சனி, 4 ஜூன், 2016
தமிழினியின் பார்வையில், கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு எல்.ரீ.ரீ.ஈ விரைவாகச் சரிந்தது 2
(பகுதி – 2)
கேணல் தமிழினி மார்ச் 2009ல், வன்னி கிழக்கு போர்முனையில் ஈடுபட்டிருந்த எல்லா அமைப்புகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்களும் சமூகமளித்திருந்த கடைசிக் கூட்டத்தை கையாண்டிருந்தார். அது ஒருகாலத்தில் வடக்கில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு வலயமாகக் கருதப்பட்ட புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு முகாமில் நடைபெற்றது, இந்தக் கூட்டம் இயக்கத்தின் மரபுவழி போராடும் திறன் உடனடி வீழ்ச்சி அடைந்திருப்பதை நன்கு வெளிப்படுத்தியது. தனது மூத்த சகாக்களை கலந்து கொள்ளும்படி அழைப்பனுப்பிய ஒரு இறுதி மாநாட்டில், பொட்டு அம்மான் ஒரு அதிசயத்தின் ஊடாகவே யுத்தகளத்தில் எல்.ரீ.ரீ.ஈ வெற்றியை அடைய முடியும் என்பதை ஏற்றுக்கொண்டார்.
கேணல் தமிழினி மார்ச் 2009ல், வன்னி கிழக்கு போர்முனையில் ஈடுபட்டிருந்த எல்லா அமைப்புகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்களும் சமூகமளித்திருந்த கடைசிக் கூட்டத்தை கையாண்டிருந்தார். அது ஒருகாலத்தில் வடக்கில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு வலயமாகக் கருதப்பட்ட புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு முகாமில் நடைபெற்றது, இந்தக் கூட்டம் இயக்கத்தின் மரபுவழி போராடும் திறன் உடனடி வீழ்ச்சி அடைந்திருப்பதை நன்கு வெளிப்படுத்தியது. தனது மூத்த சகாக்களை கலந்து கொள்ளும்படி அழைப்பனுப்பிய ஒரு இறுதி மாநாட்டில், பொட்டு அம்மான் ஒரு அதிசயத்தின் ஊடாகவே யுத்தகளத்தில் எல்.ரீ.ரீ.ஈ வெற்றியை அடைய முடியும் என்பதை ஏற்றுக்கொண்டார்.
Labels:
கட்டுரைகள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
தமிழினியின் பார்வையில், கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு எல்.ரீ.ரீ.ஈ விரைவாகச் சரிந்தது 1
image source: google Col. Vithusha
(பகுதி - 1சரணடையும் பொதுமக்களைச் சுட விதுஷா உத்தரவிட்டார்
மாலதி படைப்பிரிவின் தளபதி விதுஷா, கேணல் தமிழினி தன்னை நோக்கி நடந்து வருவதைக் கண்ட உடனேயே அழ ஆரம்பித்தார். இந்தச் சந்திக்கும் வாய்ப்பு கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதிக்கு கிழக்கே எஞ்சியிருந்த எல்.ரீ.ரீ.ஈ யின் கடைசிக் கோட்டைகளில் ஒன்றான சுகண்டிபுரத்தில் இடம்பெற்றது. கேணல் தமிழினி, விதுஷாவை மேற்கோள் காட்டி அவள் தன்னிடம் தெரிவித்ததாகச் சொல்லியிருப்பது, இயக்கத்தின் நடவடிக்கைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது தனக்கு சங்கடமாக இருக்கிறது என்று. இராணுவத்திடம் சரணடைய விரும்புவோரை முங்காலுக்கு கீழே சுடும்படி உயர்மட்ட தலைமையிடம் இருந்து தனக்கு உத்தரவுகள் கிடைத்து வருவதாக விதுஷா வெளிப்படுத்தினாள். அந்த கட்டளைகளையிட்டு அவள் ஆத்திரமடைந்து இருந்தாலும் நிலமையைப் பற்றி சில அங்கத்தவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தாள். அவர்கள் அவளிடம் எப்படி தங்கள் சொந்தங்களைச் சுட முடியும், அதைவிட நாங்களே எங்களைச் சுட்டுவிடுவது சிறந்தது என்று சொன்னார்கள்.
Labels:
கட்டுரைகள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




