ஞாயிறு, 14 டிசம்பர், 2014

விஷ­மாகும் உண­வுகள்! ஆபத்­துக்கள் தெரி­யுமா?

கலர் கல­ரான பிளாஸ்டிக் டிபன் பொக்ஸில் உணவு கொண்டு செல்ல குழந்­தைகள் ஆசைப்­ப­டு­வார்கள்.

ஏனெனில் வித­வி­த­மான டிசைன், வண்­ணக்­க­லர்கள் என குழந்­தை­களை இந்த பிளாஸ்டிக் டிபன் பொக்ஸ்கள் வசீ­க­ரிக்கும்.

பள பளக்கும் கூந்தலுக்கு.....

பெண்களின் அழகுகளின் ஒரு பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக, அடர்த்தியாக இருந்தால் அழகு தேவதை தான். அன்றை நாட்களில் உள்ள மங்கைகளுடன் ஒப்பிடும் போது இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்ககூட போதிய நேரங்கள் கிடைப்பதில்லை. அதன் விளைவாக பிளவுப்பட்ட அடர்த்தியின்றி, கருமையில்லா கூந்தல் கிடைகிறது. தலைமுடி அடர்ந்து வளர சில டிப்ஸ்

தக்காளியால் மேம்படும் அழகு

உங்களுக்கு பிடித்த காய்கறிகளை பட்டியலிடுங்கள் என்றால், கண்டிப்பாக அதில் தக்காளிக்கு இடமிருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் காய்கறி தான் தக்காளி. அதனை சமையலில் சேர்த்தால் உணவிற்கு ருசி கொடுக்கும். சாறு நிறைந்த இந்த தக்காளியை அப்படியே கூட விரும்பி சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர். இது மட்டுமா? இதனை சாறு எடுத்து பருகவும் கூட பலரும் விரும்புவார்கள். பழச்சாறு கடைகளில் கிடைக்கும் வெகு சில காய்கறி ஜூஸ்களில் இதுவும் ஒன்று என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதையெல்லாம் தாண்டி தக்காளி சூப்பும் மிகவும் பிரபலம். ஹோட்டல்களில் உள்ள மெனுக்களில் தக்காளி சூப் இல்லாமல் கண்டிப்பாக இருக்காது. இப்படிப்பட்ட தக்காளியில் பலவித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளன. இதனால் நாவிற்கும் மட்டும் ருசி சேராமல், உட்புற உடலுக்கும் பலவித ஆரோக்கியங்கள் கிடைக்கும். அதை பற்றி பேச வேண்டுமானால் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். சரி அவ்வளவு தான் இதன் பயன் என்றால் அது தான் இல்லை.

மூக்கின் மேல் இருக்கும் சொர சொரப்பை நீக்க

ஆண்கள், பெண்கள் என அனை­வ­ருக்­குமே பட்­டுப்­போன்ற மென்­மை­யான சருமம் வேண்­டு­மென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு இடை­யூறை விளை­விக்கும் வண்ணம் பருக்கள், கரும்­புள்­ளிகள் போன்­றவை முகத்தில் ஏற்­பட்­டு­விடும். ஒரு­வேளை பருக்கள் முகத்தில் இல்­லாமல் இருந்­தாலும், மூக்கின் மேல் மற்றும் அதனைச் சுற்­றிய இடங்கள் மட்டும் சொர­சொ­ர­வென்று லேசாக கருப்­பா­கவும், வெள்­ளை­யா­கவும் இருக்கும். பருக்­க­ளையும், பருக்­களால் வந்த தழும்­பு­க­ளையும் நீக்க 20 வீட்­டுக்­கு­றிப்­புகள் கரும்­புள்ளி பிரச்சினை­யா­னது எண்ணெய் பசை சரு­மத்­தி­ன­ருக்கு தான் அதிகம் இருக்கும். அதிலும் சரு­மத்­து­ளை­களில் இருந்து வெளி­வரும் எண்ணை­யா­னது வெளி­யே­றாமல் அடைக்­கப்­படும் போது ஏற்­படும். சரு­மத்தின் மென்­மையைத் தடுக்கும் கரும்­புள்ளி பிரச்சி­னையை தடுக்க சமை­ய­ல­றை­யி­லேயே நிறைய பொருட்கள் உள்­ளன. இங்கு கரும்­புள்­ளியை நீக்க உதவும் சமை­ய­லறைப் பொருட்கள் என்­ன­வென்று கொடுக்­கப்­பட்­டுள்­ளன. அதைப் படித்து அதனை அன்­றாடம் செய்து உங்கள் முகத்தை பட்­டுப்­போன்று மென்­மை­யாக வைத்துக் கொள்­ளுங்கள்.

தர்மம் தலைகாக்கும்

பிச்சை என்­பது உழைக்க உடல் வலிமை இல்­லா­த­வர்கள், இரண்டு கண்­களும் தெரி­யா­த­வர்கள், வாய்­பேச முடி­யா­த­வர்கள், உடல் வலி­மை­யற்ற வித­வைகள், அநா­தைகள், வயோ­தி­பர்கள், கை கால் அற்­ற­வர்கள், கடும் நோய்­வாய்ப்­பட்­ட­வர்கள், தங்­களால் உழைத்து உண்­ப­தற்கு முடி­யாமை கார­ண­மாக தம் பசியைப் போக்­கு­வ­தற்கு வச­தி­ப­டைத்­த­வர்­க­ளிடம் பொருளோ, பணமோ இரந்து கேட்­பது என்று பொருள்­படும்.

அகச்­சி­வப்புக் கதிர்­களை கண்கள் காண இய­லுமா?

எம்மைச் சுற்றி எத்­த­னையோ மின்­காந்த அலைகள் விரைந்து செல்­கின்­றன. வானொலி, தொலைக்­காட்­சிக்­கான தக­வல்­களைக் கொண்­டு­வரும் வானொலி அலைகள், தகவல் பரி­மாற்­றங்­களைக் காவிச்­செல்­­பவை எனப் பல அலை ­நீளங்­களைக் கொண்ட மின்­காந்த அலைகள் அங்­கு­மிங்கும் பய­ணித்துச் செல்­கின்­றன. இயற்­கை­யான மின்­காந்த அலைகள் சூரி­ய­னி­லி­ருந்தும் வரு­கின்­றன. அவற்றில் அபா­ய­க­ர­மான சக்­தியைக் கொண்ட கதிர்ப்­புக்கள், அதா­வது புற­வூதாக் கதிர்கள் ஓசோன் படை­யினால் உறிஞ்­சப்­பட, ஏனை­யவை புவியை வந்­த­டை­கின்­றன.

எறிந்­த­வரை வந்­த­டையும் ‘பூமராங்’ இயக்­கத்தின் பின்­னணி

தென்­னிந்­திய தொலைக்­காட்சி விளம்­ப­ர­மொன்றில் ‘பூமராங்’ (Boomerang) இனை வீசி எறி­கையில் அது திரும்பி வரு­வதைக் காண்­பித்து குறிப்­பிட்ட துறையில் முத­லீடு செய்தால் அது முழு­மை­யாகத் திரும்­பி­வரும் என உரு­வ­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. விளம்­பரக் காட்­சிக்குப் பயன்­படும் இப் ‘பூமராங்’ என்­பது முன்­னைய கால மக்­களின் பறந்து இலக்கைத் தாக்­கி­விட்டு மீண்டும் திரும்பி வரும் ஆயு­த­மாகப் பயன்­பட்­டது. எவ்­வித இயந்­தி­ரங்­களும் உள்­ள­டக்­கப்­ப­டாத நிலையில் மரத்­தினால் ஆக்­கப்­பட்ட, எளி­மை­யாகத் தோன்றும் இந்த ஆயுதம் எப்­படி பய­ணித்துச் சென்று திரும்­பு­வது எவ்­வாறு சாத்­தியம் எனப் பலரும் எண்­ணி­யி­ருக்­கக்­கூடும்.

நாய்கள் குரங்­குடன் விளை­யா­டு­வதை பார்ப்­ப­தற்­காக மக்கள் படை­யெ­டுப்பு

உடுவில்: சுன்­னாகம் பேருந்து நிலையப் பகு­தியில் கடந்த சில நாட்­க­ளாக குரங்கும் நாயும் நெருக்­க­மாக நட்­புடன் விளை­யா­டு­வதைப் பார்ப்­ப­தற்­காக இப்­பி­ர­தே­சத்தை நோக்கி மக்கள் படை­யெ­டுத்து வரு­கின்­றனர்.

சுமார் 25 வரு­டங்­க­ளாக சிறை­வாசம் அனு­ப­வித்த நபர் வீடு திரும்­பினார்

உடுவில், குண்டு வெடிப்பின் பின்னர் காணாமல் போன நிலையில் சுமார் 25 வரு­டங்­க­ளாக சிறை­வாசம் அனு­ப­வித்த நபர் ஒருவர் நேற்று முன்­தினம் மீண்டும் தனது சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளார். சுன்னாகம் பெற்றோல்செற் ஒழுங்கையைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் (வயது 53) என்பவரே இவ்வாறு மீண்டும் சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளார்.

14 ஆண்டு கால உண்ணாவிரதம்: விடுதலை ஆவாரா இரும்புபெண்?

இந்­தி­யாவில் 14 ஆண்­டு­க­ளாக உண்­ணா­வி­ரதம் இருக்கும் ஐரோம் ஷர்­மிளா விரைவில் விடு­தலை ஆவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல