வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

லெபனானில் இலங்கை பணிப் பெண் மாடியிலிருந்து விழுந்து மரணம்?

லெபனான் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாகச் சேவையாற்றிக் கொண்டிருந்த அநுராபுரம் சிராவஸ்திபுர பகுதி குடும்பப் பெண்ணொருவர் மாடிக்கட்டிடமொன் றிலிருந்து கீழே வீழ்ந்து மரணித்துள்ளது பற்றி இலங்கையின் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தமக்கு அறிவித்துள்ளதாக இப் பெண்ணின் தாய் ஆர். ஏ. சரோஜினி தெரிவித்தார்.

சித்திரவதைக்குள்ளான பெண்ணுக்கு 4 மணிநேர சத்திரசிகிச்சை

சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாக் கப்பட்டு இலங்கை வந்த பெண் நேற்று மாத்தறை கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் 4 மணிநேரம் சத்திர சிகிச்சைக்குள்ளாக் கப்பட்டார். அவரது உடலிலிருந்து 2 அங்குல ஆணிகள் 12 மற்றும் 2 1/2 அங்குல ஆணி ஒன்றும், மூன்று குண்டூசிகளும் அகற்றப் பட்டன. உடலில் மீதமுள்ள ஆணிகளை அகற்றுவதற்காக மீண்டும் ஒரு சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளதாக கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரி டொக்டர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல