மண்டையோடும் அதன் கீழ் குறுக்கு வடிவிலான இரண்டு எலும்புகளும் கொண்ட குறியீடு அபாயத்தை உணர்த்துவதாகும். குறித்த இடத்தில் ஏற்படக்கூடிய அபாயத்தை காட்டுவதற்கு இந்த மண்டை ஓட்டுச் சின்னமே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், நம் தமிழ் மண்ணில் இந்த மண்டையோடும் எலும்புக் கூடும்தான் எங்கள் இனத்தில் உயிரிழந்தவர் யார் என்பதை அடையாளம் காட்டுவதற்கான ஒரே அடையாளம்.
வெள்ளி, 14 மார்ச், 2014
காணாமல் போவதென்ன?
பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும் "காணவில்லை' சுவரொட்டிகளைப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சம் துணுக்குறுகிறது. இவர்கள் எல்லாம் எப்படி காணாமல் போக முடியும்? மனிதர்கள், காட்டில் காணாமல் போகலாம், நாட்டில் காணாமல் போகலாமோ? இவர்கள் காணாமல் போக எது காரணமாக இருந்திருக்கும்? "தேடுவதற்கு யாருமற்றவர்கள் காணாமல் போவதில்லை' - எங்கோ படித்தவரி, எட்டிப்பார்க்கிறது.
Labels:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



