2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதோடு, வீரச்சாவடைந்த போராளிகள் பலரின் வித்துடல்களையும் புலிகள் அவ்விடத்திலேயே விதைத்தார்கள். மிகவும் நேர்த்தியாக குழிகள் வெட்டப்பட்டு போராளிகளின் வித்துடல்களும், பொதுமக்களின் உடல்களும் புதைக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலுக்கு மேல் 2009ம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கூகுள் சட்டலைட் படத்தோடு, தற்போது எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவ்விடத்தில் புதைகுழிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த நிலத்தில் இருந்த புதைகுழிகள் பல அகற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. முள்ளிவாய்க்கால், ரெட்டமுள்ளிவாய்க்கால், மற்றும் புதுமாத்தளானில் இருந்த பல புதைகுழிகள் தற்போது அவ்விடத்தில் இல்லை.
புதன், 19 செப்டம்பர், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



