையவர் களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

ஆய்வின்படி புகைப்பழக்கம் இல்லாதவர்களைவிட புகைப்பவர்களில் 11 சதவீதம் பேர் ஏ.எம்.டி. பாதிப்பால் பார்வை இழக்கிறார்கள்.

புகைப்பழக்கம் இருப்பவர்கள் 70 முதல் 80 வயதை கடக்கும்போது மற்றவர்களைவிட 5 மடங்கு வேகமாக ஏ.எம்.டி. பாதிப்புகள் ஏற்படுகிறது.
இத்தகைய கொடிய துன்பத்தைத் தரும் பழக்கத்தை ஆரம்பத்திலே கிள்ளி எறிவதுதான் சிறந்தது என்று டாக்டர்கள் மீண்டும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

பீர் குடித்தால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது

பீர் குடிப்பது ஆண்களின் உடல் நலத்தை பாதிக்காது என்ற கருத்து நிலவுகிறது. தற்போது இது பெண்களின் உடல் நலத்துக்கும் நல்லது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தினமும் ஒரு கோப்பை பீர் அருந்தும் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை ஜெர்மனியில் உள்ள ஹெய்டல் பர்க் கேன்சர் ஆய்வு மையம் நடத்தியுள்ளது. பீர் மதுபானத்தில் உள்ள சக்தி வாய்ந்த மூலக் கூறுகள் மார்பக புற்று நோயில் இருந்து பெண்களை காப்பாற்று வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக பீர் மது பானத்துக்கு மனமூட்டுவதற்காக ஒருவகை மலரை பயன்படுத்துவார்கள். அதில் உள்ள ஷான்தோகியூமோல் உடல் உறுப்பில் இருந்து டெஸ்போஸ்டெரோன் மற்றும் ஆஸ்ட்ரோஜெனை அதிக அளவில் சுரக்காமல் தடுக்கிறது.

அது பி.எஸ்.ஏ. என்ற புரோட்டீன் அதிக அளவில் உற்பத்தியாகாமல் தடுத்து நிறுத்துகிறது. அது மார்பக புற்று நோய் வராமல் பெண்களை பாதுகாக்கிறது. இந்த ஆய்வு தற்போதுதான் முதல் கட்டத்தில் உள்ளது. தொடர்ந்து நடைபெறும் ஆய்வின் மூலம் மார்பக புற்று நோய் மட்டுமின்றி புற்று நோய் வராமல் தடுக்க பீர் உதவும் என்று தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும்.

எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்க
 லாம் என்று அறிய வேண்டும்.

அதிக வேலை முளையை பாதிக்குமாம்!

இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.

வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

அவர்கள் மேலும் கூறும்போது, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.

நீங்களும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால்… பிரச்சினை உங்களுக்குத்தான்!

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது?

இறந்த முதியவர் சவப்பெட்டியில் இருந்து மீண்டும் எழுந்தார்

போலந்து நாட்டில் உள்ள கடாவைஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோசப் கூசி (Jozef Guzy வயது 76) தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனே அவருடைய மனைவி லுட்மிலா  (Ludmila) ஆம்புலன்சை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார்.

பின்னர் ஜோசப் கூசி உடலில் வெள்ளை துணியை சுற்றி மனைவியிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். உடலை வீட்டுக்கு கொண்ட வந்ததம் சவப்பெட்டிக்குள் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

ஜோசப் அடைபட்டு இருந்த சவப்பெட்டி

அப்போது சவப்பெட்டிக்குள் இருந்து முனகல் சத்தம் வந்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தெரியாமல் அங்கு இருந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். அடுத்த வினாடியில் சவப்பெட்டியை தட்டும் சத்தம் கேட்டது.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் சவப்பெட்டியை திறந்து பார்த்தனர். ஜோசப் கூசி உயிருடன் எழுந்தார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் திகைத்த அவரிடம் நடந்த விஷயங்களை கூறினார்கள்.

பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சில மணி நேரத்துக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

இதுபற்றி கூறிய ஜோசப் கூசி, நான் உயிர் பிழைத்தது ஒரு பானை தேனை சேகரித்து மகிழ்ச்சியுடன் திரும்பியது போல இருக்கிறது என்று வேடிக்கையாக கூறினார்.

இளைய தலைமுறைக்கு..!

-சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் டென்ஷன் ஆகிறீர்களா?


- பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுகிறீர்களா?


- எதற்கெடுத்தாலும் மூக்கு நுனியில் கோபத்தை கொண்டு வருகிறீர்களா?'

இத்தனைக்கும் ஆம் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சியுங்கள். இல்லாவிட்டால் இளம் வயதில்கூட `ஹார்ட் அட்டாக்' வரும் அபாயம் உள்ளது.

ஆத்திரப்படும் போது `ஸ்ட்ரெஸ்' அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. அட்ரினலின் சுரப்பி அதிக வேலை செய்கிறது. அதனால் இதய தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அப்படி கிடைக்காதபோது `ப்ளேட்லெட்ஸ்' என்ற பிசுபிசுப்பான திரவம் சுரந்து, ரத்தக்குழாய்களில் படிந்து, அதில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக் குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும்.

உணவு மற்றும் பழக்க வழக்க முரண்பாடே இதய பாதிப்பிற்கு அடிப்படை காரணியாக இருக்கிறது. ஆனாலும், மன அழுத்தம் ஆகும்போதுதான் அதிக பாதிப்பு இதயத்தில் ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் போன்றவற்றால் ரத்த அழுத்தம் ஏற்படுபவர்களைவிட ஆத்திரம் மற்றும் டென்ஷன் அடைபவர்களுக்குத் தான் மன அழுத்தம் அதிகம். மற்ற இதயநோயாளிகளை விட `டென்ஷன் பார்ட்டிகளை' நான்கு மடங்கு அதிகமாக இதயநோய் தாக்கும். அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ முன்வர வேண்டும்.

ஞாபகமறதியை தீர்க்கும் செல்போன் கதிர்வீச்சு!

செல்போன், செல்போன் கோபுரம் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு ஆபத்தானது. இது மனிதர்களுக்கு சில வியாதிகளை ஏற்படுத்தும் என்று அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு.

ஆனால் செல்போன் கதிர்களால் ஞாபக மறதி வியாதிக்கு தீர்வு கிடைக்கும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Alsheimer என்பது ஒரு ஞாபகமறதி வியாதியாகும். வயதானவுடன் தொற்றிக் கொள்ளும் ஞாபகமறதி இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

இதற்கு தீர்வு காணும் முயற்சியில், அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழக அல்சீமர் நோய்த்தடுப்பு மையம் ஆய்வு நடத்தியது. எலிகளில் இந்த வித பாதிப்புகளை ஏற்படுத்தி பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.

அப்போது எலெக்ட்ரோமேக்னடிக் முறையில் சோதனை செய்யப்பட்டபோது, அந்த கதிர்வீச்சு, ஞாபகமறதி வியாதியை குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறையில் பயன்படுத்தப்பட்ட கதிர்கள் செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சில் அதிகம் இருக்கும். எனவே செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஞாபகமறதி வியாதி தாக்க வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Amyloid Beta என்ற வேதிப்பொருள் குறைபாடுதான் Alsheimer ஞாபகமறதிக்கு காரணமாக இருக்கிறது.

செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்கள், மூளைசெல்களை தூண்டுவதால் ஞாபகமறதி பாதிப்பு உடையவர் களுக்கு அல்சீமரில் இருந்து முன்னேற்றம் கிடைக்கிறது.

எலிகளுக்கு தினமும் ஒரு மணி நேரம் வீதம் சுமார் 9 மாதங்கள் கதிர்வீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது Alsheimer பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. சித்தம் கலங்காத, நினைவுத்திறன் பாதிப்பு உடையவர்களுக்கு மட்டும் இந்த முறையில் தீர்வு கிடைக்கும். மனிதர்களுக்கும் இந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். பக்க விளைவுகள் பற்றிய விரிவான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது.

"உண்மையாகவே இது வினோதமாக ஏற்படும் அதிசயிக்கத்தக்க மாற்றம்'' என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தண்ணீருக்குள் குறிப்பெடுக்க...

Aqua Notes எனப்படும் `வாட்டர் புரூப் நோட்ஸ்' குறிப்பேடை குளியலறை முதல்கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தண்ணீர் பட்டாலும் எழுத்துக்கள் அழியாது. பேப்பரும் கிழியாது. இதற்கான விசேஷ பேப்பர் மற்றும் பென்சில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

குளிர்பானத்தில் `சார்ஜ்' ஆகும் நொக்கியா செல்போன்!

செல்போன்களின் ஒரே பிரச்சினை அவற்றை ஞாபகமாக `சார்ஜ்' செய்வதுதான். தொடர் பயணம் மேற்கொள்ளும்போதும், மின் இணைப்பு இல்லாத வெளியிடங்களுக்குச் சுற்றுலா செல்லும்போதும் `சார்ஜ்' இறங்கி செல்போன் தற்காலிகமாக உயிரிழந்துவிட்டால் சிரமம்.

இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு சீனாவைச் சேர்ந்த ஒரு வடிவமைப்பாளர், குளிர்பானத்தில் `சார்ஜ்' ஆகிக்கொள்ளும் செல்போனை வடிவமைத்திருக்கிறார்.
சிறிய `பென் டார்ச்' போல உள்ள இந்த செல்போனின் பின்புறத்தில் இனிப்பூட்டிய ஏதாவது ஒரு குளிர்பானத்தைக் கொஞ்சம் ஊற்றினால் போதும். உடனே செல்போன் `உயிர்' பெற்றுவிடும்.

இந்த செல்போனை உருவாக்கிய வடிவமைப்பாளர் டெய்சி ஜெங்க், ``ஒரு தனியார் செல்போன் நிறுவனத்துக்காக இயற்கைக்கு உகந்த (ஈகோ பிரெண்ட்லி) இந்த செல்போனை உருவாக்கியிருக்கிறேன். நான் மேற்கொண்ட ஆய்வில், செல்போனுக்கான மின் ஆதாரமாக பேட்டரியைப் பயன்படுத்துவது மிகவும் செலவுமிக்கது, அவற்றை உருவாக்குவதற்கு மிகுந்த மூல ஆதாரம் தேவைப்படுகிறது என்று கண்டுபிடித்தேன். பேட்டரி தயாரிப்பு, காலாவதியான பேட்டரியை அழிப்பது ஆகியவற்றால் மிகுந்த சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவேதான் இயற்கையான பேட்டரியாக குளிர்பானத்தில் செயல்படும் செல்போனை உருவாக்கினேன்'' என்று பெருமையோடு விளக்கிக் கூறுகிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல